Saturday, July 08, 2006

ஒழுக்கமே உயர்வைத் தரும்

ஒழுக்கம் என்பதை ஒரு முஸ்லிம் தன் கலாச்சாரத்தோடு சேர்த்து வைக்க வேண்டிய விஷயமாகும். மறுமையை நம்பக்கூடிய முஸ்லிம் நன்மை தீமை கணக்கிடப்படும் என நம்பக்கூடிய ஒரு மனிதன் இறைவிசுவாசி அதை கண்டிப்பாக பேணவேண்டும் ஏனெனில்
(மக்களை) அதிகமாக சொர்க்கத்தில் புகுத்துவது இறையச்சமும் நற்குணமும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
இறையச்சமும் நற்குணமும் இரு சகோதரர்களாகும் இரண்டும் இணைபிரியாத தண்டவளாங்கள் ஏனென்றால் இறையச்சம் இருக்கின்ற மனிதனிடம் ஒழுக்கக் கேடுகள் இருக்காது ஒழுக்கக்கேடு உள்ள மனிதன் இறை விசுவாசியாக இருக்கமாட்டார். இதை இஸ்லாம் இவ்வாறு கூறுகின்றது
''உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
உலோபித்தனமாக இஸ்லாம் கருதக்கூடிய விஷயம் என்னவெனில் ஜகாத் என்பதாகும் ஏழை மனிதர்களுக்கு உதவ வேண்டி அல்லாஹ் சில மனிதர்களை தேர்ந்தெடுத்து பணத்தைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான். நாம் கொடுத்த இந்த பணத்தை ஏழைகளூக்கு கொடுக்கின்றானா அல்லது சேர்த்து வைத்து பேசாமல் இருந்து விடுகின்றானா என்று சோதிக்கின்றான் இதை அல்லாஹ் கூறும்பொழுது உங்களுக்கு நாம் அளித்ததிலிருந்து தான தர்மம் செய்யுங்கள்( )
என்றுதான் குறிப்பிடுகின்றான் இல்லையில்லை இவையெல்லாம் நானாக சம்பாதித்தவை என் முயற்சியின் பலனால் கிடைத்த வெற்றி என்று யாராவது முனுமுனுத்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் இவ்வாறு தாக்கீக் கூறுகின்றார்கள்
''நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களுடைய மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால் தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்
இது தான் பணத்திற்கும் பணத்திற்கு பின்னால் போகும் பிணத்திற்கும் (மனிதர்களுக்கும்) இஸ்லாம் கொடுக்கும் வெகுமதி.
இது நல்லது அல்லது கெட்டது என்று எப்படி ஒரு மனிதன் முடிவு செய்வது அதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. ஏனென்றால் புகைபிடிப்பதை மது அருந்துவதை நல்லது என்று கூறக்கூடியவர்கள் கூட இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட சிலரை கண்டால் ஒழிக்கின்றனர் சிலருக்கு அல்லது அவர்கள் விரும்பக்கூடியவர்களுக்கு நாம் செய்யக்கூடிய இந்த காரியம் தெரியக்கூடாது என நினைக்கின்றனர் அதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது.
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமும், நற்செய லும் நன்மையாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஆக சகோதரர்களே இஸ்லாம் நற்குணத்தை முஸ்லிமின் தலையாய கடமையாக கருத வேண்டும் என போதிக்கின்றது நற்குணத்தின் மூலமாகத்தான் ஒரு முஸ்லிம் தன்னை மற்ற சமூகத்தாரிலிருந்து வேறுபடுத்தி காட்டமுடியும். எனவே அதை பேணி நடக்கக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக ..!!

No comments: