Sunday, September 03, 2006

தொழுகையில் தடை செய்யப்பட்டவைகள்

• சூரியன் உதிக்கும் நேரத்திலோ அல்லது மறையும் நேரத்திலோ அல்லது நடு உச்சி நேரத்திலோ (நஃபில்) தொழுவது.

• ¨(சுபு{ஹ) தொழுகைக்குப் பின் சூரியன் பூரண உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.

• வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அதை ஆக்குவது.

• ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடைவெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)

• ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான தொழுகையில் ஈடுபடுவது.

• தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல்களை செய்வது.

• ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.

• தொழுகையில் முகத்தைத் திரும்பி பார்ப்பது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.

• ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)

• உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுவது.

• சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.

• அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளிலும் தொழுவது.

• காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.

• நரி அங்குமிங்கும் பார்ப்பது போன்று தொழுகையில் பார்ப்பது.

• மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுவது.

• முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாயைப் போன்று உட்காருவது.

• ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வது.

• தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் சுஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரு முறை அனுமதி உண்டு.)

• துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.

• அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.

• தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங்களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)

• மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)

• தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.

• வரிசையில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்வது.

• தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.

• சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.

• தொழும்போது காற்றுபிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல் வெறும் சந்தேகத்தில் தொழுகையை விட்டு வெளியேறுவது.

• ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது, விளையாடுவது.

• ஜுமுஆ குத்பாவின்போது இரு கால்களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களை துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.

• இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.

• தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழ வைப்பது.

• தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.

• தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.

• தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (எனவே தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)

• இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)

• மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவைகளை இஷா தொழுத பின் பேசுவது, அவைகளில் ஈடுபடுவது.

• வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக முந்துவது.

மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது அவர்களுக்கு இமாமத் செய்ய முந்துவது.

No comments: