Sunday, March 05, 2006

மணக்கக் கூடாத உறவுகள்

ஆண்கள் கீழ்க்காணும் உறவினர்களை மணக்க அனுமதியில்லை:
1. தாய்
2. மகள்
3. சகோதன்
4. தாயின் சகோதரன்
5. தந்தையின் சகோதரன்
6. சகோதரனின் புதல்விகள்
7. சகோதரியின் புதல்விகள் பாலூட்டிய அன்னையர்
8. பாலூட்டிய அன்னையின் புதல்விகள்
9. மனைவியின் தாய்
10. மனைவியின் புதல்வி
11. மகனின் மனைவி
12. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தந்தை
2. மகன்
3. சகோதரன்
4. தாயின் சகோதரன்
5. தந்தையின் சகோதரன்
6. சகோதரனின் மகன்
7. சகோதயின் மகன்
8. பாலூட்டிய அன்னையின் கணவன்
9. பாலூட்டிய அன்னையின் மகன்
10. கணவனின் தந்தை
11. கணவனின் புதல்வன்
12. புதல்வியின் கணவன்
13. சகோதரியின் கணவனை சகோதரியுடன் கணவன் வாழும் போது மணப்பது
ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 4:23 வசனத்திருந்து இதை அறியலாம்:


உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதகள், உங்கள் தந்தையன் சகோதகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியன் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 4:23)


இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் குழந்தைப் பருவத்தில் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.