Tuesday, November 08, 2005

பள்ளிவாசல்கள் ஏன்?

தெருக்களில் பள்ளிவாசல்கள் கட்டுமாறும், அவற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும், அவற்றில் நறுமணம் கமழச் செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவுத் மற்றும் திர்மிதீ. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூதர்களை அல்லாஹ் அழிக்கட்டும்! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம் ''கிறிஸ்தவர்களையும்'' எனும் சொல் முஸ்லிமில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.


மேலும், ''அவர்களில் (யூதர்கள் கிறிஸ்தவர்களில்) ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டால் அவருடைய அடக்கஸ்தலத்தின் மீது பள்ளிவாசல்கள் கட்டி விடுவார்கள். இவர்களே படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

''நபி(ஸல்) அவர்கள் குதிரைப் படை ஒன்றை அனுப்பினார்கள். அவர்கள் ஒருவரைக் கொண்டு வந்து பள்ளிவாசலின் தூண்களில் ஒரு தூணில் கட்டிப் போட்டார்கள்'' (நீண்ட ஹதீஸின்சுருக்கம்) என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தை உமர்(ரலி) அவர்கள் கடந்து சென்ற போது அவர் பள்ளிவாயிலில் கவிதை படித்துக் கொண்டிருந்தார். உமர்(ரலி) அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தார்கள். (அதற்கு) அவர், ''உங்களைவிடச் சிறந்தவர் இங்கே இருக்கும்போது (அவர் முன்பு) இதே இடத்தில் நான் கவிதை பாடியுள்ளேன்'' என்று சொன்னார் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

''எவர் தன்னுடைய தொலைந்து போன பொருளைப் பள்ளிவாசலில் தேடுகிறாரோ (அவரை நோக்கி) 'அல்லாஹ் உமக்கு அதைக் கிடைக்காமல் ஆக்குவானாக!'' என்று கூறவும். ஏனெனில் பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை'' கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்


''எவரேனும் பள்ளிவாசலில் (வியாபாரம் செய்த வண்ணம்) விற்று, வாங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் (அவரை நோக்கி), அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்கட்டும்!'' என்று கூறுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''பள்ளிவாசல்களில் (பெரும்) தண்டனைகளும் நிறைவேற்றப்படாது. பழியும் தீர்க்கப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத் மற்றும் அபூ தாவுத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அகழ் யுத்தத்தில் ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் அருகேயிருந்து அவர்களை நலம் விசாரிப்பதற்காக (தொழுகைக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிவாசலில்) கூடாரம் ஒன்றை அமைத்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
''பள்ளிவாசலில் (ஈட்டிகளை எறிந்து) வீரவிளையாட்டுகள் நடத்திக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருக்க நான் (அதைப்) பார்த்தேன்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) புகாரீ, முஸ்லிம்

273 ''கருநிற அடிமைப் பெண் ஒருவருக்கு பள்ளிவாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம் வருவார்; பேசிக் கொண்டிருப்பார்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரீ, முஸ்லிம்


''பள்ளிவாசலில் எச்சில் துப்புவது பாவமாகும். அதை மண்ணிற்குள் (புதைபடும்படி ) மூடுவது (அப்புறப்படுத்துவது) அதற்குப் பரிகாரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்


''பள்ளிவாசல்களைக் கொண்டு மக்கள் பெருமையடிக்காத வரை கியாமத் (அழிவு) நாள் ஏற்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரழி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவுத், நஸாயீ, மற்றும் இப்னு மாஜா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

''பள்ளிவாசல்களை உயரமாகக் கட்டி அலங்கரிக்குமாறு எனக்குக் கட்டளையிடப்படவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவர் பள்ளிவாசலிலிருந்து குப்பை கூளத்தை வெளியேற்றுவது உட்பட என்னுடைய சமுதாயத்தாரின் நற்செயல்களுக்கான நற்கூலிகள் எனக்குக் காண்பிக்கப்பட்டன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத். இது திர்மிதீயில் கரீப் எனும் தரத்திலும், இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது

''உங்களில் எவரேனும் பள்ளிவாசலினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்