சபைகளில் விசாலமாக இடமளியுங்கள் என்று கூறினால் அதற்கு செவிசாய்த்து இடமளிக்கவேண்டும். எழுந்து விடுங்கள் என்று கூறினால் எழுந்து விடவேண்டும். அல்லாஹ்விடம் அதற்கான நற்கூலிகள் உண்டு.
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் ''நகர்ந்து இடங்கொடுங்கள்'' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால் நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்' என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)
அல்லாஹ்வைப் புகழ்ந்து ஆரம்பிக்காத எந்தப்பேச்சும் குறையுடையதே. அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத், அஹ்மத்
சபைக்கு வரும் பொழுதும், போகும் பொழுதும் ஸலாம் சொல்ல வேண்டும்.
ஒரு சபைக்கு வருபவர் அங்கிருப்பவருக்கு ஸலாம் சொல்லட்டும். அங்கிருந்து செல்லும் போதும் அவர் ஸலாம் கூறட்டும் முந்தய (ஸலாம்) பிந்தயதைவிட சிறந்ததல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்
அவையில் வந்தமர்தல் எங்கே இடம் இருக்கிறதோ அங்கேதான் அமரவேண்டும்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தால் எங்கே இடம் இருக்கின்றதோ அங்கே அமர்ந்து கொள்வோம். முஸ்லிம், அபூதாவூத் : ஜாபிர் பின் ஸமுரா(ரலி)
ஒருவரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமரக்கூடாது. ஒருவர் அமர்ந்திருந்த இடத்தில் தான் அமர்வதற்காக அவரை எழுப்பிவிடலாகாது. என்றாலும் நெருக்கமாக அமர்ந்து (அவருக்கு) இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்குவான் என்று நபி(ஸல்) கூறினார்கள். புகாரி, முஸ்லிம்: இப்னு உமர்(ரலி)
எழுந்து சென்றுவிட்டு திரும்பினால் அவர்தான் அவ்விடத்தில் (அமர்வதற்கு)அதிக உரிமை படைத்தவர் ஆவார். முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா
சிறந்த சபை
அதிகம் பேரைக் கொள்ளக்கூடிய சபைதான் சபைகளில் மிகவும் சிறந்த சபையாகும். அபூஸயீத்(ரலி) : அபூதாவூத்
அவையில் அமர்வதின் ஒழுங்கு
சேர்ந்து அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் போய் ஒருவர் அமரக்கூடாது. அபூதாவூத் : அம்ருபின் ஹுஐப்(ரலி)
வட்டமாக கூடியுள்ள ஒரு சபையின் நடுவில் உட்கார்பவனை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளனர். அபூதாவூத் : ஹுதைஃபா(ரலி)
அவைக்குச் சென்றால் நெருங்கி அமர்தல்
நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாயிலில் அமர்ந்து கொண்டிருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றுவிட்டார். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்த சபையில் ஒரு இடை வெளியைக் கண்டபோது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவர் சபையின் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி(ஸல்) அவர்கள் உரையை முடித்ததும் இம் மூன்று பேர்களைப்பற்றி கூறட்டுமா என்று கேட்டார்கள். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். இரண்டாமவரே வெட்கப்பட்டுக் கொண்டு (கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும்; வெட்கப்பட்டுக் கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தி சென்று விட்டார் எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தி விட்டான் என்றார்கள்.
புகாரி: அபூவாக்கிதில் லைப்தி(ரலி)
முன் வரிசையில் அமர்வதற்காக மக்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்துக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் மக்களை தாண்டிக் கொண்டு முன்னேறி சென்றார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் உட்கார்வீராக மக்களுக்கு சிரமம் கொடுக்கிறீர்கள் மேலும் தாமதமாக வந்திருக்கின்றீர் என்றார்கள். அஹ்மத், அபூதாவூத், நஸயீ : அப்துல்லாஹ் பின் புஸ்ர்(ரலி)
முக்கிய காரணம் இருப்பின் மக்களை தாண்டிச் செல்லலாம்
நான் நபி(ஸல்)அவர்களின் பின்னால் மதீனாவில் அஸர் தொழுதேன். தொழுத பின் நபி(ஸல்)அவர்கள் எழுந்து விரைவாக மக்களை தாண்டி தனது மனைவியரின் இல்லங்களில் சிலவற்றிர்க்குச் சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செல்வதை கண்ட மக்கள் அஞ்சிவிட்டார்கள் நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்து மக்கள் இவ்வாறு அஞ்சியிருப்பதையும் கண்டதும் என் வசம் சிறிது தங்கம் இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அது என்னிடம் இருப்பதை வெறுத்தேன். ஆகவே அதை (தர்மமாக) விநியோகிக்குமாறு கட்டளையிட்டேன் (அதற்காக வீட்டிற்கு சென்றேன்) என்று கூறினார்கள். புகாரி, நஸயீ : உக்பா பின் அல்ஹாரித்(ரலி)
தூக்கம் வந்தால் இடம்மாறி அமரலாம்
பள்ளியில் இருக்கும் போது உங்களில் ஒருவர் தூக்கம் வருவதாக உணர்ந்தால் அவர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர (மாறி அமர) வேண்டும். அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, பைஹகீ : இப்னு உமர்(ரலி)
உரைக்கிடையில் ஒருவர் குறிக்கிட்டால் உரை முடிந்தபின் பதிலளிக்கலாம்
ஒரு அவையில் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு நாட்டுப்புறத்து அரபி வந்து மறுமை நாள் எப்போது? எனக்கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது உரையை தொடர்ந்தனர். பிறகு தமது உரையை முடித்துக் கொண்டு மறுமையைப் பற்றி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். பின்பு அவரிடம் அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் என்றார்கள். அதற்கவர் அது எவ்வாறு பாழ்படுத்தப்படும் என்றார். அதற்கு நபி(ஸல்) எந்தக்காரியமானாலும் அது தகுதியற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும் என்றார்கள்.
புகாரி(ஹதீஸின் சுருக்கம்) : அபூஹுரைரா(ரலி)
சபை இறைவனின் கண்காணிப்பில் உள்ளதை உணர்தல்
சபை இறைவனின் கண்காணிப்பில்தான் இருக்கின்றது என்பதை உணர்ந்து இறைவனுக்குப் பொருத்தமான பேச்சையே பேசவேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை. இன்னும் ஐந்து போர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன். (58:7)
அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரும் சிறந்த ஆலோசனைகள்
(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (4:114)
புறக்கணிக்கப்பட வேண்டிய சபை
(முஃமின்களே!) 'அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம் என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே. நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (4:140)
(நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்; (இக்கட்டளையைவிட்டு) ஷைத்தான் உம்மை மறக்கும்படிச் செய்துவிட்டால், நினைவு வந்ததும், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6:68)
அவையை முடிக்கும் போது
நபி(ஸல்) அவர்கள் அவையின் முடிவில் அங்கிருந்து எழ நாடினால்
''சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன்(ல்)லாயிலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வ அத்தூபு இலைக்க''
என்று கூறுவார்கள்.
அப்பொழுது ஒருவர் நபி(ஸல்)அவர்களிடம் யா ரஸுலுல்லாஹ் தாங்கள் (அவைமுடிவில்) இதற்கு முன் சொல்லாதவைகளை இப்பொழுது கூறினீர்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) இது அவையில் நிகழும் குற்றங்களுக்குப் பரிகாரம் ஆகும் என்றார்கள். அபூபரஜா(ரலி) : அபுதாவூத்
Friday, January 19, 2007
வதந்திகளை நம்பாதீர்கள்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
பனூ முஸ்தலக் போர் நடந்து முடிந்திருந்த நேரம் அது. பனூ முஸ்தலக் குலத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உவந்தெடுத்து, தழுவிக் கொண்டிருந்த நேரம். அவ்வாறு தழுவிக் கொண்டவர்களின் தலைவரான அல் ஹாரித் என்பவரிடம், 'நீங்கள் உங்களது பகுதிக்குச் சென்று விடுங்கள், பின்பு ஒரு நாள் உங்களிடம் ஜகாத் பொருளை வசூல் செய்வதற்காக ஒருவரை அனுப்பி வைக்கின்றேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அனுப்பி வைத்தார்கள்.
சில காலங்கள் கழித்து அல் வலீத் பின் உக்பா (ரலி) என்ற நபித்தோழரை, இந்த பனூ ஹாரிதாக்களிடம் சென்று ஜகாத் பொருட்களைப் பெற்று வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள், வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, பனூ ஹாரிதாக்கள் மதீனாவைத் தாக்கும் எண்ணத்துடன் படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதனைப் பற்றி தீர ஆய்வு செய்வோம் என்ற நிலையை எடுக்காமல், பயத்துடன் மதீனாவிற்கு வந்து விட்ட அவர், பனூ ஹாரிதாக்கள் ஜகாத் பொருட்களைக் கொடுக்க மறுத்து விட்டதுடன், தன்னைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி விடுகின்றார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுங்கோபங் கொண்டவர்களாக, பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் இறங்குவதற்காக, மிகப் பெரிய முஸ்லிம் படை ஒன்றையும் திரட்டி விடுகின்றார்கள். இப்பொழுது இரண்டு படைகளும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் சந்திக்கக் காத்திருக்கின்றன.
இப்பொழுது அல் ஹாரிதா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப் பட்டார்கள்.
ஹாரிதாவைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
ஹாரிதாவே.. நீங்கள் ஏன் ஜகாத் கொடுக்க மறுத்து விட்டீர்கள்?
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எங்களிடம் ஜகாத் பொருட்களை வசூல் செய்வதற்கென்று யாரும் உங்களிடம் இருந்து வரவில்லை. எனவே, அதனைக் கொடுப்பதற்காகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்.
இந்த நேரத்தில் தான் மேற்கண்ட வசனத்தை இறைவன் இறக்கி அருளினான் :
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
அல் ஹாரித் (ரலி) அவர்களிடம் இருக்கின்ற நியாயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுறுத்துவதோடு, முன்பின் ஆய்வு செய்யாமல் வெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருப்பதோடு, இறையச்சம் கொண்டவர்களுக்கும் இந்த வசனம் எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பதோடு, எதுவொரு விஷயமானாலும் தீர்க்கமாக விசாரிக்காது எந்தவொரு எதிர் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றது.
இறைவன் விடுத்த இந்த எச்சரிக்கை குறித்து நம்மில் எத்தனை பேர் கவனத்துடன் செயல்படுகின்றோம்? நமக்கிடையே உலா வரக் கூடிய வதந்திகளை உண்மை என்று நம்பி நம்மில் எத்தனை பேர், விசாரிக்காது எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டு, பின் உண்மையை உணர்ந்த பின்பு அதற்காக வருத்தப்படுவோர் எத்தனை பேர், அதற்குள் நிகழ்ந்து விட்ட அத்தனை அம்சங்களும் சொந்த சகோதர சகோதரிகளின் மனங்களைக் காயப்படுத்தி, பின் வாழ்க்கையில் என்றுமே முகத்தில் விழிக்க இயலாத அளவு நிலைமை விபரீதமாகச் சென்று விடுகின்ற நிலைமைகளும் நம்மில் இருந்து வருவதை நாம் அறிவோம்.
நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும், நாம் அப்படியே பிறருக்குச் சொல்வது கிடையாது, கிடைத்த தகவல்களில் சில ஒட்டுக்களை வைத்து, அதனை சிறிது மாற்றி மாற்றி இறுதியாகச் சம்பந்தப்பட்டவரை அது அடையும் போது, அதனை அவர் கேட்டு விட்டு கடினமான வார்த்தைகளை உதிர்ப்பதோடு, இன்னும் உடனடியாக பெரும் பாவங்களில் இறங்கி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவதையும், புறம் பேசுவதில் ஆரம்பித்து, அடிதடிகளில் கூட முடியும் சூழ்நிலைகள் உருவாகி விடுவதையும், இன்னும் தான் கேட்ட அந்தப் பொய்ச் செய்தி ஒன்றே அவரது எதிர்நடவடிக்கைக்கான நியாயமாக்கப்படுவதையும் நாம் காணலாம்.
இவ்வாறான சூழ்நிலைகளில், குறிப்பிட்ட அந்த சகோதரரை அல்லது சகோதரியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அவரைக் கண்ட மாத்திரமே அந்தப் பொய்ச் செய்தியின் விளைவாக இவரிடம் உண்டாகி இருக்கின்ற வெறுப்புத் தான் முன்னிற்குமே ஒழிய, இஸ்லாமிய சகோதரத்துவம் முன்னிற்காது, ஏன் ஸலாம் சொல்லாமல் கூட ஒதுங்கி விடக் கூடியவர்களாக மாறி விடுவார்கள்.
குறிப்பிட்ட அந்த சகோதரரின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் சந்தேகப் பார்வையும், இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதனால் விளைந்ததல்ல, யாரோ ஒருவர் வந்து இன்ன மனிதர் உன்னைப் பற்றி இவ்வாறு இவ்வாறு கூறினார் என்று கூறியதன் விளைவேயாகும்.
பல காலங்களாக வளர்ந்து விட்ட வெறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப் படுகொலைகள் உண்மையை அறிய விடாமல் நம்மைப் பிற்படுத்துவதோடு, குறிப்பிட்ட நபரை ஏசிய, மற்றும் திட்டித் தீர்த்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது எவ்வாறு?
ஒருமுறை ஒரு செயலைச் செய்து விட்டாகி விட்டதென்றால், அதனைத் திரும்ப மீட்டுவது என்பது இயலாத காரியமாகி விடும். அதற்காக எவ்வளவு வருந்தினாலும் சரியே, அதற்காக சிரமமெடுத்து பிரயாச்சித்தம் தேடினாலும், ஒருமுறை நம்மால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு அகலுவது என்பதும், நம்மால் பாதிக்கப்பட்டவரின் மனதில் இருந்து துடைத்தெறிவது என்பதும் இயலாத காரியமாகும். இவை யாவும் வதந்திகளால், பொய்யான குற்றச்சாட்டுக்களால் விளைந்தவைகளாகும்.
நாம் எதனைக் கேள்விப்பட்டமோ, அதனை அப்படியே பிறருக்கு எடுத்துரைப்பது என்பதில் எத்தனை கவனமாகச் செயல்படுகின்றோம். இன்றைய தலைமுறையினரின் கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பாதுகாத்து வரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கும் பட்சத்தில், என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போமா?
அன்றைய தலைமுறையினர் போல நாம் அவற்றைப் பாதுகாத்திருக்க மாட்டோம், தவிர நம்மிடையே ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் நம் கைவசம் இருந்திருக்காது என்பதே நிதர்சனமாகும்.
வதந்தி அல்லது தவறான தகவலைப் பெற்றதன் மூலம், ஒரு இறைத்தூதரே இன்னொரு சமூகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டப்பட்டிருக்கு மென்றால், அதன் மூலம் ஒன்றுமே அறியாத - பாவத்திலும் பழியிலும் சம்பந்தப்படாத மக்கள் அழியவும், இன்னும் நடைபெற இருந்த அந்தப் போரின் மூலமாக சில முஸ்லிம்கள் கூட அழிந்து போகக் கூடிய நிலையும் உருவானதென்று சொன்னால், நம்முடைய நிலைகள் எவ்வாறு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறான பொய்யான தகவல்கள் தான் மனித மனங்களில் ஏற்படுகின்ற உளநோய்களுக்கான மூல காரணமாக அமைந்து விடுகின்றது. அது இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் வேற்றுமையையும், வெறுப்புணர்வையும், பகைமையையும் வளர்த்து விடுகின்றது. இறுதியாக இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதே இல்லாமலாகி விடுகின்ற சூழலுக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டு விடுகின்றது.
எனவே தான் அல்லாஹ், தனது திருமறையில் இவ்வாறான பொய்ச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறு, நம்மைப் பணிக்கின்றான். எச்சரிக்கவும் செய்கின்றான். எந்தவித பரிந்துரைகளும் எடுபடாத அந்த மறுமை நாளிலே வல்ல அல்லாஹ்வின் முன்பதாக நாம் நிற்கும் நிலையில், இந்த செயலுக்கான எந்த காரணத்தை அவன் முன் வைக்கப் போகின்றோம்?
அன்றைய தினம் நாம் கேட்கக் கூடிய பாவ மன்னிப்புகள் எடுபடுமா? அல்லது மன்னிப்பைப் பெற்றுத் தருமா?
எனவே, இத்தகைய கொடுமையான செயல்களில் வீழ்ந்து விடாமல் இருக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்னும் யாராவது உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வருவாராகில், அந்த செய்தி பற்றிய உண்மைத் தன்மையை அறியாத வரைக்கும், அது பற்றி எந்த கருத்தையும் அல்லது அதற்கான எந்த எதிர்நடவடிக்கையையும் எடுத்து விடாதீர்கள்.
நன்றி தமிழ் இஸ்லாம்.காம்
பனூ முஸ்தலக் போர் நடந்து முடிந்திருந்த நேரம் அது. பனூ முஸ்தலக் குலத்தவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உவந்தெடுத்து, தழுவிக் கொண்டிருந்த நேரம். அவ்வாறு தழுவிக் கொண்டவர்களின் தலைவரான அல் ஹாரித் என்பவரிடம், 'நீங்கள் உங்களது பகுதிக்குச் சென்று விடுங்கள், பின்பு ஒரு நாள் உங்களிடம் ஜகாத் பொருளை வசூல் செய்வதற்காக ஒருவரை அனுப்பி வைக்கின்றேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி அனுப்பி வைத்தார்கள்.
சில காலங்கள் கழித்து அல் வலீத் பின் உக்பா (ரலி) என்ற நபித்தோழரை, இந்த பனூ ஹாரிதாக்களிடம் சென்று ஜகாத் பொருட்களைப் பெற்று வருமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட அல் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள், வழியில் சென்று கொண்டிருக்கும் பொழுது, பனூ ஹாரிதாக்கள் மதீனாவைத் தாக்கும் எண்ணத்துடன் படைகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்ட அவர், அதனைப் பற்றி தீர ஆய்வு செய்வோம் என்ற நிலையை எடுக்காமல், பயத்துடன் மதீனாவிற்கு வந்து விட்ட அவர், பனூ ஹாரிதாக்கள் ஜகாத் பொருட்களைக் கொடுக்க மறுத்து விட்டதுடன், தன்னைக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி விடுகின்றார்.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுங்கோபங் கொண்டவர்களாக, பனூ முஸ்தலக் கோத்திரத்தவர்களுக்கு எதிராக போர் நடவடிக்கைகளில் இறங்குவதற்காக, மிகப் பெரிய முஸ்லிம் படை ஒன்றையும் திரட்டி விடுகின்றார்கள். இப்பொழுது இரண்டு படைகளும் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் சந்திக்கக் காத்திருக்கின்றன.
இப்பொழுது அல் ஹாரிதா அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் கொண்டு வரப் பட்டார்கள்.
ஹாரிதாவைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள்,
ஹாரிதாவே.. நீங்கள் ஏன் ஜகாத் கொடுக்க மறுத்து விட்டீர்கள்?
இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எங்களிடம் ஜகாத் பொருட்களை வசூல் செய்வதற்கென்று யாரும் உங்களிடம் இருந்து வரவில்லை. எனவே, அதனைக் கொடுப்பதற்காகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம் என்று தெரிவித்தார்.
இந்த நேரத்தில் தான் மேற்கண்ட வசனத்தை இறைவன் இறக்கி அருளினான் :
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)
அல் ஹாரித் (ரலி) அவர்களிடம் இருக்கின்ற நியாயத்தை ஆராய்ந்து பார்க்கும்படி அறிவுறுத்துவதோடு, முன்பின் ஆய்வு செய்யாமல் வெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எச்சரிக்கையாகவும் இருப்பதோடு, இறையச்சம் கொண்டவர்களுக்கும் இந்த வசனம் எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பதோடு, எதுவொரு விஷயமானாலும் தீர்க்கமாக விசாரிக்காது எந்தவொரு எதிர் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்கின்றது.
இறைவன் விடுத்த இந்த எச்சரிக்கை குறித்து நம்மில் எத்தனை பேர் கவனத்துடன் செயல்படுகின்றோம்? நமக்கிடையே உலா வரக் கூடிய வதந்திகளை உண்மை என்று நம்பி நம்மில் எத்தனை பேர், விசாரிக்காது எதிர் நடவடிக்கைகளில் இறங்கி விட்டு, பின் உண்மையை உணர்ந்த பின்பு அதற்காக வருத்தப்படுவோர் எத்தனை பேர், அதற்குள் நிகழ்ந்து விட்ட அத்தனை அம்சங்களும் சொந்த சகோதர சகோதரிகளின் மனங்களைக் காயப்படுத்தி, பின் வாழ்க்கையில் என்றுமே முகத்தில் விழிக்க இயலாத அளவு நிலைமை விபரீதமாகச் சென்று விடுகின்ற நிலைமைகளும் நம்மில் இருந்து வருவதை நாம் அறிவோம்.
நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும், நாம் அப்படியே பிறருக்குச் சொல்வது கிடையாது, கிடைத்த தகவல்களில் சில ஒட்டுக்களை வைத்து, அதனை சிறிது மாற்றி மாற்றி இறுதியாகச் சம்பந்தப்பட்டவரை அது அடையும் போது, அதனை அவர் கேட்டு விட்டு கடினமான வார்த்தைகளை உதிர்ப்பதோடு, இன்னும் உடனடியாக பெரும் பாவங்களில் இறங்கி விடக் கூடிய சூழ்நிலைகளும் உருவாகி விடுவதையும், புறம் பேசுவதில் ஆரம்பித்து, அடிதடிகளில் கூட முடியும் சூழ்நிலைகள் உருவாகி விடுவதையும், இன்னும் தான் கேட்ட அந்தப் பொய்ச் செய்தி ஒன்றே அவரது எதிர்நடவடிக்கைக்கான நியாயமாக்கப்படுவதையும் நாம் காணலாம்.
இவ்வாறான சூழ்நிலைகளில், குறிப்பிட்ட அந்த சகோதரரை அல்லது சகோதரியைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமானால், அவரைக் கண்ட மாத்திரமே அந்தப் பொய்ச் செய்தியின் விளைவாக இவரிடம் உண்டாகி இருக்கின்ற வெறுப்புத் தான் முன்னிற்குமே ஒழிய, இஸ்லாமிய சகோதரத்துவம் முன்னிற்காது, ஏன் ஸலாம் சொல்லாமல் கூட ஒதுங்கி விடக் கூடியவர்களாக மாறி விடுவார்கள்.
குறிப்பிட்ட அந்த சகோதரரின் மீது ஏற்படுகின்ற வெறுப்பும் சந்தேகப் பார்வையும், இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டதனால் விளைந்ததல்ல, யாரோ ஒருவர் வந்து இன்ன மனிதர் உன்னைப் பற்றி இவ்வாறு இவ்வாறு கூறினார் என்று கூறியதன் விளைவேயாகும்.
பல காலங்களாக வளர்ந்து விட்ட வெறுப்புணர்வு மற்றும் இஸ்லாமிய ஒழுக்கப் படுகொலைகள் உண்மையை அறிய விடாமல் நம்மைப் பிற்படுத்துவதோடு, குறிப்பிட்ட நபரை ஏசிய, மற்றும் திட்டித் தீர்த்த வார்த்தைகளை திரும்பப் பெறுவது எவ்வாறு?
ஒருமுறை ஒரு செயலைச் செய்து விட்டாகி விட்டதென்றால், அதனைத் திரும்ப மீட்டுவது என்பது இயலாத காரியமாகி விடும். அதற்காக எவ்வளவு வருந்தினாலும் சரியே, அதற்காக சிரமமெடுத்து பிரயாச்சித்தம் தேடினாலும், ஒருமுறை நம்மால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பு அகலுவது என்பதும், நம்மால் பாதிக்கப்பட்டவரின் மனதில் இருந்து துடைத்தெறிவது என்பதும் இயலாத காரியமாகும். இவை யாவும் வதந்திகளால், பொய்யான குற்றச்சாட்டுக்களால் விளைந்தவைகளாகும்.
நாம் எதனைக் கேள்விப்பட்டமோ, அதனை அப்படியே பிறருக்கு எடுத்துரைப்பது என்பதில் எத்தனை கவனமாகச் செயல்படுகின்றோம். இன்றைய தலைமுறையினரின் கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை பாதுகாத்து வரும் பொறுப்பைச் சுமத்தியிருக்கும் பட்சத்தில், என்ன நடந்திருக்கும் என்பதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்ப்போமா?
அன்றைய தலைமுறையினர் போல நாம் அவற்றைப் பாதுகாத்திருக்க மாட்டோம், தவிர நம்மிடையே ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் நம் கைவசம் இருந்திருக்காது என்பதே நிதர்சனமாகும்.
வதந்தி அல்லது தவறான தகவலைப் பெற்றதன் மூலம், ஒரு இறைத்தூதரே இன்னொரு சமூகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தூண்டப்பட்டிருக்கு மென்றால், அதன் மூலம் ஒன்றுமே அறியாத - பாவத்திலும் பழியிலும் சம்பந்தப்படாத மக்கள் அழியவும், இன்னும் நடைபெற இருந்த அந்தப் போரின் மூலமாக சில முஸ்லிம்கள் கூட அழிந்து போகக் கூடிய நிலையும் உருவானதென்று சொன்னால், நம்முடைய நிலைகள் எவ்வாறு என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவ்வாறான பொய்யான தகவல்கள் தான் மனித மனங்களில் ஏற்படுகின்ற உளநோய்களுக்கான மூல காரணமாக அமைந்து விடுகின்றது. அது இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு மத்தியில் வேற்றுமையையும், வெறுப்புணர்வையும், பகைமையையும் வளர்த்து விடுகின்றது. இறுதியாக இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதே இல்லாமலாகி விடுகின்ற சூழலுக்கு முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டு விடுகின்றது.
எனவே தான் அல்லாஹ், தனது திருமறையில் இவ்வாறான பொய்ச் செய்திகள், வதந்திகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்குமாறு, நம்மைப் பணிக்கின்றான். எச்சரிக்கவும் செய்கின்றான். எந்தவித பரிந்துரைகளும் எடுபடாத அந்த மறுமை நாளிலே வல்ல அல்லாஹ்வின் முன்பதாக நாம் நிற்கும் நிலையில், இந்த செயலுக்கான எந்த காரணத்தை அவன் முன் வைக்கப் போகின்றோம்?
அன்றைய தினம் நாம் கேட்கக் கூடிய பாவ மன்னிப்புகள் எடுபடுமா? அல்லது மன்னிப்பைப் பெற்றுத் தருமா?
எனவே, இத்தகைய கொடுமையான செயல்களில் வீழ்ந்து விடாமல் இருக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இன்னும் யாராவது உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வருவாராகில், அந்த செய்தி பற்றிய உண்மைத் தன்மையை அறியாத வரைக்கும், அது பற்றி எந்த கருத்தையும் அல்லது அதற்கான எந்த எதிர்நடவடிக்கையையும் எடுத்து விடாதீர்கள்.
நன்றி தமிழ் இஸ்லாம்.காம்
Subscribe to:
Posts (Atom)