Tuesday, September 25, 2007

தீயகுணங்கள் 2 கொடுமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: இறுதித் தீர்ப்புநாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாய் ஆகிவிடும். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(புகாரி)

அறிவிப்பாளர் : அவ்ஸ் பின் ஷுரஹ்பீல் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேளிவிட்டான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், வறியவன் (பஞ்சைப்பராரி) என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், எவரிடம் திர்ஹாமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினர். அண்ணலார் பதிலளித்தார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான், எவரேனும் ஒருவரின் செல்வததைப் பறித்துத் தின்றிருப்பான், எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான், எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அலீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை. (மிஷ்காத்)

கொடுமைக்காரனின் இந்த அநீதியின் காரணமாக அவனை இறைவன் பல்வேறு வகையான ஆபத்துகளில் அமைதியின்னைகளில் ஆழ்த்திவிடுகின்றான்.

தீயகுணங்கள் 1 தற்பெருமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது. இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார் மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?' அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: (இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
(முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். (அபூதாவூத்)


நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்;துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்கமாட்டான்)

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டிதளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா அதற்கு அண்ணலார் இல்லை நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்கமாட்டீர்) என்று பதிலளித்தார்கள். (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது. (புகாரி)