ரமலான் மாதத்தின் சிறப்புகள்
1.ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின்(சுவனத்தின்) கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹூரைரா(ரலி) : புகாரி
2.அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி
நோன்பின் சிறப்புகள்
நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக்கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக்கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி என்று கூறட்டும். என் உயிர் எவனிடம் இருக்கின்றதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும் (காரணம்) தன்னுடைய உணவையும், பானத்தையும் இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : புகாரி
சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு அர்ரய்யான் என்று சொல்லப்படும், மறுமை நாளில் அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே என்று அழைக்கப்படும் அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசல் வழியாக நுழையமாட்டார்கள், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஸஹ்ல்(ரலி) : புகாரி
ஒவ்வொரு நன்மையான காரியத்துக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது மற்றொன்று தன் இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : புகாரி
நோன்பின் நோக்கம்
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டுமென்பதற்காகத்தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர். பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறு இல்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அவறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்களேயானாலும் நோன்பு நோற்காமலே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்பது தான் நோன்பின் நோக்கம் என்பர் வேறு சிலர் அதுவும் தவறு.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்திற்;;காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை. மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில் நீங்கள் இறையச்சமுடையோராவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். ஏற்படவேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவை பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து கொள்கிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி எற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப்போவது இல்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கா விட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதாலேயே நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்கவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஓதுக்கும் நாம் ரமலான் அல்லாத மற்ற மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபடும் பொழுது இறைவனுக்குப் பயந்து ஹலாலானதையே நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சிதான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபி(ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
1.ஹதீஸ்: யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு; விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, அஹமத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா
2.ஹதீஸ்: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள் தனமாக நடந்து கொண்டால் நான் நோன்பாளி என்று கூறிவிடுங்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, திர்மிதி
புகாரியின் மற்றும் சில அறிவிப்புகளில் யாரேனும் சண்டைக்கு வந்தால் யாரேனும் திட்டினால் என்று கூறப்பட்டுள்ளது.
Monday, September 01, 2008
நோன்பின் சட்டங்கள்
நோன்பின் நேரம்
சுப்ஹுநேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹுநேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவுகொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
பஜ்ரு எனும் வெள்ளை நூல் (இரவு எனும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் (2:187)
இவ்வசனத்தில் பஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். பஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பின்னர் இரவு நோன்பை முழுமையாக்குங்கள். (2:187)
இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல், இருக்க வேண்டியது அவசியம்.
ஹதிஸ்: இத்திசையிலிருந்து இரவு நம்மை நோக்கிவந்து அத்திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி) : முஸ்லிம்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன்; மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் ''போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக்கரைசலைக் கொண்டு வருவீராக'' என்றார்கள் அதற்கு அம்மனிதர் ''இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''போய் மாவைக் கரைத்து எடுத்துவருவீராக'' என்றார்கள் இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்துவந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி): புகாரி, முஸ்லிம்
ஸஹர்(அதிகாலை) உணவு
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள் ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத்(புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அனஸ்பின் மாலிக்(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதி
நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிருஸ்த்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) : முஸ்லிம்
3.ஸஹர் உணவைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதர்(ரலி) : அஹமத்
4.நாஙகள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர்செய்துவிட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயுத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித்(ரலி) கூறினார்கள் (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன், அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என விடையளித்தார்கள். - அனஸ்(ரலி) : புகாரி, திர்மிதி
நோன்பாளி மனதில் எண்ணிக்கொள்வது
அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - உமர்(ரலி) : புகாரி
பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்க(எண்ண)வில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறப்பது
நோன்பு திறப்பதை (தாமதிக்காது) விரைவுபடுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்து நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நானும் மஸ்ரூக் என்னும் நபித்தோழரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று முஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இருதோழர்கள் நன்மையைத் தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை. ஒருவர் நோன்பு துறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார், மற்றவர் நோன்பு திறப்பதை பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார், என்றார். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் மற்ற நபித்தோழர் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று அறிவிக்கப்பட்டிரக்கிறது. - திர்மிதி
நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : திர்மிதி
நோன்பு திறக்க ஏற்ற உணவு
1: யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அனஸ் பின் மாலிக்(ரலி) : திர்மிதி, நஸயீ
2:நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு செல்வதற்கு முன் கனிந்த ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள், அதுவும் இல்லை யென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். - திர்மிதி
உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால் ஈத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும், அது கிடைக்கவில்லை யென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி, அபூதாவூத்
நோன்பு துறந்து வயிறு குளிர்ந்த பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேட்கும் ஒரு துஆவை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நோன்பு துறந்து முடிந்ததும் அதை ஓதிக்கொள்ள வேண்டும்.
துஆ ''தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.இப்னு உமர்(ரலி) : அபூதாவூத்
நோன்பாளியின் பிரார்த்தனை
நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்பட மாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னுமாஜா
நோன்பாளி நோன்பை துறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அனியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறக்க வைப்(உணவளிப்)பதின் சிறப்புகள்
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ அவருக்கு, நோன்பு நோற்றவர்க்கு கிடைக்கும் நன்மையைப் போன்று (ஒரு பங்கு) கிடைக்கும், ஆனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி
தவிர்க்கவேண்டியவை
1: யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
2: எத்தனையோ நோன்பளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக் கொள்வதில்லை. இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண் விழிப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்! (நஸயீ, இப்னு மாஜா)
3: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவுக்கொள்ளக் கூடாது, இன்னும் கெட்ட வார்த்தைகள் பேசவும் கூடாது யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் நோன்பாளி என்று கூறிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி, முஸ்லிம்
நோன்பை(வேண்டுமென்றே)முறிப்பதற்குரிய பரிகாரம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். என்ன அழிந்துவிட்டாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ரமலானில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஒரு அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா? என்க் கேட்டார்கள் அவர் இயலாது என்றார்;. அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இயலாது என்றார். அப்பபடியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கும் அவர் இயலாது என்றார். பின்னர் அந்கேயே (பள்ளியில்) அமர்ந்து விட்டார்.சற்று நேரத்தில் பேரிச்சம் பழம் நிரம்பிய கூடை ஒன்று நபி(ஸல்)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வழங்கி இதைத் தர்மம் செய்வீராக என்றார்கள். அதற்கவர் இந்த மதினாவுக்குள் எங்களைவிட ஏழை யாரும் இல்லையே என்றார் அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். இதை உமது குடும்பத்தாருக்கே வழங்குவீராக எனவும் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபுதாவுத்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
சுப்ஹுநேரம் வந்தது முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது சுப்ஹுநேரம் துவங்கியது முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவுகொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.
பஜ்ரு எனும் வெள்ளை நூல் (இரவு எனும்) கறுப்பு நூலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் (2:187)
இவ்வசனத்தில் பஜ்ரு வரை உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். பஜ்ரிலிருந்து தான் நோன்பின் நேரம் ஆரம்பமாகிறது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். பின்னர் இரவு நோன்பை முழுமையாக்குங்கள். (2:187)
இரவு என்பது சூரியன் மறைந்தவுடன் ஆரம்பமாகிறது. எனவே சூரியன் மறைவது வரை உண்ணாமல் பருகாமல், இருக்க வேண்டியது அவசியம்.
ஹதிஸ்: இத்திசையிலிருந்து இரவு நம்மை நோக்கிவந்து அத்திசையில் பகல் பின்னோக்கிச் சென்று சூரியனும் மறைந்து விடுமானால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி) : முஸ்லிம்
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன்; மறைந்தவுடன் ஒரு மனிதரிடம் ''போய் நமக்காக (நோன்பு துறக்க) மாவுக்கரைசலைக் கொண்டு வருவீராக'' என்றார்கள் அதற்கு அம்மனிதர் ''இன்னும் கொஞ்சம் மாலையாகட்டுமே'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''போய் மாவைக் கரைத்து எடுத்துவருவீராக'' என்றார்கள் இன்னும் பகல் நேரம் மிச்சமுள்ளதே என்று அவர் கூறிக் கொண்டே சென்று மாவைக் கரைத்து எடுத்துவந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் குடித்தார்கள். - இப்னு அபீ அவ்பா(ரலி): புகாரி, முஸ்லிம்
ஸஹர்(அதிகாலை) உணவு
நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள் ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரகத்(புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது, என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அனஸ்பின் மாலிக்(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதி
நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிருஸ்த்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) : முஸ்லிம்
3.ஸஹர் உணவைத் தாமதப்படுத்தி நோன்பு துறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் நீடித்துள்ளார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபூதர்(ரலி) : அஹமத்
4.நாஙகள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர்செய்துவிட்டு (சுபுஹ்) தொழுகைக்கு ஆயுத்தமாவோம் என்று ஸைத் பின் ஸாபித்(ரலி) கூறினார்கள் (ஸஹருக்கும் சுபுஹுக்கும் இடையே) எவ்வளவு நேரம் இருக்கும் என்று அவர்களிடம் நான் கேட்டேன், அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என விடையளித்தார்கள். - அனஸ்(ரலி) : புகாரி, திர்மிதி
நோன்பாளி மனதில் எண்ணிக்கொள்வது
அமல்களுக்கு கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - உமர்(ரலி) : புகாரி
பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்க(எண்ண)வில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறப்பது
நோன்பு திறப்பதை (தாமதிக்காது) விரைவுபடுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்து நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நானும் மஸ்ரூக் என்னும் நபித்தோழரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று முஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இருதோழர்கள் நன்மையைத் தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை. ஒருவர் நோன்பு துறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார், மற்றவர் நோன்பு திறப்பதை பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார், என்றார். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லா இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். - முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் மற்ற நபித்தோழர் அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று அறிவிக்கப்பட்டிரக்கிறது. - திர்மிதி
நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாதவர்கள் தான் எனக்கு விருப்பமான அடியார்கள் என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹூரைரா(ரலி) : திர்மிதி
நோன்பு திறக்க ஏற்ற உணவு
1: யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ அவர் அதன் மூலம் நோன்பு துறக்கட்டும். கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது தூய்மையானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அனஸ் பின் மாலிக்(ரலி) : திர்மிதி, நஸயீ
2:நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்கு செல்வதற்கு முன் கனிந்த ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில ஈத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு துறப்பார்கள், அதுவும் இல்லை யென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக் கொள்வார்கள். - திர்மிதி
உங்களில் ஒருவர் நோன்பு துறந்தால் ஈத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும், அது கிடைக்கவில்லை யென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி, அபூதாவூத்
நோன்பு துறந்து வயிறு குளிர்ந்த பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக கேட்கும் ஒரு துஆவை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நோன்பு துறந்து முடிந்ததும் அதை ஓதிக்கொள்ள வேண்டும்.
துஆ ''தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள்.இப்னு உமர்(ரலி) : அபூதாவூத்
நோன்பாளியின் பிரார்த்தனை
நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்பட மாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னுமாஜா
நோன்பாளி நோன்பை துறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அனியாயம் செய்யப்பட்டவன், இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - திர்மிதி
நோன்பு திறக்க வைப்(உணவளிப்)பதின் சிறப்புகள்
யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ அவருக்கு, நோன்பு நோற்றவர்க்கு கிடைக்கும் நன்மையைப் போன்று (ஒரு பங்கு) கிடைக்கும், ஆனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி
தவிர்க்கவேண்டியவை
1: யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
2: எத்தனையோ நோன்பளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக் கொள்வதில்லை. இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண் விழிப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்வதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்! (நஸயீ, இப்னு மாஜா)
3: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவுக்கொள்ளக் கூடாது, இன்னும் கெட்ட வார்த்தைகள் பேசவும் கூடாது யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் நோன்பாளி என்று கூறிக் கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி, முஸ்லிம்
நோன்பை(வேண்டுமென்றே)முறிப்பதற்குரிய பரிகாரம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். என்ன அழிந்துவிட்டாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ரமலானில் என் மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஒரு அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா? என்க் கேட்டார்கள் அவர் இயலாது என்றார்;. அப்படியானால் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் இயலாது என்றார். அப்பபடியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கும் அவர் இயலாது என்றார். பின்னர் அந்கேயே (பள்ளியில்) அமர்ந்து விட்டார்.சற்று நேரத்தில் பேரிச்சம் பழம் நிரம்பிய கூடை ஒன்று நபி(ஸல்)அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வழங்கி இதைத் தர்மம் செய்வீராக என்றார்கள். அதற்கவர் இந்த மதினாவுக்குள் எங்களைவிட ஏழை யாரும் இல்லையே என்றார் அதைக்கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். இதை உமது குடும்பத்தாருக்கே வழங்குவீராக எனவும் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், நஸயி, திர்மிதி, அபுதாவுத்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
Subscribe to:
Posts (Atom)