Tuesday, May 15, 2007

உபரியான தொழுகைகள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

374 நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, என்னிடம் (ஏதாவது) கேள்! என்று கூறினார்கள். அதற்கு நான் சுவர்க்கத்தில் தங்களது தோழமையை வேண்டுகிறேன் என்று கூறினேன். இதுவல்லாமல் (வேறு ஏதும் கேள்!) என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், (எனக்கு) அதுவே (வேண்டும்) என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாட்டம் நிறைவேறிட அதிகம் ஸஜ்தா செய்து எனக்கு உதவி செய் என்று கூறினார்கள் என ரபீஆ இப்னு மாலிக் அறிவிக்கிறார். முஸ்லிம்

375 லுஹர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஸுப்ஹுவிற்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (ஆகிய சுன்னத் தொழுகைகளை) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

புகாரீ, முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ஜும்ஆவிற்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் என்பதும் உள்ளது.

376 ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்களைத் தவிர வேறு எதும் (ஃபர்ளைத் தவிர்த்து) தொழ மாட்டார்கள் என முஸ்லிமில் உள்ளது.

377 'லுஹர்' தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்களையும் நபி(ஸல்) அவர்கள் (தொழாமல்) விடமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

378 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டிய அளவு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் ஆர்வம் காட்டியதில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

379 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். முஸ்லிம்

380 எவர் இரவிலும் பகலிலும் (சுன்னத்தாக உள்ள) பன்னிரெண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ, அதன் காரணமாக அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு, கட்டப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பில் சுன்னத்தான தொழுகை என்று உள்ளது.

381 திர்மிதீயில் 380 வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துக்கள். அதற்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள். இன்னும் மக்ரிபிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் இஷாவிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் என்பது அதிகமாக உள்ளது.

382 ''எவர் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், அதற்குப் பின்பு நான்கு ரக்அத்துகளையும் பேணித் தொழுகின்றாரோ, அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை விலக்கி விட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

383 அஸரு(தொழுகை)க்கு முன்பு எவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

384 மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள! மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது முறை கூறும் போது ''விரும்பியவர் எனக் கூறினார்கள். மக்கள் அதை (கண்டிப்பான) சுன்னத்தாக ஆக்கிக் கொள்வதை விரும்பாமல் தான் அப்படிக் கூறினார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

385 இப்னு ஹிப்பானுடைய மற்றோர் அறிவிப்பில் மக்ரிபிற்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று உள்ளது.

386 சூரியன் மறைந்ததும் நாங்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தோம். (அதைக் காணும்) நபி(ஸல்) அவர்கள் அவற்றைக் கட்டாயம் தொழுதாக வேண்டும் எனக் கட்டளையிடவுமில்லை தொழக் கூடாதென எங்களுக்கு ஏவுபவர்களாகவும் இல்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

387 ''சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்களா?' என நான் கேட்கும் அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களையும் சுருக்கமாகத் தொழுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

388 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களில் 'குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் 'குல் ஹுவல்லாஹு' ஓதுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

389 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் வலப் பக்கமாகச் சாய்ந்து விட்டால் வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

390 ''உங்களில் எவரேனும் சுப்ஹுத் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால், வலப் பக்கமாக ஒருக்களித்து(சிறிது நேரம்) படுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், அஹ்மத் மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

391 ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். எவராவது காலையாகி விடும் என்று அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுது கொள்ளட்டும். அது அவர் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

392 இரவு மற்றும் பகல் தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ.

மேலும் இது இப்னு ஹிப்பானி ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

393 ஃபர்ளுத் தொழுகைகளுக்குப் பின்பு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

394 வித்ருத் தொழுகை முஸ்லிம் மீது அவசியமானதாகும். எவராவது ஐந்து ரக்அத்துக்கள் வித்ரு தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் மூன்று ரக்அத்துக்கள் தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் ஒரு ரக்அத் தொழ விரும்பினாலும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்åப் அன்சாரி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நஸாயீயில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

395 வித்ருத் தொழுகை கடமையாக்கப்பட்ட (ஃபர்ளு) தொழுகை போன்றதல்ல. ஆனால், நபி(ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட சுன்னத் ஆகும் என்று அலீ அப்னு அபீதாலிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்திலும், நஸாயீ மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

396 நபி(ஸல்) வேர்ள் ரமளான் இரவில் (பள்ளிவாசலில்) நின்று வணங்கினார்கள். பின்னர் அடுத்துவரும் இரவில் மக்கள் அவர்களை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் வெளிவரவில்லை. மேலும், உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமென நான் அஞ்சுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்

397 ''அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை (உங்களின் மற்ற தொழுகைகளுக்கு) வலு சேர்க்கும் விதத்தில் கொடுத்துள்ளான். அது சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எந்தத் தொழுகை?'' என்று நாங்கள் வினவினோம். இஷாவிற்கு, ஃபஜ்ரு நேரம் வருவதற்கும் இடையிலுள்ள வித்ருத் தொழுகை என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என காரிஜா இப்னு ஹுதாஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

398 அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. அது 397வது ஹதீஸ் போன்றதாகும். அபூ தாவூத். இது லய்யின் (ளஃயீப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

400 அபூஹுரைரா(ரலி) வாயிலாக அஹமதில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் 399வது ஹதீஸ் ளயீஃப் என்பதற்குச் சாட்சியாக உள்ளது.

401 நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும், அதுவல்லாத நாட்களிலும் பதினோரு ரக்அத்திற்கு மேல் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். நான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வித்ருக்கு முன்பு தாங்கள் தூங்குகிறீர்களே! என்று கேட்டேன். அதற்கு, ஆயிஷாவே! என்னுடைய இரண்டு கண்களும் தூங்கும். என்னுடைய இதயம் தூங்காது என்று பதில் கூறினார்களென ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

402 நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்துக்கள் தொழுவார்கள். இன்னும் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இவை தாம் பதிமூன்று ரக்அத்களாகும் என்று புகாரீ, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.

403 இன்னும் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரு ஐந்து தொழுவார்கள். இறுதியிலன்றி இடையில் எங்கும் அமர மாட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புகாரீ, முஸ்லிம்

404 நபி(ஸல்) அவர்கள் இரவு முழுவதும் வித்ருத் தொழுதுள்ளார்கள். அவர்களது வித்ரு சஹ்ரு நேரத்தில் முடிவடையும் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரீ, முஸ்லிம்

405 அப்துல்லாஹ்வே! இரவில் நின்று வணங்கிக் கொண்டிருந்து, பின்னர் இரவில் நின்று வணங்குவதை விட்டு விட்ட இன்னாரைப் போன்று ஆகிவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் (எச்சரிக்கையாகக்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.

406 குர்ஆன் வழங்கப்பட்டவர்களே! வித்ருத் தொழுங்கள். (ஏனெனில்) அல்லாஹ் ஒருவன் அவன் ஒற்றையையே விரும்புகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

407 வித்ரை இரவில் உங்களுடைய தொழுகைகளில் இறுதியானதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

408 ஒரே இரவில் இரண்டு வித்ருகள் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என தல்க் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, மற்றும் திர்மிதீ

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

409 நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் சப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா, குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹு வல்லாஹு அஹத் ஆகிய சூராக்களை ஓதுவார்கள் என உபய இப்னு கலஃப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ

அவற்றின் இறுதியில் தான் ஸலாம் கொடுப்பார்கள் என்பதும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

410 அபூ தாவூத் மற்றும் திர்மிதீயுடைய (மற்றோர்) அறிவிப்பில் 409வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு ரக்அத்திற்கும் ஒரு சூராவையும் மற்றும் இறுதி ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்வதத்தைன் சூராவையும் ஓதுவார்கள் (அத்தியாயம் 113, 114) என்றும் உள்ளது.

411 நீங்கள் காலை பொழுதையடையும் முன்பு வித்ருத் தொழுது விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

412 எவரேனும் சுப்ஹை அடைந்தும் வித்ரு தொழவில்லை என்றால் அவருக்கு வித்ரு இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு ஹிப்பானில் இடம் பெற்றுள்ளது.

413 ''எவரொருவர் வித்ருத் தொழாமல் தூங்கிவிட்டாரோ அல்லது அதை மறந்துவிட்டாரோ அவர் சுப்ஹை அடைந்ததும் அல்லது ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

414 இரவின் இறுதிப் பகுதியில் எழ முடியாதென எவர் அஞ்சுகிறாரோ அவர் இரவின் முதல் பகுதியில் வித்ரைத் தொழுது கொள்ளட்டும். எவருக்கு இரவின் இறுதிப்பகுதியில் எழும் நம்பிக்கை உள்ளதோ அவர் வித்ரை இரவின் இறுதிப்பகுதியில் தொழுது கொள்ளட்டும். ஏனெனில், இரவின் இறுதிப் பகுதியின் தொழுகை (இரவு பகல் இரண்டின் வானவர்களாலும்) வருகை தரப்படும். அதுவே சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்

415 ஃபஜ்ர் உதித்துவிட்டால் இரவுத் தொழுகை மற்றும் வித்ருடைய எல்லா நேரமும் போய்விட்டது. நீங்கள் ஃபஜ்ர் உதிப்பதற்கு முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

416 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அல்லாஹ் நாடிய அளவு அதிகப்படுத்தவும் செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

417 ஆயிஷா(ரலி) வாயிலாக அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹா தொழுவார்களா? என்று கேட்கப்பட்டதற்கு, பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால் தவிர (தொழுதது) இல்லை என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

418 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. நிச்சயமாக இப்போது நான் இந்த (தொழுகையைத்) தொழுகின்றேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

419 வெயிலின் காரணமாக சூடேறிய மணல் (ஒட்டகக் குட்டிகள் கால் வைக்க முடியாத அளவு வெப்பமாக) உள்ள நேரமே அவ்வாபீன் தொழுகைக்குரிய நேரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ

420 எவர் ளுஹாவை பன்னிரெண்டு ரக்அத்துக்களாகத் தொழுதாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது கரீப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

421 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் நுழைந்தார்கள். பின்னர் எட்டு ரக்அத்துக்கள் ளுஹா தொழுதார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, May 11, 2007

உபரியான தர்மங்கள்

தமிழில் இஸ்லாம் .காமின் நபிமொழி தொகுப்பு- புலுகுல் மராம் என்ற தலைப்பில் இருந்து தாஃவாவிற்காக எடுக்கப்பட்டது

இறைவனுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்த (மறுமை) நாளில் அல்லாஹ் தன்னுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு இடம் அளிப்பான். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அவர்களில் ஒருவர் தன்னுடைய வலக் கை செய்யும் தர்மத்தை தனது இடக் கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்தவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

(மறுமையில்) மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய தர்மத்தின் நிழலில் இருப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான், ஹாம்கி

எந்த முஸ்லிம் ஆடையற்றிருக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு ஆடை அணியச் செய்கின்றாரோ, அல்லாஹ் அவருக்கு சுவனத்தின் பச்சை நிற ஆடையை அணிவிப்பான். எந்த முஸ்லிம் பசியுடனிருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு உணவளிக்கின்றாரோ அல்லாஹ் அவரை சுவனத்தின் பழவகைகளை உண்ணச் செய்வான். எந்த முஸ்லிம் தாகித்திருக்கும் தன்னுடைய முஸ்லிம் சகோதரனுக்கு நீர் புகட்டுகின்றாரோ, அல்லாஹ் (சுவர்க்கத்தில்) அவருக்கு 'அர்ரஹீக்குல் மக்தூம்' எனும் பானத்தை புகட்டுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இதன் அறிவிப்புத் தொடர் பலஹீனமானது

மேலிருக்கும் கை கீழிருக்கும் கையை விடச் சிறந்தது. மேலும், நீ தர்மத்தை உன்னுடைய சொந்தபந்தங்களிலிருந்து தொடங்கு தேவைக்குப் போக (மீதம்) உள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். எவர் (பிறரிடம் தர்மம் கேட்காமல்) தன் சுயமரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறாரோ, அல்லாஹ்வும் அவனுடைய சுயமரியாமையைப் பாதுகாக்கின்றான். எவர் (ம்டைத்ததை வைத்துப்) போதுமென்ற மனத்துடன் (தர்மத்தை ஏற்காமலேயே) இருந்து வருகிறாரோ, அல்லாஹ்வும் அவருக்குப் போதுமென்ற மனத்தையளிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஹக்கிம் இப்னு ஹிஜாம்(ரலி) அறிவிக்கிறார்.

இங்கு புகாரீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

தர்மத்தில் சிறந்தது எது? என்று மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, குறைந்த செல்வமே உள்ளவர் அதிலிருந்து தர்மம் செய்வது. நீங்கள் உங்கள் தர்மத்தை உங்கள் வீட்டாரிலிருந்து தொடங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் , அஹ்மத்

இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மம் செய்யுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் (ஒருநாள்) கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னிடம் ஒரு தீனார் உள்ளது? என்று கூறினார். அதற்கு, நீ அதை உனது செலவுக்கு வைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றுமொன்றுள்ளது என்று கூறினார். அதற்கு, நீ உன்னுடைய பிள்ளைகளுக்கு செலவிடு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், ''என்னிடம் மற்றொன்றுமுள்ளது என்றார். அதற்கு, நீ அதை என்னுடைய ஊழியர்களுக்குச் செலவிடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அவர், என்னிடம் மற்றொன்றும் உள்ளது என்றார். அதற்கு, அதைப் பற்றி நீயே தீர்மானித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
, நஸயீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் வீட்டு உணவை வீணடிக்காமல் செலவு செய்யும் பெண்ணுக்கு அதைச் செலவிட்ட அளவுக்கு நன்மை உண்டு. அதை சம்பாதித்ததற்காக அவளுடைய கணவனுக்கும் நன்மையுண்டு. அதைப் பாதுகாக்கும் கரு¥லக் காப்பாளருக்கும் அதே போன்ற நன்மை உண்டு. இது போன்றே மற்ற செலவினங்களிலும் நன்மை உண்டு. இவர்களில் எவர் காரணத்தாலும் மற்றவருக்குரிய நன்மை குறைக்கப்பட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் மனைவி ஜைனப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தர்மம் செய்யுமாறு இன்று தாங்கள் கட்டளையிட்டார்கள். என்னிடம் சில நகைகள் இருந்தன. அவற்றை தர்மம் செய்வதை விட நான் விரும்பினேன். ஆனால் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களோ (நான் செலவிட விரும்புவோரை விட) அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் அதற்கு உரிமையுண்டு என்று கூறிவிட்டார். (நான் என்ன செய்வது) என்று கேட்டார். அதற்கு, மஸ்வூத் உண்மையே சொன்னார். நீ செலவிட விரும்புவோரை விட, உன்னுடைய கணவன் மற்றும் உன் பிள்ளைகள் தாம் அதிகம் உரிமை பெற்றவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ

எவன் மக்களிடம் (தன் தேவைகளை) எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கின்றானோ, அவன் மறுமை நாளில் தனது முகத்தில் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் மாமிசத்தின் சிறு துண்டு கூட இல்லாமல் (எலும்புக் கூடாக) வருவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்

தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மக்களின் பொருட்களை எவன் யாசித்துக் கொண்டே இருக்கின்றானோ, அவன் நெருப்புக்கங்கையோ கேட்கின்றனர். இனி விரும்பியவர் கூட்டியோ, குறைத்தோ வாங்கி கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்து (விறகுக் கட்டைகளை கட்டி, அதை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து, விற்பனை செய்கிறார். அது மக்களிடம் யாசிப்பதை விட்டும் அவரைத் தடுத்து விடுகிறதெனில், அதுவே மக்களிடம் கேட்பதை விட அவருக்குச் சிறந்ததாகும். மக்கள் கொடுத்தாலும் சரி. கொடுக்காவிட்டாலும் சரி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு அல் அவ்வாம்(ரலி) அறிவிக்கிறார்.

அதிகாரம் உள்ளவரிடமும் தவிர்க்க முடியாத விஷயத்திற்காகவும் தவிர மற்ற யாசகங்கள், ஒரு மனிதன் தன் முகத்தில் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வடுவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : www.tamilislam.com