Thursday, December 20, 2007

ஹஜ் - உம்றாவில் ஓத வேண்டிய துவாக்கள்

பயணத்தின் துஆ

உச்சரிப்பு: அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர், ஸுப்ஹானல்லதி ஸக்கர லனா ஹாதா வ மா குன்னா லஹு முக்ரினீன், வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன், அல்லாஹும்ம இன்னா நஸ் அலுக குபீ ஸ குபரினா ஹாதல் பிர்ர வத் தக்வா வ மினல் அமலி மா தர்ழா, அல்லா ஹும்ம ஹவ்வின் அலைனா ஸகுபரனா வத்வி அன்னா புஅதஹ். அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு குபிஸ் ஸகுபரி வல் கலீகுபது குபில் அஹ்ல், அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் வஅஃதாயிஸ் ஸ குபரி வ கஆபதில் மன்ழரி வ ஸூயில் முன்கலபி குபில் மாலி வல் அஹ்ல்

பொருள்: அல்லாஹ் பெரியவன் (3முறை) இந்த வாகனத்தை வசப்படுத்தித் தந்த (இறை)வன் தூயவன்! உண்மையில் இதை வசப்படுத்தும் ஆற்றலை நாம் பெற்றிருக்கவில்லை! திண்ணமாக நாம் நம் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல உள்ளோம்! யா அல்லாஹ்! இந்தப் பயணத்தில் நன்மையையும் பயபக்தியையும் நாங்கள் உன்னிடம் கோருகிறோம். நீ உவந்து கொள்கிற அமல்கள் செய்யும் பாக்கியத்தைக் கேட்கிறோம். யா அல்லாஹ்! இந்தப் பயணத்தை எங்களுக்கு நீ இலகுவாக்குவாயாக! இதன் தொலைவையும் எங்களுக்கு நீ சுருட்டித் தருவாயாக! யா அல்லாஹ்! நீயே பயணத்தின் தோழன்., எங்கள் குடும்பத்தில் பிரதிநிதி! யா அல்லாஹ்! பயணத்தின் சிரமம், பதற்றமான தோற்றம், பொருளிலும் குடும்பத்திலும் நட்டத்தோடு திரும்பி வருதல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!

தல்பியா

உச்சரிப்பு: லப்பை(க்)க (அ)ல்லாஹும்ம லப்பைக், லப்பை(க்)க லாஷரீ(க்)க ல(க்)க லப்பைக், இன்னல் ஹம்த வன் நிஃமத்த ல(க்)க வல் முல்க், லாஷரீக்க லக்,,

பொருள்: இதோ! வந்து விட்டேன். இறைவனே! இதோ! ஆஜராகிவிட்டேன். உனக்கு இணை துணை யாருமில்லை. திண்ணமாக அனைத்துப் புகழும் உனக்குரியதே. ஆட்சியதிகாரமும் உனக்கு உரியதே. மேலும் உனக்கு யாதொரு இணையுமில்லை.)

அல் மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனிதமிகு பள்ளி வாசலில் நுழையும் போது ஓதும் துஆ: (பொதுவாக எந்தப் பள்ளி வாசலில் நுழையும்போதும் ஓதவேண்டியது இதுவே!)

உச்சரிப்பு: பிஸ்மில்லாஹி வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி அவூது பில்லாஹில் அழீம், வபி வஜ்ஹிஹில் கரீம், வ ஸுல்தானி ஹில் கதீம், மினஷ் ஷைத் தானிர் ரஜீம், அல்லாஹும் மகுப்தஹ்லீ அப் வாப ரஹ்மதிக்

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறையருளும் சாந்தியும் இறைத்தூதர் மீது உண்டாவதாக! மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டும் அவனது திருமுகத்தைக் கொண்டும் அவனது நிலையான மேலாதிக் கத்தைக் கொண்டும் விரட்டப்பட்ட ஷைத் தானை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் அருள் வாயில்களை எனக்குத் திறந்து விடுவாயாக!

தவாப் தொடங்க ஓதும் துஆ

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஈமான (ன்) ம் பிக வ தஸ்தீக (ன்) ம் பி கிதாபிக வபாஅ (ன்ம்) பி அஹ்திக வத்திபாஅ (ன்)ல்லி சுன்ன(த்)தி நபிய்யி(க்)க முஹம் மதின் ஸல்லல்லாஹீ அலைஹி வ ஸல்லம்

பொருள்: யா அல்லாஹ்! உன்மீது ஈமான் கொண்டவனாகவும் உன் வேதத்தை உண்மையென ஏற்றுக்கொண்டவனாகவும் உன்னிடம் முன்னர் செய்த உடன்படிக் கையை நிறைவேற்றியவனாகவும் உன் திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறை பின்பற்றியவனாகவும் (தவாபை தொடங்கு கிறேன்)

தவாபில் (ஹஜருல் அஸ்வத் வரும்போது ஓதும்) துஆ

உச்சரிப்பு: ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத (ன்வ்) வ ஃபில் ஆகிரதி ஹஸ னத (ன்வ்) வ கினா அதாபன் நார்

பொருள்: எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரக வேதனையில் இருந்தும் எங்களைக் காத்தருள்வாயாக!

ஸயி தொடங்கும்பொழுது ஸஃபா குன்றில் சற்று ஏறி நின்று ஓதுவது

உச்சரிப்பு: இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆயிரில்லாஹ், நப்தஉ பிமா பத அல்லாஹு பிஹ்

பொருள்: நிச்சயமாக! ஸபா - மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்.- (இந்த வசனத்தில்) அல்லாஹ் முதலில் கூறியுள்ளதைக் கொண்டே நாமும் (ஸயியை) தொடங்குகிறோம்.

அத்துடன் ஸஃபாவில் ஓதும் திக்ர்

உச்சரிப்பு: அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், லா இலாஹ இல்லலாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு அன்ஜஸ வஃதஹு வ நஸர அப்தஹு வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்

(பொருள்:) அல்லாஹ் பெரியவன், (3 தடவை) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழ் அனைத்தும் அவனுக்கே! அவனே வாழ்வையும் மரணத்தையும் கொடுக்கிறான். மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. தனது வாக்குறுதியை நிறைவேற்றினான். தன் அடியாருக்கு உதவி செய்தான். அவன் ஒருவனே எல்லாப் பிரிவினரையும் தோற்கடித்தான். (குறிப்பு: இந்த திக்ர் ஓதிய பிறகு துஆ. பிறகு திக்ர். பிறகு துஆ ஓதவும்)

நபி (ஸல்) அவர்கள் - துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆ தான்., நானும் எனக்கு முன் சென்ற அத்தனை நபியமார்களும் கூறிய இந்த திக்ர்தான் மிகவும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள். அந்த திக்ர் இதுதான்:

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்) லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வ யுமீத்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறை வன் இல்லை. அவன் தனித்தவன்., அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே. புகழ் அனைத்தும் அவனுக்கே. வாழ்வையும் மரணத்தையும் அவனே கொடுக்கிறான். மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.

ஆதாரப்பூர்வமான துஆக்கள்

இங்கு குர்ஆன் - ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள துஆ மற்றும் திக்ர்களும் கொடுக்கப்படுகின்றன. ஹாஜிகள், எல்லா இடங்களிலும் இவற்றை ஓதியும் பிரார்த்தனை செய்யலாம்!

உச்சரிப்பு: ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில் லாஹி வ லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்

பொருள்: அல்லாஹ் தூய்மையானவன். மேலும் அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. மேலும் அல்லாஹ் மாபெரியவன்.

உச்சரிப்பு : ஸுப்ஹானல்லாஹி வ பிஹம் திஹி ஸுப்ஹானல்லா ஹில் அழீம்

பொருள்: அல்லாஹ்வைப் புகழ்வதோடு அவனைத் துதிக்கவும் செய்கிறேன். மகத்துவம் மிக்க அல்லாஹ் தூய்மையானவன்.

உச்சரிப்பு: லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஅமது வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸன், லா இலாஹ இல்லல் லாஹு முக்லிஸீன லஹுத் தீன வ லவ் கரிஹல் கா குபிரூன்

பொருள்: அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை.அவன் ஒருவனையே நாங்கள் வணங்குகிறோம். அருட்கொடை கள் தந்தவன் அவனே. கிருபையும் அவ னுக்குரியதே. மேலும் அழகிய தொடர் புகழும் அவனுக்கே! அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. அவன் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்தவர்களாய் அவனை நாங்கள் வணங்குகிறோம்.

உச்சரிப்பு: லா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வைக் கொண்டே தவிர எந்த ஆற்றலும் அதிகாரமும் இல்லை.

உச்சரிப்பு: ரப்பனா தகப்பல் மின்னா இன்ன(க்)க அன்(த்)தஸ் ஸமீஉல் அலீம் வ து(த்)ப் அலைனா இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களிடம் இருந்து (இந்தப்பிரார்த்தனைகளை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் எல்லா வற்றையும் செவியுறுபவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறாய். மேலும் எங் கள் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ தான் பெரிதும் மன்னிப்பவனும் கருணைமிக்க வனும் ஆவாய்!

உச்சரிப்பு: ரப்பனா லா துணுஸிஃக் குலூ பனா பஅத இத் ஹதை(த்)தனா வ ஹப் லனா மி (ன் ல்) லதுன்(க்)க ரஹ்மதன், இன்னக அன்தல் வஹ்ஹாப்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பிறகு எங்களை வழிபிறழச்செய்துவிடாதே! மேலும் உன்னரு ளில் இருந்து எங்களுக்கு கொடை வழங்கு வாயாக!

நிச்சயமாக நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பி ஹப்லீ மின்(ல்)லதுன்(க்)க துர்ரிய்யதன் தய்யிபதன் இன்னக ஸமீஉத் துஆ

பொருள்: என் இரட்சகனே! உன்னிடம் இருந்து எனக்கு தூய்மையான சந்ததிகளை வழங்குவாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கிறாய்!

உச்சரிப்பு: ரப்பனா ழலம்னா அன்ஃபுஸனா வ இன் (ல்) லம் தஃக்குபிர் லனா வ தர்ஹம்னா ல நகூனன்ன மினல் காஸிரீன்

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நாங்களே அக்கிரமம் இழைத்துக் கொண் டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்குக் கிருபை செய்யாவிட்டால் நிச்சய மாக நாங்கள் நஷ்டத்திற்குரியவர்களாகி விடுவோம்!

உச்சரிப்பு: ரப்பனஸ்ரிஃப் அன்னா அதாப ஜஹன்னம இன்ன அதாபஹா கான ஃகராமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்களை விட்டும் நரக வேதனையை அகற்றிடு. நிச்சயமாக அதன் வேதனை ஓயாது தொல்லை தரக் கூடியது!

உச்சரிப்பு: ரப்பனா ஹப்லனா மின் அஸ்வாஜினா வ துர்ரிய்யாத்தினா குர்ரத்த அஅ;யுனி(வ்) வஜ் அல்னா லில் முத்தகீன இமாமா

பொருள்: எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியரையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக்கூடியவர்களாய் விளங்கச் செய்வாயாக! மேலும் எங்களை பயபக்தியாளர்களுக்கு முன்னோடிகளாக ஆக்குவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஸ்லிஹ்லீ தீனி யல்லதி ஹுவ இஸ்மது அம்ரி வ அஸ்லிஹ்லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆதீ வ அஸ்லிஹ்

ஆகிரதியல்லத்தீ ஃபீஹா மஆதீ வஜ்அலில் ஹயாத்த ஸியாதத(ன்ல்) லீ ஃபீ குல்லி கைரின் வல் மௌத்த ராஹத(ன்ல்) லீ மின் குல்லி ஷர்

பொருள்: எனக்கு பாதுகாப்பாய் இருக்கும் என்னுடைய தீனை எனக்கு சீர்படுத்து வாயாக! எனது வாழ்வு எதில் இருக்கிறதோ அத்தகைய எனது உலகத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக! எங்கு நான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதோ அந்த எனது மறுமையை எனக்கு சீர்படுத்துவாயாக! ஒவ் வொரு நன்மையையும் செய்வதற்கு (எனக்கு சாத்தியமாகும் வகையில்) என் வாழ் நாளை அதிகமாக்குவாயாக! மேலும் ஒவ்வொரு தீங்கிலிருந்தும் அமைதி அளிக்கக் கூடியதாக மரணத்தை ஆக்குவாயாக!

உச்சரிப்பு: அஊது பில்லாஹி மின் ஜஹ் தில் பலாஇ வதர்கிஷ் ஷகாஇ வ ஸூஇல் களாயி வஷமாததில் அஅ;தா

பொருள்: கடுமையான துன்பத்தைவிட்டும் துர்ப்பாக்கியம் அடைவதை விட்டும் விதியின் தீமையை விட்டும் எதிரிகளின் எக்காளத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் ஹம்மி வல் ஹுஸ்னி வமினல் அஜ்ஸி வல் கஸ்லி வ மினல் ஜுப்னி வல் புخக்லி வமினல் மஃஸமி வல் மஃக்ரமி வமின் கஃலபதித் தைனி வ கஹ்ரிர் ரிஜால்

பொருள்: யா அல்லாஹ்! கவலை, இயலாமை, சோம்பல், கோழைத்தனம், கஞ்சத்தனம், பாவம், கடன் மற்றும் கடன்களின் பாரம், பிற மனிதர்களின் கொடுமைகள் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அஊதுபிக ல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுஸாமி வமின் ஸய்யியில் அஸ்காம்

பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்மஸ்துர் அவ்ராத்தீ வ ஆமின் ரவ்ஆத்தி வஹ்குபள்னீ மின் பைனி யதய்ய வ மின் خகல்குபீ வஅன் யமீனி வஅன் ஷிமாலி வமின் குபௌக்கீ வ அஊது பி அழ்மதி(க்)க மின் அன் உஃக்தால மின் தஹ்த்தீ

பொருள்: இறைவா என்னுடைய பலவீனங் களை மறைப்பாயாக. என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதி தருவாயாக. எனக்கு முன்பிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலது புறமிருந்தும் இடது புறமிருந் தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாது காப்பு அளிப்பாயாக.இன்னும் கீழே இருந்து எதிர்பாராத விதமாக கொல்லப்படுவதில் இருந்து-உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்-குபிர் கதீஅதீ வஜஹ்லீ வ இஸ்ராகுபீ குபீP அம்ரீ வமா அன்த அஅ;லமு பிஹி மின்னி அல்லாஹும் மஃக்- ஃபிர் லீ ஜத்தி வஹஸ்லீ வக(த்)தயீ வஅம்தீ வகுல்லு தாலிக இன்தீ

பொருள்: யா அல்லாஹ்! எனது பாவத்தையும் எனது அறியாமையையும் எனது விஷயத்தில் நான் மேற்கொள்ளும் வரம்பு மீறல்களையும் மற்றும் எந்தப் பிழைகளை என்னைவிட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக. இறைவா! நான் விரும்பி நாடி செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த தவறுகளையும் மன்னிப்பாயாக! நான் தவறுகலாகஷ் செய்தவற்றையும் வேண்டு மென செய்தவற்றையும் மன்னிப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும் மஃக்- ஃபிர் லீ மா கத்தம்(த்)து வமா அخக்கர்து வமா அஸ்ரர் (த்)து வமா அஅ;லன்து வமா அன்(த்)த அஅ;லமு பிஹி மின்னீ அன்தல் முகத்திம். வ அன்தல் முஅخக்கிர் வஅன்த அலா குல்லி ஷைஇன் கஸீர்

பொருள்: நான் முன்னர் செய்த பாவங் களையும் பின்னர் செய்த இரகசியமாய் செய்த- பகிரங்கமாய்ச் செய்த பாவங்களை யும் மேலும் எந்தப் பிழைகளை என்னை விட நீ அதிகம் அறிந்துள்ளாயோ அந்தப் பிழைகளையும் மன்னிப்பாயாக! முன்னதாக அல்லது தாமதமாக ஏற்பட்ட அனைத்துப் பொருள்களையும் உருவாக்கியவன் நீயே! மேலும் நீP அனைத்தின் மீதும் பேராற்றல் கொண்டவனாய்த் திகழ்கின்றாய்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ்அ லு(க்)கஸ் ஸபாத பில் அம்ரி வல் அஜீ ம(த்) த அலர் ருஷ்தி, வஅஸ் அலுகஷ் ஷுக்ர நிஅ;ம தி(க்)க, வ ஹுஸ்ன இபா ததிக், வ அஸ் அலுக கல்பன் ஸலீம (ன்வ்) வ லிஸானன் ஸாதிக(ன்வ்) வ அஸ்அலுக மின் கைரி மா தஅ;லமு அஊது பிக மின்ஷர்ரி மா தஅ;லமு அஸ்தஃகுபிருக மிம்மா தஅ;லமு இன்னக அல்லாமுல் ஃகுயூப்

பொருள்: இறைவா! ஈமானில் நிலைகுலையாமையையும் நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். மேலும் உன் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை நல்ல முறையில் வணங்கி வழிபடுவதற்கும் ஆற்றலை உன்னிடம் கேட்கிறேன். மேலும் பழுதற்ற, சிறந்த இதயத்தையும் உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் நீ அறிகிற நன்மைகளை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிகிற தீமைகளில் இருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் நீ அறிகிற பாவங்களில் இருந்து உன்னிடம் மன்னிப்பும் கோருகிறேன். திண்ணமாக நீ மறைவானவை எல்லாம் நன்கு அறிபவன்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பன் நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) இஃக்-ஃபிர் லீ தன்பீ வ அத்ஹிப் ஃகைல கல்பீ வ அஇத்னீ மின் முளில்லாதில் ஃபி(த்)தனி மா அப்கைதனி

பொருள்: யா அல்லாஹ்! முஹம்மத் (ஸல்) அவர்களின் இரட்சகனே! எனது பாவத்தை மன்னிப்பாயாக! மேலும் என் இதயத்தின் சினத்தை அகற்றுவாயாக! மேலும் நீ என்னை வாழுமாறு விட்டு வைத்திருக்கும் காலத்தில் வழிகேட்டில் ஆழ்த்தக்கூடிய குழப்பங்களை விட்டும் என்னைப் பாது காப்பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ரப்பஸ் ஸமா வா(த்)தி வரப்பல் அர்ழி வரப்பல் அர்ஷிழ் அழீம் ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். காலிகல் ஹப்பி வன்நவா முநஸ்ஸிலத் தவ்ராதி வல் இன்ஜீலி வல் குர்ஆன், அஊது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆகிதுன்(ம்)பி நாஸியதிஹ். அன் (த்)தல் அவ்வலு குப லைஸ கப்லக ஷைய், வஅன்தல் ஆخகிறு குப லைஸ பஅதக ஷைய், வ அன்தழ் ழாஹிறு குப லைஸ ஃபௌகக ஷைய்,வ அன்தல்பாதினு ஃபலைஸ தூன(க்)கஷைய், இக்ளி அலைய் யத் தைன, வ அஃக்னினி மினல் ஃபக்ர்

பொருள்: யா அல்லாஹ்! வானங்கள் - பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் அதிபதியே! எங்களுடையவும் அனைத்துப் பொருள்களுடையவும் அதிபதியே! வித்துக் களையும் பேரீச்சங் கொட்டைகளையும் விளைவிப்பவனே! தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய வேதங்களை இறக்கி அருளியவனே! அனைத்துப் பொருள்களின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.அவற்றின் முன் உச்சி ரோமம் உன் பிடியிலேயே உள்ளது! நீயே முதலாமவன்., உனக்கு முன் எதுவுமில்லை! நீயே இறுதியானவன்., அனைத்தும் அழிந்த பிறகு நீ மட்டும் எஞ்சியிருப்பாய்! நீயே வெளிப்படையானவன்., உனக்கு அப்பால் எதுவுமே இல்லை! நீயே அந்தரங்கமானவன்., நீ அன்றி எதுவுமில்லை! எனது கடனை அடைத்துவறுமையை அகற்றி என்னை வளமடையச் செய்வாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம அஅ;தி நகுப்ஸீ தக்வாஹா வ ஸக்கிஹா அன்(த்)த خகைரு மன் ஸக்காஹா அன்த்த வலிய்யுஹா வ மௌலாஹா

பொருள்: யா அல்லாஹ்! எனது மனத் திற்கு அதன் பக்தியை வழங்கி, அதைப் பக்குவப்படுத்துவாயாக! எனது மனத்தை நீயே சிறந்த முறையில் பக்குவப்படுத்தக் கூடியவன்! நீயே அதன் துணைவனாகவும் பாதுகாவலனாகவும் இருக்கிறாய்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் அஜ்ஸி வல் கஸ்லி வ அவூது பி(க்)க மனல் ஜுப்னி வல் ஹரிமி வல் புخக்லி வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ர்

பொருள்: யா அல்லாஹ் திண்ணமாக நான் இயலாமை,சோம்பல் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். கோழைத்தனம், முதுமையின் தளர்வு, கருமித்தனம் ஆகியவற்றை விட்டும் உன் னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மண்;ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம லக அஸ்லம்த்து வபிக ஆமன்த்து வ அலைக்க தவக்கல்து வ இலைக்க அனப்து வ பிக காஸம்து அஊது பி இஸ்ஸதிக அன்துளில்லனி லா இலாஹ இல்லா அன்த்த, அன்த்தல் ஹய் யுல்லதீ லாயமூத்து, வல்ஜின்னு வல் இன்ஸு யமூ(த்)தூன்.

பொருள்: யா அல்லாஹ்! உனக்கு நான் கீழ்ப்படிந்தேன். உன் மீதே நம்பிக்கை கொண்டேன். உன்னையே சார்ந்து வாழ் கிறேன். உன் பக்கமே மீண்டேன். மேலும் உனக்காகவே தர்க்கத்தேன். நீ என்னை வழிகேட்டில் ஆழ்த்துவதை விட்டும் உனது கண்ணியத்தின் பொருட்டால் உதவிகோரு கிறேன். உன்னைத் தவிர வேறு இறை வன் இல்லை. என்றைக்கும் மரணமாகாமல் நித்திய ஜீவனாய் இருப்பவன் நீயே!- ஜின் னுகள், மனிதர்கள் அனைவரும் மரணம் அடைந்துவிடுவர்!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் இல்மி(ன்)ல்லா யன் குபஉ, வமின் கல்பி(ன்)லா யஃக்ஷஉ, வமின் ந குப்ஸி (ன்)ல்லா தஷ்பஉ வமின் தஅ;வத்தி (ன்) ல்லா யுஸ்தஜாபு லஹா

பொருள்: யா அல்லாஹ்! பயனளிக்காத கல்வி, (உனக்கு)அஞ்சாத இதயம், நிறைவு கொள்ளாதமனம் பதிலளிக்கப்படாத பிரார்த் தனை ஆகியவற்றில் இருந்து உன்னிடம் பாதுபாப்புத் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம அல்ஹிம்னீ ருஷ்தீ வ அஇத்னீ மின்ஷர்ரி ந குப்ஸி

பொருள்: யா அல்லாஹ்! நேர்வழி நடக்க வேண்டுமெனம் உள்ளுணர்வை எனக்கு ஏற்படுத்துவாயாக! எனது மனத்தின் தீமை யில் இருந்து எனக்குப் பாதுகாப்பு அளிப் பாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்கல் ஹுதா வத் துக்கா வல் அ குபா குப வல்ஃகினா

பொருள்: யா அல்லாஹ்! வழிகாட்டல், இறையச்சம்,கற்பு மற்றும் செல்வச் செழிப்பு ஆகியவற்றை உன்னிடம் யாசிக்கிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ் அலு(க்)கல் ஹுதா வஸ் ஸதாத்

பொருள்: இறைவா! வழிகாட்டுதலையும் (பிரச்னைகளில்) நேர்மையான முடிவுகளையும் உன்னிடம் கேட்கிறேன்)

உச்சரிப்பு: அல்லாஹும்மஃ குபிர்லீ வர்ஹம் னீ வ ஆ குபினி வர்ஸுக்னீ

பொருள்: இறைவா! என்னை மன்னித்து எனக்கு அருள் புரிவாயாக! மேலும் எனக்கு ஆரோக்கியமும் வாழ்வாதாரங்களும் வழங்குவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ்அ லு(க்)க மினல் خகைரி குல்லிஹி ஃஆஜி லிஹி வ ஆஜிலிஹி மா அலிம்து மின்ஹு வமா லம் அஃலம், வ அஊது பிக மினஷ் ஷர்ரி குல்லிஹி ஃஆஜிலிஹி வஆஜிலிஹி மா அலிம்து மின்ஹு வமாலம் அஅ;லம். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் خகைரி மாஸஅலக மின்ஹு அப்து(க்)க வ நபிய்யு(க்)க முஹம்மதுன் ஸல்லல் லாஹு அலைஹி வ ஸல்லம். வ அஊது பி(க்)க மினஷ்ஷர்ரி மஸ்தஆத மின்ஹு அப்துக வ நபிய்யு(க்) முஹம்மதுன் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்.

பொருள்: யா அல்லாஹ்! உடனடியாக ஏற் படக் கூடிய - தாமதமாக ஏற்படக்கூடிய மற்றும் நான் அறிந்துள்ள, அறியாதிருக்கிற அனைத்து நன்மைகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உடனடியாக ஏற்படக் கூடிய தாமதமாக எற்படக் கூடிய, நான் அறிந்துள்ள, அறியாதிருக்கிற அனைத்து தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யா அல்லாஹ்! உன் அடியாரும் நபியுமாகிய முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னிடம் வேண்டிய நன்மைகள் அனைத் தையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் உன் அடியாரும் நபிய்யுமாகிய முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமைகள் அனைத்தை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ் அலு(க்)க ஜன்னத்த வமா கற்றப இலை ஹா மின் கௌலின் வஅமலின்(வ்)வ அஊது பிக மினன் நாரி வமா கற்றப இலைஹா மின் கௌலின்(வ்) வஅமல். வ அஸ்அலுக அன் தஜ்அல குல்ல களாயின் களைதஹு லீ خகைரா

பொருள்: யா அல்லாஹ்! சுவனத்தையும் அதன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தும் சொல் - செயல்;களையும் உன்னிடம் நான் கோருகிறேன். மேலும் நரகத்தையும் அதன் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சொல் - செயல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் என் விஷயத்தில் நீ தீர்மானம் செய்துள்ள தீர்ப்புகள் அனைத்தையும் நன்மையளிக்கும் வகையில் அமைக்குமாறும் உன்னிடம் வேண்டுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் கஸ்லி வல் ஹரிமி வல் மஅ;ஸமி வல் மஃக்ரமி வமின் குபித்னதில் கப்றி வ அதாபில் கப்றிவ குபித்னதிந் நாரி வமின் ஷர்ரி குபித்னதில் ஃகினா வஅஊது பிக்க மின் குபித்னதில் குபக்ரி வஅஊது பி(க்)க மின் குபித்னதில்மஸீஹித் தஜ்ஜால், அல்லாஹும்ம மஃக்ஸில் அன்னீ கத்தா யாய பிமாயிஸ் ஸல்ஜிவல் பரதி, வ நக்கி கல்பீ மினல் கதாயா, கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மனத் தனஸ், வ பாயித் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப்

பொருள்: யா அல்லாஹ்! சோம்பல், முதுமையின் தளர்வு, பாவம், கடன், மண் ணறையின் குழப்பம், அதன் வேதனை, நரகத்தின் துன்பம், அதன் வேதனை மற்றும் செல்வச்செழிப்பின் குழப்;பத்தினால் ஏற்படும் தீமை மற்றும் வறுமையினால் ஏற்படும் தீமை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மேலும் வறுமையினால் ஏற்படும் துன்பத்தில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யா அல்லாஹ்! என் பாவங்களைப் பனித்துளி மற்றும் பனிக்கட்டியின் நீர் கொண்டு கழுவுயாயாக! வெள்ளாடையை அழுக்கில் இருந்து தூய்மைப்படுத்துவது போன்று பாவங்களிலிருந்து என் உள்ளத் தைத் தூய்மையாக்குவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஏற்படுத்தியுள்ள தூரத்தைப் போல எனக்கும் என் பாவங்களுக்கும் தூரத்தை ஏற்படுத்துவாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க ஹுப்பக்க வ ஹுப்ப ம(ன்)ய் யுஹிப்பு(க்)க வல் அமலல்லதீ யுப்லிகுனீ ஹுப்பக், அல்லாஹும் மஜ்அல் ஹுப்பக்க அஹப்ப இலய்ய மின் நஃப்ஸீ வ அஹ்லீ வ மின் மாயில் பாரித்

பொருள்: யா அல்லாஹ்! உன் நேசத் தையும் உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் மற்றும் உனது நேசத்தை அடையும் வகையில் எனக்கு உதவும் செயல் களையும் உன்னிடம் கோருகிறேன். யா அல்லாஹ்! என்னை விடவும் என் குடும்பத்தினரை விடவும் குளிர்ந்த பானத்தை விடவும் அதிகமாக நான் உன்னை நேசிக்கும் வகையில் என்னுள் உன் நேசத்தை ஏற்படுத்து வாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅ;மதிக்க வ தஹவ்வுலி ஆகபியதிக், வ குபுஜ்அத்தி நிக்மதி(க்)க வ ஜமீஇ ஸகதிக்

பொருள்: யா அல்லாஹ்! உன் அருட் கொடை அகன்று விடுவதை விட்டும் நீ கொடுத்த ஆரோக்கியம் மாறிவிடுவதை விட்டும் உன் தண்டனையும் அனைத்துக் கோபங்களும் திடீரென வருவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க மூஜிபா(த்)தி ரஹ்மதிக்க வ அஸா இம மஃக்-குபிரதிக வல் கனீமத்த மின் குல்லி பிர்ரின் வஸ் ஸலாமத்த மின் குல்லி இஸ்மின்(வ்)வல் குபௌஸ பில் ஜன்னதி வந் நஜாத மினந் நார்

பொருள்: யா அல்லாஹ்! உனது அருளுக்கும் உனது மன்னிப்புக்கும் காரணமாய் உள்ள அனைத்தையும் உன்னிடம் நான் கோருகிறேன். எல்லா நன்மைகளையும் அரிதாக் கருதி செயல்படுத்தும் பாக்கியத்தையும் அனைத்துப் பாவங்களில் இருந்து ஈடேற்றத்தையும் சுவனப் பேற்றையும் நரகத்திலிருந்து விடுதலையும் உன்னிடம் கோருகிறேன்.

உச்சரிப்iபு: அல்லாஹும்ம லா ததஃ லீ தன்பன் இல்லா ஃகஃபர்தஹு வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹு வலா தைனன் இல்லா களைத்தஹு வலா ஹாஜத்தன் ஃபீஹா லக்க ரிளன் இல்லா களைத்தஹா யா அர்ஹமர் ராஹிமீன்

பொருள்: யா அல்லாஹ்! என்னுடைய எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் இருக்காதே! எனது எந்தக் கவலையையும் அகற்றி மகிழ்ச்சி ஏற்படுத்தாமல் விடாதே! எனது எந்தக் கடனையும் அடைக்காது விட்டுவைக்காதே! கருணையாளர்களிலே கருணைமிக்கோனே! உனக்கு திருப்தியாக உள்ள என் எந்தத் தேவையையும் நிறைவேற்றாமல் விடாதே!

உச்சரிப்பு: அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுள்மன் கஸீரன் வலா யஃ-ஃபிருத் துனூப இல்லா அன்த்த ஃபக்ஃ-ஃபிர் லீ மஃக்பிரதன் (ம்) மின் இன்திக்க வர்ஹம்னீ இன்னக அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்

பொருள்: யாஅல்லாஹ்! திண்ணமாக நான் என் ஆன்மாவுக்கு அதிகப்படியாக அநீதி இழைத்து விட்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பார் யாருமில்லை. எனவே உன் சார்பாக என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! திண்ணமாக நீ பெரும் மன்னிப்பாளனும் கருணையாளனும் ஆவாய்!

உச்சரிப்பு: யா முகல்லிபல் குலூபி ஸபித் கல்;பீ அலா தீனிக்

பொருள்: இதயங்களை புரட்டுபவனே! என் இதயத்தை உன் தீனில் நிலைப்படுத்து வாயாக!

உச்சரிப்பு: அல்லாஹும்ம ஆத்தினா குபித் துன்யா ஹஸனதன் (வ்)வ குபில் ஆகிரத்தி ஹஸனதன் (வ்)வக்கினா அதாபந் நார்

பொருள்: யா அல்லாஹ்! எங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் நன்மை வழங்குவாயாக! மேலும் நரகத்தின் வேதனையை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக!

தூங்கச் செல்லும்போது ஓதுவது

உச்சரிப்பு: பிஸ்மிகல்லாஹும்மஅமூத்துவ அஹ்யா

பொருள்: யாஅல்லாஹ்! உனது பெயர் கொண்டே நான் தூக்கத்திற்குச் செல்கிறேன்., விழித்தெழுகிறேன்,,

காலையில் விழித்ததும் ஓதும் துஆ

உச்சரிப்பு: அல்லாஹும்ம பிக அஸ்பஹ்னா வ பிக அம்ஸைனா வ பிக நஹ்யா வ பிக நமூது வ இலைக்கன் நுஷூர்

பொருள்: யா அல்லாஹ்! உன் பெயரைக் கொண்டே காலைப்பொழுதில் நாங்கள் ஆகிவிட்டோம்.,உன் பெயரைக் கொண்டே மாலைப் பொழுதில் ஆனோம். மேலும் உன் பெயரைக் கொண்டே உயிர் வாழ்கிறோம்., உன் பெயரைக் கொண்டே மரணமாவோம். மேலும் எழுப்பப்பட்டு வருவதும் உன் பக்கமே!

ஊர் திரும்பும்போது ஓதும் துஆ

உச்சரிப்பு: ஆயிபூன தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்

பொருள்: நாங்கள் திரும்பிவருகிறோம், பாவமன்னிப்புக் கோருகிறோம், மேலும் எங்கள் இரட்சகனை வணங்கக் கூடியவர்களாகவும் அவனைப் புகழக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்

Tuesday, September 25, 2007

தீயகுணங்கள் 2 கொடுமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: இறுதித் தீர்ப்புநாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாய் ஆகிவிடும். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
(புகாரி)

அறிவிப்பாளர் : அவ்ஸ் பின் ஷுரஹ்பீல் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: ஒருவன் ஒரு கொடுமைக்காரனுக்கு அவன் கொடுமைக்காரன் என்பதை அறிந்திருந்தும் துணைபுரிந்து வலுவூட்டினால், அவன் இஸ்லாத்தைவிட்டு வெளியேளிவிட்டான். (மிஷ்காத்)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், வறியவன் (பஞ்சைப்பராரி) என்பவன் யார்? என்று வினவினார்கள். மக்கள், எவரிடம் திர்ஹாமோ (வெள்ளி நாணயமோ) வேறெந்தப் பொருளுமோ இல்லையோ, அவரே எங்களில் வறியவர் ஆவார் என்று கூறினர். அண்ணலார் பதிலளித்தார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகையுடனும், நோன்புடனும் அல்லாஹ்விடம் ஆஜராவான். அவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான், எவர் மீதாவது இட்டுக்கட்டி அவதூறு கூறியிருப்பான், எவரேனும் ஒருவரின் செல்வததைப் பறித்துத் தின்றிருப்பான், எவரையேனும் கொன்றுவிட்டிருப்பான், எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே, அந்த அநீதிக்குள்ளானவர்கள் அனைவரிடையேயும் அவனது நன்மைகள் பங்கிடப்பட்டுவிடும். பிறகு அவனது நன்மைகள் தீர்ந்துபோய், அநீதிக்குள்ளானவர்களின் உரிமைகள் இன்னும் எஞ்சியிருந்தால் அவர்களின் பாவங்கள் அவனது கணக்கில் எழுதப்பட்டுவிடும். பிறகு, அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையில் பஞ்சைப்பராரி ஆவர். (முஸ்லிம்)


அறிவிப்பாளர் : அலீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை. (மிஷ்காத்)

கொடுமைக்காரனின் இந்த அநீதியின் காரணமாக அவனை இறைவன் பல்வேறு வகையான ஆபத்துகளில் அமைதியின்னைகளில் ஆழ்த்திவிடுகின்றான்.

தீயகுணங்கள் 1 தற்பெருமை

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது. இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார் மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?' அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: (இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும். அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
(முஸ்லிம்)

அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். (அபூதாவூத்)


நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவிலக் கேட்டேன்: இறைநம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்;துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமைநாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் என்று அண்ணலார் கூறினார்கள். (அபூதாவூத்)

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். (கருணைப் பார்வை பார்க்கமாட்டான்)

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள்: நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டிதளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா அதற்கு அண்ணலார் இல்லை நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். (எனவே இறைவனின் அருட்பார்வையை நீர் இழக்கமாட்டீர்) என்று பதிலளித்தார்கள். (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது. (புகாரி)

Tuesday, July 31, 2007

தூங்கும் முறை

தூங்கும் நேரத்தையும் நன்மை(கூலி)தரக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொழ்வதற்கு மேலே கூறப்படும் முறைப்படி நம் தூக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் தூக்கத்திலேயே நம் கால் வாசிப்பகுதியைக் கழிக்கின்றோம்

1. தூங்கி எழுந்தால் உடலுக்கு ஏற்பட்ட களைப்பு நீங்கி விடும். மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தில் தூங்க வேண்டும். நான் தூங்கும் போதும் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்த்தவனாக தூங்குகின்றேன் என்பதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.

2. முன் இரவிலே தூங்கிவிட வேண்டும், (அதாவது இஷாத்தொழுகைக்குப்பின் தூங்கி விடுவது,) இரவில் கண்விழித்து நீண்ட நேரம் விழித்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு, சுப்ஹு தொழுகைக்கும் ஆபத்து.
இஷாத்தொழுகை;குப்பின் கண் விழித்து பேசிக் கொண்டிருப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : புகாரி

3. பாதுகாப்பான இடத்தில் தூங்கவேண்டும்.
வளைத்து பாதுகாப்பில்லாத (மொட்டை) மாடியில் தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : திர்மிதி

4. ஒவ்வோரு நாளும் தூங்கும்போது அன்று செய்த செயல்களைப்பற்றி சுய பரிசோதனை செய்து (தனக்கு தானே கேள்வி கணக்கு கேட்டுக் ) கொண்டு அதற்குரிய பரிகாரத்தையும் செய்யவேண்டும் .
நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப்படும்முன் உங்களை நீங்களே கேள்வி கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.

5. ஏதாவது வஸிய்யத்து செய்ய வேண்டி இருந்தால் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் தூங்கக்கூடாது. தூக்கத்தில் உயிர் பிரிவதற்கு வாய்ப்பிருக்கின்றது.
ஏதாவது ஒரு வஸிய்யத்து செய்ய வேண்டி உள்ளவர் அவருடைய தலைமாட்டிற்கு கீழ் அந்த வஸிய்யத்தை எழுதிவைக்காமல் இரண்டு இரவை கழிக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. படுக்கை விரிப்பு விசயத்தில் அளவு கடந்து சிரமத்தை எடுத்துக் கொள்ளக்கூடாது , சாதாரணமான விருப்பில்தான் நபியவர்களும் தூங்கி இருக்கின்றார்கள்.

7. பத்து வயதடைந்த பிள்ளைகளை தனித்தனியாக பிரித்து தூங்க வைக்க வேண்டும்.
(பிள்ளைகள்) பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கை இடத்தை பிரித்து விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஆதாரம் : அஹ்மத்

8. தூங்கும் விரிப்பை சுத்தம் செய்து(உதறிக்) கொள்ளவேண்டும், காரணம் ஏதாவது நோவினை தரும் ஒன்று படுக்கை விரிப்புக்குக்கீழ் இருக்கலாம்.
உங்களில் ஒருவர் தன்படுக்கைக்கு சென்றால் தன் படுக்கை விரிப்பை உதறிக்கொள்ளட்டும். அதற்கு அடியில் என்ன இருக்கிறதென்று அவருக்கு தெரியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

9. தூங்கும் போது விளக்கை அணைத்து விடவேண்டும், கதவை மூடிவிடவேண்டும், தோல்பையை கட்டிவிட வேண்டும், பாத்திரங்களை மூடிவிடவேண்டும்.
நிச்சயமாக ஷைத்தான் மூடப்பட்ட கதவை திறக்கமாட்டான், கட்டப்பட்ட தோல்பையை அவிழ்க்கமாட்டான், மூடப்பட்ட பாத்திரத்தை திறக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

நெருப்பு உங்களின் விரோதி நீங்கள் தூங்கினால் நெருப்பை அணைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி - முஸ்லிம்

10. தூங்கும்போது வுளு செய்து கொள்வது சிறப்பாகும்.
நீங்கள் தூங்குவதற்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளு செய்துகொள்ளுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

11. தூங்குவதற்கு முன் வித்ர் தொழுகை தொழுது கொள்வது மிகவும் நல்லது. யாருக்கு இராத்(தஹஜ்ஜத்) தொழுகை தொழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள் இராத் தொழுகையை முடித்தபின் வித்ர் தொழுகையை தொழுவதே சரியானது.
எனக்கு எனது தோழர் (ஸல்) அவர்கள் மூன்று விசயத்தை வஸிய்யத்து செய்தார்கள். ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்பு பிடிக்கும்படியும், இரண்டு ரக்அத் ளுஹா தொழுகை தொழும்படியும், நான் உறங்குவதற்கு முன் வித்ரு தொழுகை தொழும்படியும் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் , ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

12. இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு தூங்கவேண்டும்
இரவுத்தொழுகை தொழவேண்டும் என்ற எண்ணத்தோடு யார் தன் தூங்குமிடத்துக்கு வந்து தூங்கி நித்திரை (அதிகரித்ததின்) காரணமாக சுப்ஹு நேரம் வரும் வரை தூங்கிவிட்டாலும் அவரின் எண்ணத்திற்கேற்ப அல்லாஹுவிடத்தில் இரவுத்தொழுகை தொழுத நன்மை எழுதப்படும், அவரின் தூக்கம் ஒரு தருமமாக ஆகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்


அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவதெல்லாம் எண்ணத்தைப் பொறுத்தே என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

13. ஒரு போர்வைக்குள் இரு ஆண்களோ, அல்லது இரு பெண்களோ ஒன்று சேர்ந்து தூங்கக்கூடாது.
ஒரே போர்வைக்குள் இரண்டு ஆண்களோ , அல்லது இரண்டு பெண்களோ நிர்வாணமாக தூங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் : முஸ்லிம்

14. தூங்குவதற்கு முன் ஓதவேண்டிய திக்ருகள்
சுப்ஹானல்லாஹ் 33 தடவை,


அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை,


அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதவேண்டும்.


ஆயத்துல் குர்ஸி, இன்னும் சூரத்துல் பகறாவின் கடைசி இரு ஆயத்துக்கள் (285, 286)
لاَ اِلَهَ إِلاَ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْـمُلْكُ وَلَهُ الْـحَمْدُ يُـحْيِ وَيُـمِيْتُ وَهُوَ حَيٌّ لاَ يَـمُوْتُ بِيَدِهِ الْـخَيْــرِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٍ .
என்று பத்து தடவை ஓத வேண்டும் ,

கையில் ஊதிய பின் சூரத்துல் இக்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன்னாஸ் இம்மூன்றையும் ஓதி தலையில் இருந்து ஆரம்பித்து முகம் மற்றும் உடம்பில் முடியுமான எல்லா இடங்களிலும் மூன்று முறை தடவுவது.
اَللَّهُمَ أَسْلَمْتُ نَفْسِيْ إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِيْ إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِيْ إلَيْكَ وَأَلجْأْتُ ظَهْرِيْ إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَى مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكَتَابِكَ الَّذِيْ أَنْزَلْتَ ، وَبِنَبِيِّكَ الَذِيْ أَرْسَلْتَ (رَوَاهُ الْبُخَارِيُ) .
என்ற பிரார்த்தனையை கடைசியாக ஓதவேண்டும், அதுவே கடைசி வார்த்தையாக இருக்கவேண்டும், இந்த துஆவை ஓதி அதே இரவில் மரணித்தால் இஸ்லாத்திலேயே மரணித்ததாக பதியப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

15. தூங்குவதற்கு முன் ஓதும் துஆ
اللَّهُمَ بِاسْـمِكَ أَمُوْتُ وَأَحْيَا

16. வலது கையை வலது கன்னத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டு வலது பக்கத்தில் சாய்ந்து தூங்க வேண்டும்.
நீ தூங்குவதற்காக உன் தூங்குமிடத்துக்கு வந்தால் தொழுகைக்கு வுளு செய்வது போல் வுளுசெய்து கொண்டு உன் வலது பக்கத்தில் தூங்கிக்கொள் என்பதாக பராஉ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி,முஸ்லிம்

17. முகம் குப்பற படுக்கக் கூடாது.
முகம் குப்புற படுத்த ஒரு மனிதனை பார்த்த நபியவர்கள் இது அல்லாஹ் கோபிக்கக் கூடிய படுக்கை என்பதாக கூறினார்கள். ஆதாரம் : அபூ தாவூத்

18. தூக்கத்தில் கெட்ட கனவுகளை கண்டால் .
தான் விரும்பாத வெறுக்கத்தக்க செய்திகளை யாராவது கனவில் கண்டால் இடது பக்கம் துப்புவது போன்று சைக்கினை செய்துவிட்டு ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்.(أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْم என்று சொல்லவேண்டும்) இதனால் அவனுக்கு எந்த ஒரு இடஞ்சலும் ஏற்படாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்


இன்னும் ஒரு அறிவிப்பில் : அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் வந்திருக்கின்றது . ஆதாரம் : புகாரி , முஸ்லிம்


இன்னும் ஒரு அறிவிப்பில் : படுத்த பக்கத்தை விட்டுவிட்டு மறு பகக்கம் திரும்பி படுக்கும்படி நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

19. தூக்கத்தில் நல்ல கனவுகளை கண்டால் .
உங்களில் ஒருவர் தான் விரும்பக்கூடிய கனவை கண்டால் , நிச்சயமாக அது அல்லாஹுவிடத்தில் நின்று உள்ளதென்று (எண்ணிக்கொள்ளட்டும்) அதற்காக அல்லாஹுவை போற்றி புகழ்ந்து , அதை மற்றவர்களுக்கும் சொல்லட்டும்.
இன்னும் ஒரு அறிவிப்பில் - தான் விரும்பியவர்களுக்கு (மாத்திரம்)அறிவிக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

21. தூங்கி விழித்துதம்.
اَلْـحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَ إِلَيْهِ النُّشُوْرُ
தூக்கத்தில் இருந்து விழித்தபின் மூன்று முறை கையை கழுவிய பின் தான் கையை பாத்திரத்தினுள் நுழைக்க வேண்டும். ஊங்களில் ஒருவர் தன் தூக்கத்திலிருந்து விழித்தால் மூன்று முறை கையை கழுவும் வரைக்கும் கையை பாத்திரத்தில் நுழைவிக்கக்கூடாது அவரின் கை இரவில் எங்கிருந்தது என்பது அவருக்கு தெரியாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி

Monday, July 30, 2007

உண்ணும் முறை

இஸ்லாத்தில் உணவு உண்பதற்கும் பல வழிமுறைகள் உள்ளன, அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத் தரக்கூடிய ஒன்றாக பதியப்படும், அவைகள் பின்வருமாறு.

1. இறைவனை வணங்கி வழிபடுவதற்கு உடல் வலிமை பெறுவதற்காக இந்த உணவை உண்ணுகிறேன் என்று எண்ணி உண்பது.

2. ஹலாலான உணவையே உண்பது, குடிப்பது.
நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172)

3. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும்

4. பணிவான முறையில் அமர்ந்து உண்பது.
ஒருக்கணித்து சாய்ந்த நிலையில் நான் உண்ண மாட்டேன். நான் (அல்லாஹ்வின்) அடியான் ஒரு அடியான் உண்பதைப்போல் உண்பேன். ஒரு அடியான் உட்காருவதைப்போல் உட்காருவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

5. உணவை பார்க்கும் நேரத்தில் இந்த துஆவை ஓத வேண்டும்.
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَأَطْعِمْنَا خَيْـرًا مِنْهُ

6. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக( பிஸ்மில்லாஹ் என்று)கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أََوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:அபூதாவூத்

பிஸ்மில்லாஹ் சொல்வதின் பிரயோசனங்கள் பின் வருமாறு:
1. சாப்பிடும் போது ஷைத்தான் நம்முடன் சேர மாட்டான்.
2. நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய நன்மை கிடைக்கும்.
3. அதில் அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுகின்றது.
4. அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படுவதால் அதில் அல்லாஹ் அருள் புரிகின்றான்

7. வலது கையால் உண்ணவேண்டும்.
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷைத்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி , அபூதாவூத்

இடது கையால் சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவுகள்:
1. ஷைத்தான் நம்முடன் சேர்ந்து கொள்கிறான்.
2. ஷைத்தானின் செயல்களுக்கு ஒப்பாகிறது,
3. அல்லாஹ்வின் அருள் இறங்காது.
4. பெருமையின் அடையாளம்.
5. நபியவர்களின் நடைமுறைக்கு மாற்றமான நடைமுறை.

8. சாப்பிடும் போது நம்பக்கத்தில் உள்ளதையே சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடுவதுதான் நபிவழியும் ஒழுக்கமான நடைமுறையுமாகும்,
நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா(ரலி)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

9. பாத்திரத்தின் ஓரத்திலிருந்து சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். பாத்திரத்தின் நடுவிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது.
(அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின் )ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின் ) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

10. சாப்பிடும் போது மற்றவர்களை நோட்டமிடக்கூடாது அது அவர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தும் .

11. மற்றவர்களுக்கு அருவருப்பு தரும் செயலை செய்யக்கூடாது. உதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பாத்திரத்திற்குள் கையை உதறுவது, வாயை சுத்தம் செய்வது இன்னும் இது போன்ற செயல்கள் .

12. விரிப்புக்கு மேல் உணவை வைத்து சாப்பிட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மேஜைக்கு மேல் வைத்து உணவை உண்ணவுமில்லை, சிறு பாத்திரத்தில் உண்ணவுமில்லை, இன்னும் நபியவர்களுக்கு மெல்லிய ரொட்டி சுடப்படவுமில்லை என்று (கதாதா -ரலி-அவர்கள் கூறிய போது)எப்படி நபியவர்கள் சாப்பிட்டார்கள்? என நான் கதாதா (ரலி) அவர்களிடம் கேட்டேன் இந்த விருப்புக்கள் மீதுதான் என கதாதா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் : ஷமாயிலுத் திர்மிதி

13. உணவில் வீண்விரயம் பண்ணக்கூடாது.

14. உணவில் பெருமை அடிக்கக் கூடாது.
பெருமை இல்லாமலும், வீண்விரயம் செய்யாமலும், தான தருமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள், இன்னும் உண்ணுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்,நஸாயி

15. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும்.
உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம் , அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்)அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

16. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது.
ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி

17. தனக்கு கிடைத்த உணவை பொருந்திக்கொள்ள வேண்டும் உணவை குறைகூறக்கூடாது , விருப்பமாக இருந்தால் உண்பது, விருப்பம் இல்லாவிட்டால் விட்டு விடுவது.
எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

உணவை குறைகூறுவது அல்லாஹ்வின் அருளை அவமதிப்பதாக கருதப்படும், அது பெருமையின் அடையாளமாகும்.

18. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும்.
உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

19. உணவில் ஊதக்கூடாது (உணவு, பானம்)
(உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள.; ஆதாரம் : திர்மிதி

20. முன்று முறடாக பானங்களை குடிப்பது நபிவழியாகும் .
நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம்

21. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ கூடாது .
தங்கம் , வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள் , மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி

22. வயிறு புடைக்க எல்லைமீறி உண்ணக்கூடாது.
ஆதமுடைய மகன் நிரப்பும் பாத்திரத்தில் மிகவும் கெட்டது அவன் தன் வயிற்றை நிரப்புவது. ஆதமுடைய மகன் தன் முதுகெலும்பை நிமிர்த்திக் கொள்வதற்கு சில பிடி உணவே போதுமானது. அதை அவனால் சுமந்து கொள்ள முடியாவிட்டால் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கை உணவுக்காகவும், மூன்றில் ஒரு பங்கை தண்ணீருக்காவும், மூன்றில் ஒரு பங்கை தன் உள்ளத்தின் அமைதிக்காகவும் விட்டுவிடட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

23. சமைக்காமல் பச்சையாக வெங்காயம் இன்னும் வெள்ளைப்பூடை சாப்பிட்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்குள் செல்லக்கூடாது, சமைத்து சாப்பிட்டால் பரவாயில்லை.
யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

24. ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் போது அல்லாஹ்வின் அருள் அதில் இறங்குகின்றது.
இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச்சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா


25. விருந்துக்கு அழைக்கப்படாதவரை விருந்து உண்பதற்கு கூட்டிக்கொன்டு சென்றால் விருந்து கொடுப்பவரிடம் அனுமதி பெற்ற பின்புதான் விருந்தில் உட்கார வைக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அளைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்;கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து)உண்பதற்கு உத்தரவழியுங்கள், நீங்கள் (உத்தரவழிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். ஆதாரம்:-புகாரி, முஸ்லிம்

26. மற்றவர்களோடு சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி அதிகம் அதிகம் அள்ளி உண்ணக்கூடாது.
உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னுமாஜா

27. உணவில் அல்லது குடிபானத்தில் ஈ விழுந்தால் அதை உள்ளே நன்றாக அமுக்கி விட்டு பின்பு அதை வெளியெறிந்து விட்டு உண்ண வேண்டும்.
ஊங்கள் ஒருவரின் (உணவுப்)பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு அறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத்

28. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும், சுன்னத்தான நோன்பு நோற்றிருந்தாலும் விட்டுவிட வேண்டும்.
உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையழிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்

29. ஆரம்பத்தில் பிஸ்மி சொல்ல மறந்து விட்டால்
بِسْمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று ஓதவேண்டும்.

உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக் கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ என்று கூறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அபூதாவூத்

30. சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேண்டும்.
உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் ஆதாரம் : முஸ்லிம்

31. விருந்தளித்தவர் அல்லது நமக்கு ஏதாவது உணவைக்கொடுத்தவருக்கு செய்யும் பிரார்த்தனை.
اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِـيْ وَاسْقِ مَنْ سَقَانِـيْ
ஆதாரம் : அபூதாவூத்

32. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் பிரார்த்தனை
اَلْـحَمْدُ للهِ كَثِيْـرًا طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا.
اَلْـحَمْدِ للهِ الَّذِيْ أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.
யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

Wednesday, July 25, 2007

மருத்துவ முகாம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வருமுன் காப்போம் இதயம் காப்போம்

அன்பார்ந்த சகோதரர்களே குலசேகரன் பட்டிணத்தில் உள்ள மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் மனிதநேயத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்திய இஸ்லாம் அதன் இஸ்லாமிய தாவாவின் ஒரு பகுதியான மருத்துவ முகாம் இந்தியாவிலேயே புகழ் பெற்ற தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு குலசேகரன் பட்டிணம் ஏகத்துவ இளைஞர் பேரவை யேடு JAQH மற்றும் T M M K என்ற அமைப்புகளின் தலைமையில் நடக்க உள்ளது.

தேதி : ஆகஸ்ட் 18 – 19 கிழமை : சனி – ஞாயிறு
இடம் : மஸ்ஜித்துர் ரஹ்மான் ஊர் : குலசேகரன் பட்டிணம்

சந்தர்பமும், சக்தியும் உள்ளவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

மேலும்

ஆகஸ்ட் 18 சனிக்கிழமை இரவு

கோவை செய்யது அவர்கள்

சமூக தீமையை ஒழித்த இஸ்லாம்

என்ற தலைப்பிலும்,


ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை இரவு

கோவை ஐயூப் அவர்கள்

மறுமைப் பயணம்

என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளனர்.

அன்பார்ந்த சகோதரர்களே கலந்து கொண்டு ஈருலக பயன்பெற வேண்டுகின்றோம்

தொடர்புக்கு
9842163737
9444200867
9865641986
இவண்
மஸ்ஜித்துர் ரஹ்மான் & JAQH நிர்வாகம்
குலசேகரன் பட்டிணம்

Tuesday, July 24, 2007

பிரார்த்தனை செய்யும் முறை

பிரார்த்தனை ஒரு வணக்கம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள், நாம் எல்லா உதவிகளையும் அல்லாஹுவிடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். உரியமுறையில் நாம் அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். (அல்முஃமின் -60)

ஆகவே நாம் செய்யும் பிரார்த்தனைகளை நபி (ஸல்)அவர்கள் கற்றுத்தந்த முறையில் செய்ய வேண்டும், அவைகள் பின்வருமாறு.

1. மனத்தூய்மையோடு பிரார்த்தனை செய்ய வேண்டும் -இறைவன் இவ்வாறு திருமறையில் கூறுகின்றான்.

ஆகவே காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து)அழையுங்கள். (அல் முஃமின்-14)

2. அல்லாஹ் இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான் என்ற உறுதியோடு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அல்லாஹ் இந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு (எனக்கு) விடையளிப்பான் என்ற நோக்கத்தோடு அல்லாஹ்வை பிரார்த்தியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

என் அடியான் என்னை எப்படி நினைக்கின்றானோ அப்படி நான் நடந்து கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் அறிவித்தார்கள். ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி

3. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல் ஜின்-18)

நீ கேட்டால் அல்லாஹ்விடத்திலேயே கேள், இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

4. அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறிய பின் பிரார்த்தனையைஆரம்பித்து அதைக்கொண்டே முடிக்கவும் வேண்டும்.

நபி (ஸல்)அவர்கள் மீது ஸலவாத்து சொல்லப்படும் வரைக்கும் ஒவ்வொரு பிரார்த்தனையும் திரையிடப்பட்டிருக்கின்றது என்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.

5. உள்ளம் சம்மந்தப்பட்டநிலையில் பிரார்த்தனை செய்யவேண்டும்.
விடை கிடைக்குமென்ற உறுதியோடு பிரார்த்தனை செய்யுங்கள், இன்னும் தெரிந்து கொள்ளுங்கள், மறதியான உள்ளத்தால் (உள்ளம் சம்மந்தப்படாமல் நாவால் மாத்திரம்)கேட்கப்படும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

6. அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை ஞாபகித்து தான் செய்த பாவத்தை ஏற்றுக்கொண்டவராக பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இறைவா!நீ எனது இறைவன், நீயே என்னை படைத்தாய், நான் உனது அடிமை, நான் எனக்கு முடியுமான அளவுக்கு உனக்களித்த உடன்படிக்கையின் மீது இருப்பேன், வணங்கப்படுவதற்கு தகுதியுள்ளவன் உன்னைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று ஒரு அடியான் சொல்வது பாவமன்னிப்பில் உயர்ந்த பாவமன்னிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

7. பயபக்தியோடும் மனமுடைந்த நிலையிலும், அல்லாஹ்விடத்திலுள்ள சுவனத்தை ஆதரவு வைத்த நிலையிலும், நரகத்திலிருந்து பயந்த நிலையிலும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அவர்களின் விலாக்கள் படுக்ககைகளை விட்டு (தூக்கத்திலிருந்து)விலகி விடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும் ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள். (அஸ்ஸஜ்தா-16)


8. அல்லாஹ்விடத்தில் தன்னுடைய தேவையையும், இயலாமையையும், பலவீனத்தையும் நாம் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

(நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், 'நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக்கிருபையாளன்' என்று (பிரார்த்தனை செய்து )அழைத்த போது. (அல் அன்பியா - 83)

ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நியைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து 'என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ , வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்'என்று (பிரார்த்தனை செய்த) போது. (அல் அன்பியா-89)

9. சந்தோசமான நேரத்திலும் , கஷ்டமான நேரத்திலும் இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.

கஷ்டம், இன்னும் துன்பமுள்ள நேரத்தில் தன்னுடைய பிரார்;த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று யார் விரும்புகின்றாரோ அவர் சநதோசமான நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி

சந்தோசமான நேரத்தில் அல்லாஹ்விடம் நீ அறிமுகமாகிக் கொள் கஷ்டமான நேரத்தில் அல்லாஹ் உன்னை தெரிந்து கொள்வான் என நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களுக்கு வஸிய்யத்து செய்தார்கள்.

10. பிரார்த்தனை செய்யும் போது கிப்லாவை முன்னோக்கி பிரார்த்திப்பது மேலானது.

மழை தேடி பிரார்த்திப்பதற்காக தொழும் இடத்திற்கு நபி (ஸல்)அவர்கள் வெளியேறிச்சென்று கிப்லாவை முன்னோக்கி மழை தேடி பிரார்த்தனை செய்தார்கள், பின்பு தன் போர்வையை புரட்டினார்கள். ஆதாரம் : புகாரி

11. சுத்தமாக இருப்பது நல்லது.

வுளு செய்வதற்கு நபி (ஸல்)அவர்கள் தண்ணீரை கேட்டார்கள் பின்பு தன் இரு கரங்களையும் உயர்த்தினார்கள் யா அல்லாஹ்! (இறைவா!) உபைத் அபூ ஆமிரின் (பிழைகளை) மன்னித்தருள்வாயாக, நான் நபியவர்களின் இரு கக்கத்தின் வெண்மையையும் பார்த்தேன், இறைவா! உன் மனித படைப்புகளில் அதிகமானவர்களுக்கு மேல் அவரை (உயர்த்தி) வைப்பாயாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள். ஆதாரம் : புகாரி

12. இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களைக்கொண்டு அல்லாஹ்விடத்தில் உதவி(வஸீலா) தேடுவது, இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட வஸீலா மூன்று வகைப்படும்.

1. அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது.

2. நல் அமல்களைக் காட்டி பிரார்த்திப்பது.

3. உயிருடன் இருக்கும் நல்லடியார்களிடம் பிரார்த்திக்கும் படி வேண்டுவது.

13. அல்லாஹ்விடத்தில் மாத்திரம் உதவி தேடுதல்.

உன்னையே வணங்குகிறோம் இன்னும் உன்னிடத்திலேயே உதவியும் தேடுகிறோம். (அல் பாத்திஹா - 4)

இன்னும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடத்திலேயே உதவி தேடு என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

14. அவசரப்படாமல் பிரார்த்தனை செய்ய வேண்டும், (அதாவது நான் பிரார்த்தனை செய்தேன் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்வது.)

அவசரப்படாமல் உங்களில் ஒருவர் பிரார்த்திக்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

15. இரு கைகளையும் ஏந்திப்பிரார்த்திப்பது.

தனது இரு கைகளையும் ஏந்தி நபி (ஸல்) அவர்கள் பிரார்தத்தனை செய்தார்கள் நான் அவர்களின் கக்கத்தின் வெண்மையை பார்த்தேன் என அபூ மூஸா அல் அஸ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி

நிச்சயமாக அல்லாஹ் வெட்கமுள்ளவனும் சங்கையுள்ளவனுமாவான், ஒரு மனிதன் தன் இரு கரங்களையும் உயர்த்தி பிரார்த்தனை செய்தால் அதை ஒன்றுமில்லாமல் வெறுங்கையோடு திருப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என ஸல்மானுல் பாரிஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் : திர்மிதி

16. நபியவர்கள் மூலம் தெரிந்து கொண்ட பிரார்த்தனைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வது நல்லது.

17. பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு பொருத்தமான சிறப்புக்குரிய நேரங்களையும், காலங்களையும் பயன் படுத்திக்கொள்வது.

1. ரமளான் மாதம்.
2. லைலத்துல் கத்ர் இரவு.
3. இரவின் கடைசிப்பகுதி.
4. பர்லான தொழுகைகளின் இறுதிப்பகுதி.
5. பாங்கு இகாமத்துக்கு மத்தியில்.
6. அரஃபா தினத்தில்.
7. ஜும்ஆவடைய நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்.
8. கடமையான தொழுகைக்கு அதான் சொல்லப்படும் போது.
9. யுத்த நேரத்தில்.
18. முதலில் தனக்காக பிரார்த்தனை செய்து பின்பு மற்றவர்களுக்காக பிரர்த்திப்பது.
19. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணமாக உள்ள திக்ருகளை தேர்ந்தெடுத்து பிரார்த்திப்பது .

உ-ம் அல்லாஹ்வின் திருநாமங்களைக்கொண்டு பிரார்த்திப்பது, நாம் செய்த நல்ல அமல்களை முன் வைத்து பிரார்த்திப்பது, இன்னும்
لاَاِلَهَ إِلاأَنْتَ سُبْحَانَكَ إِني كُنْتُ مِنَ الظَّالمِيْنَ .

பொருள் : தூய்மையானவனே! நிச்சயமாக எனக்கு நானே அனியாயம் செய்து விட்டேன், வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிரவேறு யாரும் இல்லை.
என்ற திருக்கலிமாவை ஓதி பிரார்த்தனை செய்தல் , யூனுஸ் (அலை) அவர்கள் மீனுடைய வயிற்றில் இருக்கும் போது இந்த வார்த்தைகளைக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள் அல்லாஹ் அப்பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான், இன்னும் இதுபோன்ற வார்த்தைகள்.

20. சிறப்புக்குரிய நேரங்களில் பிரார்த்தனை செய்வது.
உ-ம் : சுஜூது செய்யும் போது

உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது செய்யும் நேரம்,ஆகவே சுஜூது செய்யும் நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

சுஜூதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் (அதில் கேட்கப்படும் பிரர்த்தனை ஏற்றுக்கொள்ளபடுவதற்கு) தகுதியுள்ளது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

தொழுகையில் சூரத்துல்ஃபாத்திஹா ஓதிமுடிந்ததும் ஆமீன்சொல்லும் போது.
இமாம் ஆமீன் சொன்னால் நீங்களும் ஆமீன் சொல்லுங்கள் (மலக்குகளும் ஆமீன் சொல்கிறார்கள்) யாருடைய ஆமீன் மலக்கு மார்களின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவருடைய முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.. ஆதாரம் : புகாரி

சேவல் கூவும் போது.

சேவல் கூவுவதை கேட்டால் அல்லாஹ்விடம் அருளைக்கேளுங்கள், அது மலக்கை காணும்போதுதான் கூவுகின்றது என்பதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

பிரயாணி தன் பிரயாணத்தின் போதும், நோன்பாளி நோன்பு திறக்கும் போதும். ஆதாரம் :- பைஹகி

மற்ற சகோதரருக்காக பிரார்த்திக்கும் போது.

ஒருவன் தன் முஸ்லிம் சகோதரனுக்காக மறைமுகமாக கேட்கும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான், மற்ற சகோதரனுக்காக பிரார்த்தனை செய்யும் போதல்லாம் அதற்கென்று நியமிக்கப்பட்ட மலக்கு அவனுடைய தலையருகில் நின்று கொண்டு இறைவா! இப்பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக, இன்னும் அல்லாஹ் உனக்கும் இதுபோல் தருவானாக எனவும் பிரார்த்திப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்

21. பிரார்த்தனையில் எல்லைகடக்காமல் இருக்க வேண்டும்.

(ஆகவே முஃமின்களே!)உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7-55)

எல்லை கடந்து பிரார்த்தனை செய்வதற்கு சில உதாரணங்கள்
அல்லாஹ் அல்லாத பெயர்களைக்கொண்டு அழைத்துப் பிரார்த்திப்பது.

எல்லை கடந்து சத்தத்தை உயர்த்துவது.

மெட்டெடுத்து பிரார்த்திப்பது, இன்னும் இது போன்றவைகள்.

22. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

விலக்கப்பட்ட உணவு, உடை, பானங்களை உகயோகிப்பதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

நன்மையை ஏவாமலும், தீமையை தடுக்காமலும் இருப்பது.
என் உயிர் எந்த இறைவனிடம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக்கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள் இல்லையென்றால் இறைவன் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான் பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி

இரத்தபந்தங்களின் உறவை துண்டிப்பதற்கு அல்லது பாவம் செய்வதற்கு பிரார்த்திப்பது.

யாராவது ஒரு முஸ்லிம் பாவம் செய்வதற்கோ அல்லது சொந்த பந்தத்தை துண்டிப்பதற்கோ பிரார்த்தனை செய்யாமல் (மற்ற விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்தால்)அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்கின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், இதைக்கேட்ட ஒரு நபித்தோழர் அப்படியென்றால் நாம் அதிகம் பிரார்த்தனை செய்வோம் என்றார்!அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் அதிகம் இருக்கின்றது என்றார்கள். ஆதாரம் : திர்மிதி

பாவம் மன்னிக்கப்படுவதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்று அல்லாஹ்வுக்கு ஷிர்க் வைக்காமல் இருக்க வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)மாட்டான், இதனைத்தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான். (4-48)

அன்புச்சகோதரர்களே! பிரார்த்தனை என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று, பிரார்த்தனையை அல்லாஹ்விடத்தில் மாத்திரம் கேட்க வேண்டும், அல்லாஹ்வின் படைப்புகளில் எந்தப்படைப்பிடத்திலாவது பிரார்த்தனை செய்தால் அது ஷிர்க் என்னும் பெரும் குற்றமாகிவிடும். எந்த ஒரு தேவையாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்னும் குர்ஆன் வசனங்களின் நம்பரை மாத்திரம் இங்கு குறிப்பிடுகின்றேன் அதை குர்ஆனில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,

அல் பகரா-186, ஆலு இம்ரான்-135, அல் அஃராஃப்-55, அந்நம்லு-62, அஸ்ஸஜ்தா-16, அல் ஜுமர்-53,அல் முஃமின்-60.
அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியை பின்பற்றி நடப்பதற்கு வாய்ப்பளிப்பானாக.

Monday, June 25, 2007

உண்மையான முஸ்லிம்

நயவஞ்சகம் கொள்ளமாட்டார் உண்மை முஸ்லிம் நயவஞ்சகம், ஏமாற்றுதல், வஞ்சப் புகழ்ச்சி போன்ற தன்மைகளை விட்டும் விலகியிருப்பார். அவரது மார்க்க போதனை இத்தகைய ஆபத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும். அதிகமான மக்கள் வஞ்சப் புகழ்ச்சியில் சிக்கிக் கொண்டு தங்களை அறியாமலேயே நயவஞ்சகம் என்ற அழிவில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் பனூ ஆமிர் என்ற கூட்டத்தினர் புகழ்ச்சியாகக் கூறினர்: ''நீங்கள் எங்களது தலைவர்.'' உடனே நபி (ஸல்) அவர்கள் ''தலைவன் அல்லாஹ் மட்டுமே'' என்று கூறினார்கள். அக்கூட்டத்தினர், ''நீங்கள் எங்களில் மிகவும் சிறப்புக்குரியவர், மகத்தான அந்தஸ்துடையவர்'' என்று கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ''உங்களது இந்த வார்த்தைகளை முழுமையாகவோ, அதன் ஒரு பகுதியையோ கூறிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஷைத்தானுக்கு துணை போகாதீர்கள்.

நிச்சயமாக அல்லாஹ் என்னை எந்த அந்தஸ்தில் படைத்துள்ளானோ அதைவிட மேலாக நீங்கள் என்னை உயர்த்துவதை நான் விரும்பவில்லை. நான் முஹம்மது இப்னு அப்துல்லாஹ், அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவேன்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

நபி (ஸல்) அவர்கள்தான் முஸ்லிம்களின் தலைவர், அவர்களில் சிறப்பானவர் என்பது சந்தேகத்துக்கிடமின்றி இருந்தாலும் புகழ்வதை அனுமதித்தால் மக்கள் வரம்பு மீறிச் சென்று புகழுக்குத் தகுதியற்றவர்களை மேன்மைக்குரியவர், தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து விடுவார்கள் என்பதால்தான், தன்னைப் புகழ்ந்தவர்களை தடுத்தார்கள். மேலும், இம்மாதிரியான புகழ்ச்சிக்கு இடமளித்தால் அது மக்களை நயவஞ்சகத்தனம் என்ற அழிவின்பால் சேர்த்துவிடும்.

இவ்வாறு புகழ்வது பரிசுத்தமான இஸ்லாமின் அடிப்படைக்கு முரண்பட்டதாகும்.

புகழ்பாடுவது, புகழ்பவனை நயவஞ்சகத் தன்மையை நோக்கி இழுத்துச் சென்றுவிடும். அவ்வாறே புகழப்படுபவனை பெருமைக்கு ஆளாக்கிவிடும் என்பதால்தான் நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்கள் மனிதர்களின் முகத்துக்கு எதிரே புகழ்வதை தடுப்பவர்களாக இருந்தார்கள்.

அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை அவரது முகத்துக்கு முன்னால் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ''நீர் நாசமடைவீராக! உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர். உமது தோழரின் கழுத்தை அறுத்து விட்டீர்'' என மூன்றுமுறை கூறினார்கள்.

பிறகு, ''எவரேனும் தனது சகோதரரை அவசியம் புகழ்வதாக இருந்தால் அவரைப் பற்றி இவ்வாறு கருதுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன் என்று (மட்டும்) அவர் சொல்லட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே அதைக் கூறவேண்டும். அல்லாஹ்வுக்கு முன் யாரையும் தூய்மையானவர் என்று (எவரும்) கூறவேண்டாம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

கண்டிப்பாக புகழவேண்டிய நிலை ஏற்பட்டால் அந்தப் புகழ், புகழப்படுபவனுக்கு உண்மையில் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும். வரம்பு மீறாமல் கூடுதல் குறைவின்றி நடுநிலையுடன் அமைய வேண்டும். அதன்மூலமே சமூகத்தை பொய், நயவஞ்சகம், ஏமாற்றுதல், முகஸ்துதி போன்ற இழி குணங்களிலிருந்து தூய்மைப்படுத்த முடியும்.

ரஜா (ரஹ்) அவர்கள் மிஹஜன் (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்களும் மிஹஜனும் மஸ்ஜிதில் இருந்தபோது தொழுது ருகூவு, ஸுஜூது செய்து கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவர் குறித்து இவர் யார்? என வினவினார்கள். மிஹஜன் (ரழி) அவரை அதிகம் புகழ ஆரம்பித்து ''இவர் இப்படி, இப்படி சிறப்புக்குரியவர்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் ''போதும். நிறுத்திக்கொள்! அவர் கேட்கும்படி கூறாதே. அவரை அழித்து விடுவாய்'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

முஸ்னத் அஹமத் கிரந்தத்தின் ஓர் அறிவிப்பில் கூறப்படுவதாவது: ''அல்லாஹ்வின் தூதரே! இம்மனிதர் மதீனா வாசிகளில் மிக அழகியவர் என்றோ மதீனாவாசிகளில் மிக அதிகமாகத் தொழுபவர்'' என்றோ கூறியபோது நபி (ஸல்) அவர்கள் ''அவர் கேட்கும்படி புகழாதே. அவரை நீ அழித்துவிடுவாய்'' என இரண்டு அல்லது மூன்றுமுறை கூறிவிட்டு நீங்கள் (எல்லா விஷயங்களிலும்) இலகுவானதையே நாடப்பட்ட சமுதாயத்தினர்.'' என்றும் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'ஒருவரின் முன்னிலையில் அவரைப் புகழ்வது அழிவை ஏற்படுத்தும்' என்று கூறினார்கள். ஏனெனில் அவ்வாறு தன்னை புகழ்வதைக் கேட்கும்போது மனித மனம் அதை மிகவும் விரும்பும். அதைக் கேட்பவர் அகந்தையும், ஆணவமும் கொண்டு மக்களிடமிருந்து தனது முகத்தை திருப்பிக் கொள்வார்.

புகழ்பவர்களில் சிலர் ஏமாற்றுபவர்களாகவும், பொய்யர்களாகவும், நயவஞ்சகர்களாகவும் இருப்பதால் மீண்டும் மீண்டும் புகழும்போது புகழைக் கேட்பவர்கள் அதில் இன்பமடைய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் வரம்பு மீறிய புகழைத் தவிர அறிவுரையையும், விமர்சனத்தையும் விரும்பமாட்டார்கள். அப்போது அவர்களது அதிகாரத்தில் சத்தியம் வீணடிக்கப்படும், நீதம் அழிக்கப்படும், மாண்புகள் குழி தோண்டிப் புதைக்கப்படும், சமூகம் சீரழிவைச் சந்திக்கும். இவ்வாறு ஆட்சி அதிகாரங்கள் உடையவர்களை சுற்றி நின்று புகழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

நயவஞ்சகமாகப் புகழ்பவர்கள் இஸ்லாமிய சமூகத்தில் அதிகரித்து, நயவஞ்சகமும் முகஸ்துதியும் அதிகரித்துவிடக் கூடாது என்பதால் நபி (ஸல்) அவர்கள் புகழ்பவனின் முகத்தில் மண்ணை வீசுமாறு தங்களது தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

ஒரு மனிதர் ஆட்சியாளர்களில் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசியபோது மிக்தாத் (ரழி) அவர்கள் அம்மனிதரின் முகத்தை நோக்கி மண்ணை அள்ளி வீசிவிட்டுக் கூறினார்கள்: ''அதிகமதிகம் புகழ்பவர்களை நீங்கள் கண்டால் அவர்களது முகத்தில் மண்ணை எடுத்து வீசுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபித்தோழர்கள் இவ்வாறு புகழ்ப்படுவதைக் கேட்டு மிகவும் வெறுப்படைந்தார்கள். தாம் அழிந்து விடுவோம் என்ற அச்சத்தில் அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு தகுதியுடையவர்களாக இருந்தும் அதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயல்களி லிருந்து விலகி இஸ்லாமின் தூய பண்புகளைப் பெற்றிருந்தார்கள்.

நாபிஃ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களை ''மனிதர்களில் மிகச் சிறந்தவரே! அல்லது மனிதர்களில் மிகச் சிறந்தவரின் மகனே!'' என்று அழைத்தார். இப்னு உமர் (ரழி) அவர்கள் ''நான் மனிதர்களில் சிறந்தவனுமல்ல, மிகச் சிறந்த மனிதரின் மகனுமல்ல.

அல்லாஹ்வின் அடிமைகளில் ஒருவன். அல்லாஹ்வின் அருளை ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு மனிதனை அழிக்காதவரை நீங்கள் ஓயமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். (ஹயாத்துஸ் ஸஹாபா)

இது நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்து அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் அவர்களது வழிமுறையை முழுமையாக பின்பற்றிய பிரபல நபித்தோழரின் விவேகமான பதிலாகும். நயவஞ்சகத் தன்மையை வெற்றி கொள்வதற்கென நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேர்வழியைப் பின்பற்றிய நபித்தோழர்கள் இது விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக மனத்தூய்மையுடன் செய்யப்படும் அமல்களுக்கும், நயவஞ்சகத்தனத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மிடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாக அறிந்திருந்தார்கள்.

இப்னு உமர் (ரழி) அவர்களிடம் சிலர்: ''அதிகாரத்தில் உள்ளவர்களிடம் நாங்கள் செல்லும்போது அவர்களிடமிருந்து வெளியேறிய பின் எதைக் கூறுவோமோ அதற்கு மாற்றமாக அவர்களிடம் பேசுகிறோம்'' என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் ''நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இதை நயவஞ்சகத்தனம் எனக் கருதினோம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

முகஸ்துதியிலிருந்து விலகியிருப்பார் உண்மை முஸ்லிம் முகஸ்துதியிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். ஏனெனில், அவை நற்கூலியை அழித்து நற்செயல்களை வீணாக்கிவிடும்.

மகத்தான இரட்சகனின் முன்னிலையில் நிற்கும் மறுமை நாளில் இழிவை தேடித்தரும். இத்தூய மார்க்கத்தின் அடிப்படைகளில் தலையாயது, மனிதனின் சொல்லும் செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மனத் தூய்மையுடன் அமைந்திருக்க வேண்டும் என்பதாகும்.

ஜின்களையும் மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 52:56)

எந்த வணக்கமும் அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்பட்டால் மட்டுமே அங்கீகரிக்கப்படும்.

(எனினும் அவர்களுக்கோ) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி (மற்ற மார்க்கங்களைப்) புறக்கணித்து அல்லாஹ் ஒருவனையே வணங்கி தொழுகையையும் கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறேயன்றி (வேறெதுவும் இத்தூதர் மூலம்) ஏவப்படவில்லை. இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கமாகும். (அல்குர்ஆன் 98:5)

தங்களது பொருளை ஏழைகளுக்கு செலவு செய்யும்போது அதை சொல்லிக் காண்பித்து ஏழைகளின் கண்ணியத்தை காயப்படுத்துபவர்களை அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கிறான். முகஸ்துதி கலந்துவிட்டால் அவ்வணக்கம் வீணாகிவிடும்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களுடைய தர்மத்தை (ப்பெற்றவனுக்கு) இகழ்ச்சியையும், துன்பத்தையும் (செய்வது) கொண்டு (அதன் பலனை) வீணாக்கிவிடாதீர்கள். அவ்வாறு (செய்பவன்) அல்லாஹ்வையும் கடைசி நாளையும் விசுவாசம் கொள்ளாது (தான் தர்மவான் என்பதைப் பிற) மனிதர்களுக்கு அறிவிக்கும் பொருட்டு தன் பொருளை செலவு செய்து (வீணாக்கி) விட்டவனுக்கு ஒப்பாவான். அவனுடைய உதாரணம்; ஒரு வழுக்கைப் பாறையை ஒத்திருக்கின்றது. அதன்மீது மண் படிந்தது. எனினும் ஒரு பெரும் மழை பொழிந்து அதை (க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தானத்தை அவனுடைய பெருமை அழித்துவிடும்). ஆகவே, அவர்கள் (தானம்) செய்ததிலிருந்து யாதொரு பலனையும் (மறுமையில்) அடைய மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:264)

ஏழைகளுக்கு தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது, அந்த தர்மத்தின் நற்பலன்களை வழுக்குப் பாறையில் ஒட்டியிருந்த மணலை பெரும் மழை அடித்துச் சென்றுவிடுவதுபோல அழித்து விடுகிறது. புகழுக்காக தர்மம் செய்பவர் அல்லாஹ்வின் நேர்வழிக்குத் தகுதியற்றவர், அவர் நிராகரிப்பாளர்களுடன் இணைக்கப்பட்டு விடுவார் என்பதை இந்த வசனத்தின் பிற்பகுதி சுட்டிக் காட்டுகிறது.

''மேலும் அல்லாஹ் (தன்னை) நிராகரிக்கும் ஜனங்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.''

முகஸ்துதிக்காரர்கள், மனிதர்கள் தங்களைப் புகழவேண்டும் என்பதற்காக நல் அமல்களைச் செய்வார்கள். மகத்தான இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடமாட்டார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான்...

அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர் களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே அன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:142)

அவர்கள் அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்கிதன் காரணமாக அவர்களது அமல்கள் மறுக்கப்படும். தனது திருப்தியை நாடி, தூயமனதுடன் செய்யப்படும் அமல்களை மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்கிறான்.

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான், ''நான் இணைவைப்பவர்களின் இணையை விட்டும் தேவையற்றவன். ஒருவன் ஏதேனும் அமல் செய்து என்னுடன் மற்றெவரையும் கூட்டாக்கினால் நான் அவனை அவனது இணைவைக்கும் செயலுடன் விட்டு விடுகிறேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)


தூய இதயத்துடன் வருவது தவிர வேறெந்த செல்வமும் மக்களும் பலனளிக்காத அந்நாளில் முகஸ்துதிக்காரர்கள் சந்திக்கும் இழிவையும் வேதனையையும் நபி (ஸல்) அவர்கள் விவரித்துக் கூறினார்கள்:

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன். ''மறுமை நாளில் முதன் முதலாக தீர்ப்பளிக்கப் படுபவர்களில் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட தியாகி. அவன் கொண்டு வரப்பட்டு அவனுக்கு உலகில் அருளப்பட்ட அருட்கொடைகள் எடுத்துரைக்கப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் அதைக் கொண்டு என்ன அமல்களைச் செய்தாய் என்று கேட்கப்படும். ''அவன் உனக்காக போர் செய்து ஷஹீதாக்கப்பட்டேன்'' என்று கூறுவான். அல்லாஹ் ''நீ பொய் சொல்கிறாய். நீ வீரன் என்று புகழப்படுவதற்காக போர் செய்தாய். அவ்வாறு உலகில் சொல்லப்பட்டு விட்டது'' என்று கூறிவிடுவான். பிறகு, முகம் குப்புற இழுத்துச் சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.
மற்றொரு மனிதன் கல்வியைக் கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தான். குர்ஆனை ஓதியிருந்தான். அவன் கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அதை ஒப்புக் கொள்வான். அல்லாஹ் ''அதன்மூலம் என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்பான். அவன் ''நான் கல்வியை கற்று பிறருக்குக் கற்றுக் கொடுத்தேன். உன் திருப்திக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் ''நீ பொய் சொல்கிறாய். நீ ஆலிம் என்று புகழப்படுவதற்காக கல்வி கற்றாய், காரி என்று புகழப்படுவதற்காக குர்ஆனை ஓதினாய், அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது'' என்று சொல்வான். பிறகு அவனை முகம்குப்புற நரகில் வீசி எறியுமாறு உத்தரவிடப்படும்.

இன்னொரு மனிதன், அல்லாஹ் அவனுக்கு உலகில் பல்வேறு அருட்கொடைகளை வழங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தியிருந்தான். அவனைக் கொண்டு வரப்படும். அவனுக்கு அல்லாஹ்வின் நிஃமத்துகள் நினைவூட்டப்படும். அவன் ஒப்புக் கொள்வான். அவனிடம் ''அதைக்கொண்டு என்ன அமல்களைச் செய்தாய்?'' என்று கேட்கப்படும். அவன் ''எந்த வழிகளில் செலவு செய்வது உனக்குப் பிரியமானதோ அந்த அனைத்து வழிகளிலும் நான் செலவு செய்தேன்'' என்று கூறுவான். ''அல்லாஹ் நீ பொய் சொல்கிறாய், நீ கொடைவள்ளல் என புகழப்படுவதற்காக செய்தாய், அவ்வாறு உலகில் சொல்லப்பட்டுவிட்டது'' என்று கூறுவான். பிறகு அவனை முகம்குப்புற இழுத்துச்சென்று நரகில் வீசுமாறு உத்தரவிடப்படும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த நபிமொழி தர்மம், வீரம், ஞானம் போன்ற நல் அமல்களில் தீய எண்ணங்களைக் கலந்து விடுவதால் ஏற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது. தீய எண்ணத்துடன் அமல் செய்வதால் மகத்தான அந்நாளில் அகில உலக மக்களுக்கு முன்னால் அகிலங்களின் இரட்சகனால் கடும் தண்டனை வழங்கப்படுவது எவ்வளவு பெரிய இழிவு? அவர்கள் செய்த அமல்கள் தூய எண்ணத்துடன் அமைந்திருந்தால் எத்தகு நன்மைகளைப் பெற்று சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்களோ! அந்த அனைத்து நன்மைகளும் உரியப்பட்டு மாபெரும் இழிவும், கேவலமும் சூழ்ந்த நிலையில் முகங்குப்புற நரகில் வீசி எறியப்படுவ தென்பது ஈடுசெய்யவே இயலாத மகத்தான இழப்பல்லவா?

மார்க்கச் சட்டங்களை அறிந்த பேணுதலுள்ள முஸ்லிம் தனது அனைத்து செயலிலும் முகஸ்துதியிலிருந்து விலகி, அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே இலட்சியமாகக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் பெருமைக்காக அமல் செய்கிறாரோ அல்லாஹ் அவரை மறுமையில் இழிவுபடுத்துவான். எவர் முகஸ்துதிக்காக அமல் செய்வாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரது குற்றங்களை பகிரங்கப்படுத்துவான்.'' (ஸஹீஹுல் புகாரி)

உறுதிமிக்கவர் உண்மை முஸ்லிம் நேர்வழி பெற்றவராக, தெளிவான சிந்தனை உடையவராக இருப்பார். சத்தியத்தைவிட்டும் முகம் திருப்புவதை, சத்தியத்தை மறைப்பதை, பொய் கூறி மக்களை ஏமாற்றுவதை அவர் விரும்பமாட்டார். சத்தியத்தின் மீது நிலைத்திருப்பதில் ஏற்படும் சிரமங்கள், துன்பங்களின் காரணமாக சங்கடமோ, சஞ்சலமோ, தடுமாற்றமோ இல்லாமல் சமூக வாழ்வில் அதை எளிதாக எதிர்கொள்வார்.

சத்தியத்தில் நிலைத்திருப்பது, அவரது வாழ்வில் விரும்பினால் கைக்கொள்வது, விரும்பாவிட்டால் விட்டுவிடுவது என்பது போன்ற சடங்கல்ல. மாறாக, ஈமானுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்ற, அல்லாஹ் இன்னும் அவனது தூதரால் கட்டளையிடப்பட்ட மிக அவசியமான பண்பாகும்.

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக மலக்குகள் வந்து (அவர்களை நோக்கி) ''நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவனபதியைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும்,
''நாங்கள் அவ்வுலக வாழ்க்கையிலும் உங்களுக்கு உதவியாக இருந்தோம்; மறுமையிலும் (உங்களுக்கு உதவியாளர்களே) சுவனபதியில் உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு உண்டு. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்'' என்றும் ''பாவங்களை மன்னித்து கிருபை செய்வோனின் விருந்தாளியாக அதில் (தங்கி) இருங்கள்'' என்றும் (மலக்குகள்) கூறுவார்கள். (அல்குர்ஆன் 41:30,31,32)

உறுதியுடன் நிலைத்திருக்கும் இறை விசுவாசிகளுக்குத்தான் எவ்வளவு மகத்தான நற்கூலி! மறுமை நாளில் அவர்களின் அந்தஸ்து எவ்வளவு மகத்தானது! அவர்களுக்கு மலக்குகள் அளிக்கும் வரவேற்பும் நற்செய்தியும் எவ்வளவு அழகானது என்பதைப் பாருங்கள்!

ஏனெனில் உறுதியாக நிலைத்திருப்பது கடினமான காரியமாகும். இது அல்லாஹ்வின் திருப்தியை நோக்கமாகக் கொண்ட இறையச்சமுள்ள உண்மை முஃமின்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். அவர்கள் தீமைகளுக்கு அடிபணியமாட்டார்கள். இவ்வுலகில் மனிதனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இன்பங்கள், ஆட்சி அதிகாரங்கள், பட்டம் பதவி, செல்வங்களுக்கும் அடிபணிய மாட்டார்கள். இதன் காரணமாகத்தான் அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான நன்மைகளை அடைந்து கொள்வார்கள்.

''நிலையாக இருப்பது'' என்பதன் பொருளை நபி (ஸல்) அவர்கள் மிக ஆழ்ந்து அறிந்ததன் காரணமாகத்தான் அது அவர்களை மிகவும் பாதித்தது. இதுவே நிலையாக இருப்பதென்பது சிரமமானது என்பதற்கு ஆதாரமாகும்.

(நபியே!) உமக்கு ஏவப்பட்ட பிரகாரம் நீரும், உம்முடன் இருக்கும் இணைவைத்து வணங்குவதிலிருந்து விலகியவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள்... (அல்குர்ஆன் 11:112)

இந்த திருவசனத்தின் விரிவுரையில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ''திருகுர்ஆனின் அனைத்து வசனங்களிலும் இந்த வசனத்தைப் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு மிகுந்த கடினத்தையும், சிரமத்தையும் அளித்த வேறெந்த வசனமும் கிடையாது'' என்று குறிப்பிடுகிறார்கள்.

அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் தலைமுடி விரைவாக நரைத்துவிட்டதன் காரணத்தை விசாரித்தபோது நபி (ஸல்) அவர்கள், ''என்னை ஹுது (என்ற சூராவு)ம் அது போன்ற கருத்துடைய சூராக்களும் எனக்கு நரையை ஏற்படுத்திவிட்டது'' என்று கூறி மேற்கண்ட வசனத்தை சுட்டிக்காட்டினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

எனினும் எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அதன் மீது) உறுதியாக நிலைத்துமிருந்தார்களோ... (அல்குர்ஆன் 41:30)

அல்லாஹ்வின் இந்த சொல்லுக்கு ஒப்பாகவே ரசூலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கு உபதேசித்தார்கள். ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ''அல்லாஹ்வின் தூதரே! இனிமேல் இஸ்லாமைப் பற்றி யாரிடமும் கேட்கத் தேவைப்படாத வகையில் எனக்கு ஓர் உபதேசத்தைக் கூறுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''ஆமன்த்து பில்லாஹ் (அல்லாஹ்வை விசுவாசித்தேன்) என்று சொல்லி அதில் உறுதியாக இரு'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இமாம் முஸ்லிம் (ரழி) அவர்கள் தனது தொகுப்பில் 'உறுதியாக இருப்பது' என்று தலைப்பிடுவதற்குப் பதிலாக 'இஸ்லாமியப் பண்புகளை ஒருங்கிணைக்கும் தன்மை' எனத் தலைப்பிட்டு, அதன் கீழ் இந்நபி மொழியைக் குறிப்பிடுகிறார்கள்.

ஏனெனில் 'உறுதியாக இருப்பது' என்பதில்தான் பல்வேறு மாண்புகளும், நற்குணங்களும் ஒன்றிணைந்துள்ளன.

'இஸ்திகாமத்' உறுதியாயிருப்பதில் முதன்மையான பண்பாகிறது முஸ்லிம் ஒரே முகத்துடன் மனிதர்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். வஞ்சகர்கள், மோசடிக்காரர்களைப் போன்று நிறம் மாறக்கூடாது என்பதாகும்.

நபி (ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''மனிதர்களிலேயே மிகக் கெட்டவன் இரட்டை முகமுடையவன். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நன்றி: http://www.readislam.net/idealmuslim9n.htm

Tuesday, May 15, 2007

உபரியான தொழுகைகள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

374 நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, என்னிடம் (ஏதாவது) கேள்! என்று கூறினார்கள். அதற்கு நான் சுவர்க்கத்தில் தங்களது தோழமையை வேண்டுகிறேன் என்று கூறினேன். இதுவல்லாமல் (வேறு ஏதும் கேள்!) என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், (எனக்கு) அதுவே (வேண்டும்) என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாட்டம் நிறைவேறிட அதிகம் ஸஜ்தா செய்து எனக்கு உதவி செய் என்று கூறினார்கள் என ரபீஆ இப்னு மாலிக் அறிவிக்கிறார். முஸ்லிம்

375 லுஹர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஸுப்ஹுவிற்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (ஆகிய சுன்னத் தொழுகைகளை) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

புகாரீ, முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ஜும்ஆவிற்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் என்பதும் உள்ளது.

376 ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்களைத் தவிர வேறு எதும் (ஃபர்ளைத் தவிர்த்து) தொழ மாட்டார்கள் என முஸ்லிமில் உள்ளது.

377 'லுஹர்' தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்களையும் நபி(ஸல்) அவர்கள் (தொழாமல்) விடமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

378 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டிய அளவு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் ஆர்வம் காட்டியதில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

379 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். முஸ்லிம்

380 எவர் இரவிலும் பகலிலும் (சுன்னத்தாக உள்ள) பன்னிரெண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ, அதன் காரணமாக அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு, கட்டப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில் சுன்னத்தான தொழுகை என்று உள்ளது.

381 திர்மிதீயில் 380 வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துக்கள். அதற்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள். இன்னும் மக்ரிபிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் இஷாவிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் என்பது அதிகமாக உள்ளது.

382 ''எவர் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், அதற்குப் பின்பு நான்கு ரக்அத்துகளையும் பேணித் தொழுகின்றாரோ, அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை விலக்கி விட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

383 அஸரு(தொழுகை)க்கு முன்பு எவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

384 மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள! மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது முறை கூறும் போது ''விரும்பியவர் எனக் கூறினார்கள். மக்கள் அதை (கண்டிப்பான) சுன்னத்தாக ஆக்கிக் கொள்வதை விரும்பாமல் தான் அப்படிக் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

385 இப்னு ஹிப்பானுடைய மற்றோர் அறிவிப்பில் மக்ரிபிற்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று உள்ளது.

386 சூரியன் மறைந்ததும் நாங்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தோம். (அதைக் காணும்) நபி(ஸல்) அவர்கள் அவற்றைக் கட்டாயம் தொழுதாக வேண்டும் எனக் கட்டளையிடவுமில்லை தொழக் கூடாதென எங்களுக்கு ஏவுபவர்களாகவும் இல்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

387 ''சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்களா?' என நான் கேட்கும் அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களையும் சுருக்கமாகத் தொழுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

388 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களில் 'குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் 'குல் ஹுவல்லாஹு' ஓதுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

389 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் வலப் பக்கமாகச் சாய்ந்து விட்டால் வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

390 ''உங்களில் எவரேனும் சுப்ஹுத் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால், வலப் பக்கமாக ஒருக்களித்து(சிறிது நேரம்) படுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், அஹ்மத் மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

391 ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். எவராவது காலையாகி விடும் என்று அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுது கொள்ளட்டும். அது அவர் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

392 இரவு மற்றும் பகல் தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ.

மேலும் இது இப்னு ஹிப்பானி ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

393 ஃபர்ளுத் தொழுகைகளுக்குப் பின்பு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

394 வித்ருத் தொழுகை முஸ்லிம் மீது அவசியமானதாகும். எவராவது ஐந்து ரக்அத்துக்கள் வித்ரு தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் மூன்று ரக்அத்துக்கள் தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் ஒரு ரக்அத் தொழ விரும்பினாலும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்åப் அன்சாரி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நஸாயீயில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

395 வித்ருத் தொழுகை கடமையாக்கப்பட்ட (ஃபர்ளு) தொழுகை போன்றதல்ல. ஆனால், நபி(ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட சுன்னத் ஆகும் என்று அலீ அப்னு அபீதாலிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்திலும், நஸாயீ மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

396 நபி(ஸல்) வேர்ள் ரமளான் இரவில் (பள்ளிவாசலில்) நின்று வணங்கினார்கள். பின்னர் அடுத்துவரும் இரவில் மக்கள் அவர்களை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் வெளிவரவில்லை. மேலும், உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமென நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்

397 ''அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை (உங்களின் மற்ற தொழுகைகளுக்கு) வலு சேர்க்கும் விதத்தில் கொடுத்துள்ளான். அது சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எந்தத் தொழுகை?'' என்று நாங்கள் வினவினோம். இஷாவிற்கு, ஃபஜ்ரு நேரம் வருவதற்கும் இடையிலுள்ள வித்ருத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என காரிஜா இப்னு ஹுதாஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

398 அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. அது 397வது ஹதீஸ் போன்றதாகும். அபூ தாவூத். இது லய்யின் (ளஃயீப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

400 அபூஹுரைரா(ரலி) வாயிலாக அஹமதில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் 399வது ஹதீஸ் ளயீஃப் என்பதற்குச் சாட்சியாக உள்ளது.

401 நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும், அதுவல்லாத நாட்களிலும் பதினோரு ரக்அத்திற்கு மேல் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வித்ருக்கு முன்பு தாங்கள் தூங்குகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு, ஆயிஷாவே! என்னுடைய இரண்டு கண்களும் தூங்கும். என்னுடைய இதயம் தூங்காது என்று பதில் கூறினார்களென ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

402 நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்துக்கள் தொழுவார்கள். இன்னும் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இவை தாம் பதிமூன்று ரக்அத்களாகும் என்று புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.

403 இன்னும் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரு ஐந்து தொழுவார்கள். இறுதியிலன்றி இடையில் எங்கும் அமர மாட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புகாரீ, முஸ்லிம்

404 நபி(ஸல்) அவர்கள் இரவு முழுவதும் வித்ருத் தொழுதுள்ளார்கள். அவர்களது வித்ரு சஹ்ரு நேரத்தில் முடிவடையும் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரீ, முஸ்லிம்

405 அப்துல்லாஹ்வே! இரவில் நின்று வணங்கிக் கொண்டிருந்து, பின்னர் இரவில் நின்று வணங்குவதை விட்டு விட்ட இன்னாரைப் போன்று ஆகிவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் (எச்சரிக்கையாகக்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.

406 குர்ஆன் வழங்கப்பட்டவர்களே! வித்ருத் தொழுங்கள். (ஏனெனில்) அல்லாஹ் ஒருவன் அவன் ஒற்றையையே விரும்புகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

407 வித்ரை இரவில் உங்களுடைய தொழுகைகளில் இறுதியானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

408 ஒரே இரவில் இரண்டு வித்ருகள் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என தல்க் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, மற்றும் திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

409 நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் சப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா, குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹு வல்லாஹு அஹத் ஆகிய சூராக்களை ஓதுவார்கள் என உபய இப்னு கலஃப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ

அவற்றின் இறுதியில் தான் ஸலாம் கொடுப்பார்கள் என்பதும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

410 அபூ தாவூத் மற்றும் திர்மிதீயுடைய (மற்றோர்) அறிவிப்பில் 409வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு ரக்அத்திற்கும் ஒரு சூராவையும் மற்றும் இறுதி ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்வதத்தைன் சூராவையும் ஓதுவார்கள் (அத்தியாயம் 113, 114) என்றும் உள்ளது.

411 நீங்கள் காலை பொழுதையடையும் முன்பு வித்ருத் தொழுது விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

412 எவரேனும் சுப்ஹை அடைந்தும் வித்ரு தொழவில்லை என்றால் அவருக்கு வித்ரு இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு ஹிப்பானில் இடம் பெற்றுள்ளது.

413 ''எவரொருவர் வித்ருத் தொழாமல் தூங்கிவிட்டாரோ அல்லது அதை மறந்துவிட்டாரோ அவர் சுப்ஹை அடைந்ததும் அல்லது ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

414 இரவின் இறுதிப் பகுதியில் எழ முடியாதென எவர் அஞ்சுகிறாரோ அவர் இரவின் முதல் பகுதியில் வித்ரைத் தொழுது கொள்ளட்டும். எவருக்கு இரவின் இறுதிப்பகுதியில் எழும் நம்பிக்கை உள்ளதோ அவர் வித்ரை இரவின் இறுதிப்பகுதியில் தொழுது கொள்ளட்டும். ஏனெனில், இரவின் இறுதிப் பகுதியின் தொழுகை (இரவு பகல் இரண்டின் வானவர்களாலும்) வருகை தரப்படும். அதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்

415 ஃபஜ்ர் உதித்துவிட்டால் இரவுத் தொழுகை மற்றும் வித்ருடைய எல்லா நேரமும் போய்விட்டது. நீங்கள் ஃபஜ்ர் உதிப்பதற்கு முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

416 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அல்லாஹ் நாடிய அளவு அதிகப்படுத்தவும் செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

417 ஆயிஷா(ரலி) வாயிலாக அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹா தொழுவார்களா? என்று கேட்கப்பட்டதற்கு, பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால் தவிர (தொழுதது) இல்லை என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

418 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. நிச்சயமாக இப்போது நான் இந்த (தொழுகையைத்) தொழுகின்றேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

419 வெயிலின் காரணமாக சூடேறிய மணல் (ஒட்டகக் குட்டிகள் கால் வைக்க முடியாத அளவு வெப்பமாக) உள்ள நேரமே அவ்வாபீன் தொழுகைக்குரிய நேரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

420 எவர் ளுஹாவை பன்னிரெண்டு ரக்அத்துக்களாகத் தொழுதாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது கரீப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

421 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் நுழைந்தார்கள். பின்னர் எட்டு ரக்அத்துக்கள் ளுஹா தொழுதார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, May 11, 2007

உபரியான தர்மங்கள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில் அல்லாஹ் தன்னுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன்னுடைய வலக் கை செய்யும் தர்மத்தை தனது இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி

எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இதன் அறிவிப்புத் தொடர் பலஹீனமானது

மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன்னுடைய சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். எவர் (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறாரோ, அல்லாஹ்வும் அவனுடைய சுயமரியாமையைப் பாதுகாக்கின்றான். எவர் (ம்டைத்ததை வைத்துப்) போதுமென்ற மனத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருந்து வருகிறாரோ, அல்லாஹ்வும் அவருக்குப் போதுமென்ற மனத்தையளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் , அஹ்மத்

இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மம் செய்யுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது? என்று கூறினார். அதற்கு, நீ அதை உனது செலவுக்கு வைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றுமொன்றுள்ளது என்று கூறினார். அதற்கு, நீ உன்னுடைய பிள்ளைகளுக்கு செலவிடு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றுமுள்ளது என்றார். அதற்கு, நீ அதை என்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றொன்றும் உள்ளது என்றார். அதற்கு, அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
, நஸயீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் வீட்டு உணவை வீணடிக்காமல் செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதை சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நன்மையுண்டு. அதைப் பாதுகாக்கும் கரு¥லக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் எவர் காரணத்தாலும் மற்றவருக்குரிய நன்மை குறைக்கப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டார்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன. அவற்றை தர்மம் செய்வதை விட நான் விரும்பினேன். ஆனால் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (நான் செலவிட விரும்புவோரை விட) அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டார். (நான் என்ன செய்வது) என்று கேட்டார். அதற்கு, மஸ்வூத் உண்மையே சொன்னார். நீ செலவிட விரும்புவோரை விட, உன்னுடைய கணவன் மற்றும் உன் பிள்ளைகள் தாம் அதிகம் உரிமை பெற்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

எவன் மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றானோ, அவன் மறுமை நாளில் தனது முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களின் பொருட்களை எவன் யாசித்துக் கொண்டே இருக்கின்றானோ, அவன் நெருப்புக்கங்கையோ கேட்கின்றனர். இனி விரும்பியவர் கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகுக் கட்டைகளை கட்டி, அதை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுத்து விடுகிறதெனில், அதுவே மக்களிடம் கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவிக்கிறார்.

அதிகாரம் உள்ளவரிடமும் தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர மற்ற யாசகங்கள், ஒரு மனிதன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : www.tamilislam.com