Tuesday, August 08, 2006

கொள்கை சம்பந்தமாக தடுக்கப்பட்டவைகள்

• அல்லாஹ்விற்கு இணைவைப்பதின் அனைத்து வகைகளும்.

• குறி பார்ப்பவன், ஜோஸியம் பார்ப்பவன், காணாமல் போனதை கண்டுபிடிப்பேன் என்று சொல்பவன் ஆகியோரிடம் செல்வது அல்லது அவர்கள் சொல்வதை உண்மையென்று நம்புவது.

• அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்காக அறுப்பது. (அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுத்தாலும் சரியே!)

• அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஆதாரமின்றி பேசுவது.

• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளை சட்டமாக எடுத்துக் கொள்வது.

• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைப்பது.

• தாயத்துகள் அணிந்து கொள்வது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது.

• சூனியத்தின் அனைத்து வகைகளும்.

• நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது.

• அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி சிந்திப்பது. (அவனுடைய படைப்புகளைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும்.)

• அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிப்பது.

• இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்று பவரை நரகவாசி என்று கூறுவது.

• மார்க்க ஆதாரமில்லாமல் ஒருவரை காஃபிரென்று கூறுவது.

• உலக காரியங்களில் ஒன்றை பிறரிடத்தில் கேட்கும்போது அல்லாஹ்வின் திருமுகத்திற்காக கொடுங்கள் என்று கேட்பது.

• அல்லாஹ்வுக்காக கொடுங்கள் என்று கேட்பவருக்கு கொடுக்காமலிருப்பது. (ஆனால் அவர் கேட்கும் விஷயம் பாவமான காரியமாக இருக்கக் கூடாது.)

• காலத்தை ஏசுவது.

• சகுனம் பார்ப்பது.

• இணை வைப்பவர்கள், காஃபிர்களுடன் சேர்ந்து தங்குவது.

• அல்லாஹ்வுடைய விரோதிகளாகிய யூதர்கள், கிருஸ்தவர்கள், இணை வைப்பவர்கள், காஃபிர்கள் ஆகியவர்களுடன் உளப்பூர்வமான நட்புக் கொள்வது.

• அமல்களை வீணாக்குவது. உதாரணமாக பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவோ ஒரு அமலை செய்வது அல்லது தனது அமல்களை சொல்லிக் காட்டுவது.

• கஅபத்துல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகிய மூன்று இடங்களைத் தவிர மற்ற இடங்களை புனிதமாகக் கருதி அவைகளை தரிசிக்கச் செல்வது.

• அடக்கஸ்தலங்களிலோ அல்லது அவற்றை சுற்றியோ கட்டிடம் அமைப்பது.

• அடக்கஸ்தலங்கள் இருக்குமிடத்தில் விளக்கெரிப்பது.

• நபித்தோழர்களை ஏசுவது, அவர்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் ஆராய்வது.

• தக்தீர் எனும் விதியைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது.

• மார்க்கக் கல்வி ஞானமின்றி திருக் குர்ஆன் கருத்துக்களில் தர்க்கம், விவாதம் செய்வது.

• திருக்குர்ஆன் விஷயத்தில் சர்ச்சை செய்பவர்களுடனோ அல்லது அதை பரிகாசம் செய்பவர்களுடனோ அமர்வது.

• தக்தீர் எனும் விதியை மறுப்பவர்கள், இன்னும் இதுபோன்று கொள்கை ரீதியான பித்அத்கள் (அனாச்சாரங்கள்) செய்பவர்களை நோய் விசாரிக்கச் செல்வது அல்லது அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்வது அல்லது அவர்களுக்காகக் கவலைப்படுவது.

• காஃபிர்களோ அல்லது பித்அத்தை சார்ந்தவர்களோ எழுதிய மதரீதியான புத்தகங்களைப் படிப்பது.

• காஃபிர்கள் வணங்கும் பொய்யான கடவுள்களை திட்டுவது. (அதாவது, அதனால் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள் என்று இருந்தால்.)

• அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை, வசனங்களை பரிகாசம் செய்வது.

• அல்லாஹ் தடுத்தவைகளை ஆகுமாக்கிக் கொள்வது அல்லது அனுமதித்தவைகளைத் தடை செய்து கொள்வது.

• அல்லாஹ்வை தவிர பிறருக்கு சுஜூது செய்வது அல்லது குனிவது.

• நிஃபாக் எனும் நயவஞ்சகத்தன்மை உள்ளவர்களுடனும், பெரும் பாவங்களை வெளிப்படையாக செய்பவர்களுடன் கூடி உட்கார்ந்து பேசி மகிழ்வது.

• மார்க்கத்தில் பிரிவினை உண்டு பண்ணுவது, சத்தியத்தில் உள்ள ஜமாஅத்தை விட்டுப் பிரிவது.

• யூதர்கள், கிருஸ்தவர்கள், முஷ்ரிக்குகள், மஜூஸிகள் (நெருப்பை வணங்குபவர்கள்,) காஃபிர்கள் ஆகியோர்களின் மதத் சடங்குகள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது.

• காஃபிர்களுக்கு நாம் முதலில் ஸலாம் சொல்வது.

• வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களின் நூல்களிலிருந்து சொல்லும் விஷயங்களை உண்மை அல்லது பொய் என்று சொல்வது. (ஆனால் அதற்கு உண்மை அல்லது பொய் என்பதற்கு நமது ஷரீயத்தில் ஆதாரம் இருந்தாலே தவிர).

• பிள்ளைகள், சிலைகள், பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வது.

• அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்று சொல்வது.

• அல்லாஹ்வைத் தவிர மற்றவரை இறைவன், கடவுள், ஆண்டவர் என்று சொல்வது.

• நேரம் சரியில்லை என்று சொல்வது.

உன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்! நீ நரகவாதி! என ஒருவருக் கொருவர் சபித்துக் கொள்வது.

இப்படிப்பட்ட தீய செயல்களில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக...!!