பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத்
கோபத்தில் கொதிப்பவன் வீரனல்ல. மாறாக கோபமூட்டப்படும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வீரன்'' என்று நபி(ஸ ல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அநியாயம் (எவன் செய்கிறானோ அது அவனுக்காக) மறுமை நாளில் (அடுடக்கடுக்கான) பல இருள்களாக வந்து நிற்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அநியாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது மறுமை நாளில் (உங்கள் முன்பு) இருளாக வந்து நிற்கும், இன்னும் தீய கஞ்சத்தனத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு முன்பிருந்தோரை அழித்துவிட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுவதெல்லாம் நீங்கள் சிறிய இணைவைப்பில் ஈடுபட்டு விடுவீர்கள் என்பது தான். பிறருக்குக் காட்டிக் கொள்வதறக்காக வணக்கத்திலும், நற்செயல்களிலும் ஈடுபடுவதே சிறிய இணைவைப்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஹ்மூத் இப்னு லபீத்(ரலி) அறிவிக்கிறார்.
நயவஞ்சகனுடைய அடையாளங்கiளை மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியள்ளது.
முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனுடன் பேராடுவது இறைநிராகரிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு மஸ்வுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில் செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு மனிதரிடம் அல்லாஹ் ஒப்படைத்திருக்க, தன் பிரஜைகளை மோசடி செய்தவனாக அவன் மரணிக்கும் நாளில் உயிர்துறப்பானாயின், அவன் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃஜல் இப்னு யஸ்ஸார்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
என்னுடைய இரட்சகனே! எவரேனும் ஒருவர் ஒரு வேலைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபின், (அவரது பொறுப்பில் கவனமில்லாமல்) அவர் அதில் கஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர் மீது நீ கஷ்டத்தை உண்டாக்குவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் எவரேனும் சண்டையிட்டுக் கொண்டால் (எதிரியின்) முகத்தை (சேதப்படுத்தாமல்) தவிர்த்து விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். அதற்கு, கோபம் கொள்ளாதே! என்று அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும்,கோபம் கொள்ளாரே! என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
நிச்சயமாக சிலர் அல்லாஹ்வுடைய சொத்தில் நியாயமின்றி நுழைகிறார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகம் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கவ்லா அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பவற்றில் (ஹதீஸ் குதுஸியில்) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்களே! அநியாயத்தை எனக்கு நானே விலக்கிக் கொண்டேன். இன்னும் உங்களுக்கிடையேயும் அதை விலக்கி விட்டேன். எனவே, நீங்கள் உங்களுக்கிடையேயும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
புறம் பேசுதல் என்றால் என்ன வென்று அறிவீர்களா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவர் என்று கூறினார்கள். உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா?' என்று கேட்டார். அதற்கு, நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் தீய வார்த்தை பேசிக்கொள்ளாதீர்கள். இன்னும் நஜ்ல்' செய்யாதீர்கள். இன்னும் ஒருவருடைய வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வுடைய அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கும் சகோதரனாவான். அவன், அவன் மீது அநியாயம் செய்யாமாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அ வனை இழிவுபடுத்த மாட்டான் இறையச்சம் இங்கே இருக்கிறது என்று (கூறி) தன்னுடைய நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காண்பித்து, மனிதன் தன்னுடைய சகோதரனை இழிவு படுத்துவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமுடைய இரத்தமும் அவனுடைய சொத்தும், மேலும் அவனது தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அ பூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இருவர் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதன் பாவம் (திட்ட) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநியாயம் செய்யப்பட்டவர் வரம்பு மீறாதவரை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
எவன் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸிர்மா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகைமை கொள்பவர்களும். தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுதர்தா(ரலி) அறிவிக்கிறார்.
இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார். ஹாம்கி. இது தாரகுத்னீயில் மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
புறம் பேசுபவன் சுவர்க்கம் புக மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
எவர் தன்னுடைய கோபத்தைத் தடுத்துக் கொள்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ் தனது தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். தப்ரானி
ஒரு கூட்டம் வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களது பேச்சைக் கேட்பதற்கு எவர் முயற்சிக்கிறாரோ, மறுமை நாளில் அவரது காதில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.
தன்னைத் தானே பெரியவன் என்று எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். ஹாம்கி. இது பலமான ஹதீஸாகும்
அவசரப்படுவது ஷைத்தானின் (செயல்களில்) ஒன்றாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபிப்பவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி சொல்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
எவனொருவன் தன் முஸ்லிம் சகோதரனை பாவம் புரியத் தூண்டுகிறானோ அவன் அந்தப் பாவத்தைத் தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடு தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், நஸயீ மற்றும் திர்மிதீ.
கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன். அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
Sunday, December 31, 2006
Saturday, December 30, 2006
முஸ்லிமின் உயர்ந்த பண்பு
ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.
1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது.
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4. அவன் தும்மி ''அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது.
5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்¥த்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.
(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், பைஹக்கீ
நீங்கள் கிறிஸ்தவர்களையும், åதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இதில் இடக்கால் வரை என்பது வரையில் முஸ்லிமிலும் மீதி மாலிக் திர்மிதீ, அபூதாவுத், ஆகியவைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வீண் விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், அஹ்மத்
1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது.
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4. அவன் தும்மி ''அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது.
5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்¥த்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.
(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், பைஹக்கீ
நீங்கள் கிறிஸ்தவர்களையும், åதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இதில் இடக்கால் வரை என்பது வரையில் முஸ்லிமிலும் மீதி மாலிக் திர்மிதீ, அபூதாவுத், ஆகியவைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வீண் விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், அஹ்மத்
Thursday, December 07, 2006
ஜனாஸா சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• அடக்கஸ்தலங்களை கற்களைக் கொண்டு கட்டுவது.
• அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது அவைகளை சம அளவை விட உயர்த்துவது.
• அடக்கஸ்தலங்களின் மேல் உட்காருவது.
• செருப்புகளை அணிந்து அடக்கஸ் தலங்களுக்கு மத்தியில் நடப்பது.
• அடக்கஸ்தலங்களில் பெயர் எழுதுவது.
• அடக்கஸ்தலங்களில் விளக்கு எரிப்பது.
• அடக்கஸ்தலங்களைத் தோண்டுவது.
• அடக்கஸ்தலங்களை பள்ளிவாயிலாக மாற்றுவது.
• ஜனாஸா தொழுகையைத் தவிர மற்றவைகளை அடக்கஸ்தலங்களில் தொழுதல்.
• இறந்துவிட்டவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
• கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகள் பயன்படுத்துவது.
• ஒப்பாரி வைப்பது.
• ஒப்பாரி வைக்கத் துண்டுவது.
• அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
• ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
• கன்னத்தில் அறைந்து கொள்வது.
• தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
• காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (அவ்வாறின்றி, பொதுவாக அறிவிப்பு செய்வது கூடும்.)
• அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது அவைகளை சம அளவை விட உயர்த்துவது.
• அடக்கஸ்தலங்களின் மேல் உட்காருவது.
• செருப்புகளை அணிந்து அடக்கஸ் தலங்களுக்கு மத்தியில் நடப்பது.
• அடக்கஸ்தலங்களில் பெயர் எழுதுவது.
• அடக்கஸ்தலங்களில் விளக்கு எரிப்பது.
• அடக்கஸ்தலங்களைத் தோண்டுவது.
• அடக்கஸ்தலங்களை பள்ளிவாயிலாக மாற்றுவது.
• ஜனாஸா தொழுகையைத் தவிர மற்றவைகளை அடக்கஸ்தலங்களில் தொழுதல்.
• இறந்துவிட்டவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
• கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகள் பயன்படுத்துவது.
• ஒப்பாரி வைப்பது.
• ஒப்பாரி வைக்கத் துண்டுவது.
• அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
• ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
• கன்னத்தில் அறைந்து கொள்வது.
• தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
• காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (அவ்வாறின்றி, பொதுவாக அறிவிப்பு செய்வது கூடும்.)
மணம்முடிப்பதில் தடைசெய்யப்பட்டவைகள்
• திருமணத்தை விட்டு விலகுவது.
• ஆண்மையை போக்கிக் கொள்வது.
• இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
• ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
• தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
• இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது
• இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
• நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன், அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
• குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
• ஒரு பொருப்பாளரும் இரு சாட்சிகளு மின்றி திருமணம் முடிப்பது.
• பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
• பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
• பெண்ணை அவளது அனுமதியின்றி மணமுடித்துக் கொடுப்பது.
• ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகிவிட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை).
• கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப்படையாக) பெண் பேசுவது.
• ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
• ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
• ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, கணவனை விட்டுப் பிரிவது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற்காக தடுத்து வைத்துக் கொள்வது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
• தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது
• தலாக்கை விளையாட்டாக பயன் படுத்துவது.
• ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது முதல் மனைவியை தலாக் சொல்லும்படி கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
• கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
• கணவன் மனைவியை குழப்புவது, மனைவி கணவனை குழப்புவது.
• மனைவி கணவனின் பொருள்களி லிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
• மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பின்புறத்தில் உறவு கொள்வது.
• கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
• தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி நோவினை செய்வது.
• கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது).
• வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
• 'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
• பிறர் மூலம் கர்ப்பமான அடிமை பெண்ணிடம் உறவு கொள்வது.
• மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியேற்றுவது) செய்வது.
• பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
• மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
• மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகையைப் பெறுவதற்காக அவளைத் துன்பப்படுத்தி குலஆ (தலாக்) பெற வைப்பது.
• மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
• அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
• ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அனுசரனை காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.
• ஆண்மையை போக்கிக் கொள்வது.
• இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
• ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
• தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
• இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது
• இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
• நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன், அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
• குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
• ஒரு பொருப்பாளரும் இரு சாட்சிகளு மின்றி திருமணம் முடிப்பது.
• பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
• பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
• பெண்ணை அவளது அனுமதியின்றி மணமுடித்துக் கொடுப்பது.
• ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகிவிட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை).
• கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப்படையாக) பெண் பேசுவது.
• ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
• ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
• ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, கணவனை விட்டுப் பிரிவது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற்காக தடுத்து வைத்துக் கொள்வது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
• தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது
• தலாக்கை விளையாட்டாக பயன் படுத்துவது.
• ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது முதல் மனைவியை தலாக் சொல்லும்படி கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
• கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
• கணவன் மனைவியை குழப்புவது, மனைவி கணவனை குழப்புவது.
• மனைவி கணவனின் பொருள்களி லிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
• மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பின்புறத்தில் உறவு கொள்வது.
• கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
• தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி நோவினை செய்வது.
• கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது).
• வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
• 'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
• பிறர் மூலம் கர்ப்பமான அடிமை பெண்ணிடம் உறவு கொள்வது.
• மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியேற்றுவது) செய்வது.
• பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
• மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
• மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகையைப் பெறுவதற்காக அவளைத் துன்பப்படுத்தி குலஆ (தலாக்) பெற வைப்பது.
• மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
• அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
• ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அனுசரனை காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.
பேசுவது சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• பொய் சாட்சி சொல்வது.
• ஒழுக்கமான பெண் மீது பழி சுமத்துவது.
• பெண்களின் தன்மைகளைக் கூறி கவிதை எழுதுவது, பாடுவது.
• ஒழுக்கமானவர் மீது பழி சுமத்துவது.
• இட்டுக் கட்டுவது.
• குத்தலாகக் பேசுவது, ஏசுவது.
• இழிவான பட்டப் பெயர்களிட்டு அழைப்பது.
• புறம் பேசுவது.
• கோள் சொல்வது.
• முஸ்லிம்களை பரிகசிப்பது.
• பரம்பரைகளைக் கூறி பெருமை பேசுவது.
• பரம்பரையைக் கூறி குத்திக் காட்டுவது.
• கெட்ட வார்த்தைகளைப் பேசுவது.
• அசிங்கமாகப் பேசுவது, அறுவறுப்பாகப் பேசுவது.
• தீமையைப் பகிரங்கப்படுத்துவது. (ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை பகிரங்கப் படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது).
• பொய் பேசுவது, பொய்களில் மிக கடுமையான பொய் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் பேசுவது.
• கனவு கண்டதாக பொய்யுரைப்பது.
• ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது.
• மூவர் இருக்க இருவர் தனித்து ரகசியம் பேசுவது.
• பாவமான காரியத்திற்கும் மார்க்கத்திற்கு முரணான செயல்களுக்கும் ஆலோசனை செய்வது.
• முஃமின்களை அல்லது சபிக்கக் கூடாதவர்களை சபிப்பது.
• நபி (ஸல்) அவர்களின் சப்தத்திற்கு மேல் சப்தத்தை உயர்த்துவது. அவர்களது முன்னிலையில் சப்தமிட்டு பேசுவது. (நபிமொழியை படிப்பவருக்கு முன் சப்தத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.)
• நபியின் அடக்கஸ்தலத்திற்கு முன் சப்தத்தை உயர்த்துவது.
• இறந்தவர்களை ஏசுவது.
• சேவலை ஏசுவது.
• காற்றை ஏசுவது.
• உடல்நிலைக் குறைவை ஏசுவது.
• ஷைத்தானை ஏசுவது. (நாம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டுமே தவிர அவனை ஏசக் கூடாது.)
• இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது. (தேவைகளைக் கேட்பது.)
• நன்மையை வேண்டியோ தீமையிலிருந்து காக்கவோ இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது.
• தன்னை, குழந்தைகளை, வேலை செய்பவர்களை, பொருள்களை சபிப்பது.
• ஒருவர் 'எனது ஆத்மா தீயதாகிவிட்டது, கெட்டு விட்டது' என்று கூறுவது,
• நான் இன்ன இறைவசனத்தை மறந்து விட்டேன் என்று கூறுவது. (எனக்கு இன்ன வசனம் மறக்கடிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.)
• அல்லாஹ்விடம் 'நீ நாடினால் என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்திப்பது. (மாறாக, உறுதியாக கேட்க வேண்டும்).
• அல்லாஹ்வை மறுப்பவர்களை, முனாஃபிக்குகளைப் பார்த்து தலைவர் என்று கூறுவது.
• ஒருவரைப் பார்த்து 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும்' என்று கூறுவது.
• கணவன் மனைவியைப் பார்த்து அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தட்டும் என்று கூறுவது.
• ஸலாம் சொல்வதற்கு முன் பேசுவது.
• ஒருவர் ஒருவரை புகழ்ந்து பேசிக் கொள்வது.
• பேசாமல் துண்டித்து வாழ்வது.
ஒருவரை அவர்முன் புகழ்வது.
• ஒழுக்கமான பெண் மீது பழி சுமத்துவது.
• பெண்களின் தன்மைகளைக் கூறி கவிதை எழுதுவது, பாடுவது.
• ஒழுக்கமானவர் மீது பழி சுமத்துவது.
• இட்டுக் கட்டுவது.
• குத்தலாகக் பேசுவது, ஏசுவது.
• இழிவான பட்டப் பெயர்களிட்டு அழைப்பது.
• புறம் பேசுவது.
• கோள் சொல்வது.
• முஸ்லிம்களை பரிகசிப்பது.
• பரம்பரைகளைக் கூறி பெருமை பேசுவது.
• பரம்பரையைக் கூறி குத்திக் காட்டுவது.
• கெட்ட வார்த்தைகளைப் பேசுவது.
• அசிங்கமாகப் பேசுவது, அறுவறுப்பாகப் பேசுவது.
• தீமையைப் பகிரங்கப்படுத்துவது. (ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை பகிரங்கப் படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது).
• பொய் பேசுவது, பொய்களில் மிக கடுமையான பொய் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் பேசுவது.
• கனவு கண்டதாக பொய்யுரைப்பது.
• ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது.
• மூவர் இருக்க இருவர் தனித்து ரகசியம் பேசுவது.
• பாவமான காரியத்திற்கும் மார்க்கத்திற்கு முரணான செயல்களுக்கும் ஆலோசனை செய்வது.
• முஃமின்களை அல்லது சபிக்கக் கூடாதவர்களை சபிப்பது.
• நபி (ஸல்) அவர்களின் சப்தத்திற்கு மேல் சப்தத்தை உயர்த்துவது. அவர்களது முன்னிலையில் சப்தமிட்டு பேசுவது. (நபிமொழியை படிப்பவருக்கு முன் சப்தத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.)
• நபியின் அடக்கஸ்தலத்திற்கு முன் சப்தத்தை உயர்த்துவது.
• இறந்தவர்களை ஏசுவது.
• சேவலை ஏசுவது.
• காற்றை ஏசுவது.
• உடல்நிலைக் குறைவை ஏசுவது.
• ஷைத்தானை ஏசுவது. (நாம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டுமே தவிர அவனை ஏசக் கூடாது.)
• இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது. (தேவைகளைக் கேட்பது.)
• நன்மையை வேண்டியோ தீமையிலிருந்து காக்கவோ இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது.
• தன்னை, குழந்தைகளை, வேலை செய்பவர்களை, பொருள்களை சபிப்பது.
• ஒருவர் 'எனது ஆத்மா தீயதாகிவிட்டது, கெட்டு விட்டது' என்று கூறுவது,
• நான் இன்ன இறைவசனத்தை மறந்து விட்டேன் என்று கூறுவது. (எனக்கு இன்ன வசனம் மறக்கடிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.)
• அல்லாஹ்விடம் 'நீ நாடினால் என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்திப்பது. (மாறாக, உறுதியாக கேட்க வேண்டும்).
• அல்லாஹ்வை மறுப்பவர்களை, முனாஃபிக்குகளைப் பார்த்து தலைவர் என்று கூறுவது.
• ஒருவரைப் பார்த்து 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும்' என்று கூறுவது.
• கணவன் மனைவியைப் பார்த்து அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தட்டும் என்று கூறுவது.
• ஸலாம் சொல்வதற்கு முன் பேசுவது.
• ஒருவர் ஒருவரை புகழ்ந்து பேசிக் கொள்வது.
• பேசாமல் துண்டித்து வாழ்வது.
ஒருவரை அவர்முன் புகழ்வது.
பெண்கள் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• பெண் அந்நியர்களுக்கு தனது அலங்காரத்தை வெளிப்படுத்துவது.
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
தொழில், வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவைகள்
• வட்டி வாங்குவது.
• ஏமாற்றுவது, அறியாமை, மோசடி செய்வது.
• இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது.
• ¨(நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது.
• நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவைகளை வியாபாரம் செய்வது.
• நாயை விற்று அதன் கிரயத்தை சாப்பிடுவது.
• அல்லாஹ் ஹராமாக்கிய பொருள்களை விற்பது, வாங்குவது.
• வாங்கும் எண்ணமின்றி பொருள்களின் விலையை உயர்த்துவது.
• வியாபாரப் பொருள்களின் குறைகளை மறைப்பது.
• வியாபாரப் பொருளின் குறைகளை சொல்லாமல் விற்பது.
• ஜுமுஆ நாளன்று இரண்டாவது பாங்கிற்குப் பின் வியாபாரம் செய்வது.
• தனக்கு சொந்தமில்லாததை விற்பது.
• வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்வது.
• தங்கத்தை தங்கத்திற்குப் பகரமாக, வெள்ளியை வெள்ளிக்குப் பகரமாக விற்கும் போது ஏற்றத்தாழ்வுடன் விற்பது. (ஆனால் ஒன்றுக்கொன்று சமமாகவும், ரொக்கமாகவும் இருந்தால் விற்பது கூடும்).
• ஒருவர் ஒரு பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• ஒருவர் ஒரு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• பழங்களை அது பூவாக இருக்கும் போதும், பறிப்பதற்கு முன்னும் விற்பனை செய்வது.
• குறையுள்ள பொருளை மறைத்து விற்றுவிட்டு அதன் கிரயத்தை உண்பது.
• நிறுவையில், அளவையில் குறை செய்வது.
• பொருள்களை பதுக்குவது.
• வியாபாரிகள் ஊருக்குள் வருவதற்கு முன் ஊருக்கு வெளியில் சென்று வியாபாரம் பேசுவது.
• நகரத்தில் உள்ளவர் கிராமவாசிக்கு விற்றுக் கொடுப்பது. (அதாவது, கிராமவாசியின் பொருளை விற்பதற்கு இடைத் தரகராக செயல்படுவது. அவரது பொருளை தானாக விற்பனை செய்வதற்கு விட்டுவிட வேண்டும்.)
• குர்பானி கொடுத்துவிட்டு அதன் தோலை விற்று, குர்பானி கொடுத்தவர் பயன்பெறுவது.
• வீடு, தோட்டம் போன்றவற்றில் பங்காளியாக இருப்பவர், தனது பங்கை வாங்க சக்தியுள்ள மற்ற பங்காளியிடம் விற்காமல் பிறரிடம் விற்பது.
• திருக்குர்ஆனை ஓதிக்காண்பித்து சம்பாதிப்பது.
• எத்தீம்களின் (அநாதைகளின்) பொருளை சாப்பிடுவது.
• சூதாடுவது.
• அபகரிப்பது.
• லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது.
• திருடுவது.
• வெற்றி (கனீமத்து)ப் பொருளை பங்கிடும் முன் அனுமதியின்றி எடுத்துக் கொள்வது.
• கொள்ளையடிப்பது.
• அநியாயமான முறையில் மக்கள் சொத்துக்களை அனுபவிப்பது.
• மக்களின் சொத்துக்களை வீணடிப்பது.
• கொடுக்கும் நோக்கமின்றி கடன் வாங்குவது.
• மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை குறைத்துக் கொடுப்பது.
• கண்டெடுக்கப்பட்ட பொருளை மறைப்பது, மறைக்க முயற்சிப்பது.
• உரியவருக்குத் தெரியாமல் கீழே கிடக்கும் பொருளை எடுப்பது.
• மோசடி, ஏமாற்றுதல் ஆகியவற்றின் அனைத்து வழிகளும்.
• பிறர் பொருளை அனுமதியின்றி பயன்படுத்துவது.
• பிறரை வருத்தி அவரது பொருளை பெறுவது.
• சிபாரிசு செய்ததற்காக அன்பளிப்பு பெறுவது.
மார்க்கத்தை மறந்து (மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து) உலகப் பொருளை சம்பாதிக்கப் பாடுபடுவது.
• ஏமாற்றுவது, அறியாமை, மோசடி செய்வது.
• இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது.
• ¨(நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது.
• நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவைகளை வியாபாரம் செய்வது.
• நாயை விற்று அதன் கிரயத்தை சாப்பிடுவது.
• அல்லாஹ் ஹராமாக்கிய பொருள்களை விற்பது, வாங்குவது.
• வாங்கும் எண்ணமின்றி பொருள்களின் விலையை உயர்த்துவது.
• வியாபாரப் பொருள்களின் குறைகளை மறைப்பது.
• வியாபாரப் பொருளின் குறைகளை சொல்லாமல் விற்பது.
• ஜுமுஆ நாளன்று இரண்டாவது பாங்கிற்குப் பின் வியாபாரம் செய்வது.
• தனக்கு சொந்தமில்லாததை விற்பது.
• வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்வது.
• தங்கத்தை தங்கத்திற்குப் பகரமாக, வெள்ளியை வெள்ளிக்குப் பகரமாக விற்கும் போது ஏற்றத்தாழ்வுடன் விற்பது. (ஆனால் ஒன்றுக்கொன்று சமமாகவும், ரொக்கமாகவும் இருந்தால் விற்பது கூடும்).
• ஒருவர் ஒரு பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• ஒருவர் ஒரு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• பழங்களை அது பூவாக இருக்கும் போதும், பறிப்பதற்கு முன்னும் விற்பனை செய்வது.
• குறையுள்ள பொருளை மறைத்து விற்றுவிட்டு அதன் கிரயத்தை உண்பது.
• நிறுவையில், அளவையில் குறை செய்வது.
• பொருள்களை பதுக்குவது.
• வியாபாரிகள் ஊருக்குள் வருவதற்கு முன் ஊருக்கு வெளியில் சென்று வியாபாரம் பேசுவது.
• நகரத்தில் உள்ளவர் கிராமவாசிக்கு விற்றுக் கொடுப்பது. (அதாவது, கிராமவாசியின் பொருளை விற்பதற்கு இடைத் தரகராக செயல்படுவது. அவரது பொருளை தானாக விற்பனை செய்வதற்கு விட்டுவிட வேண்டும்.)
• குர்பானி கொடுத்துவிட்டு அதன் தோலை விற்று, குர்பானி கொடுத்தவர் பயன்பெறுவது.
• வீடு, தோட்டம் போன்றவற்றில் பங்காளியாக இருப்பவர், தனது பங்கை வாங்க சக்தியுள்ள மற்ற பங்காளியிடம் விற்காமல் பிறரிடம் விற்பது.
• திருக்குர்ஆனை ஓதிக்காண்பித்து சம்பாதிப்பது.
• எத்தீம்களின் (அநாதைகளின்) பொருளை சாப்பிடுவது.
• சூதாடுவது.
• அபகரிப்பது.
• லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது.
• திருடுவது.
• வெற்றி (கனீமத்து)ப் பொருளை பங்கிடும் முன் அனுமதியின்றி எடுத்துக் கொள்வது.
• கொள்ளையடிப்பது.
• அநியாயமான முறையில் மக்கள் சொத்துக்களை அனுபவிப்பது.
• மக்களின் சொத்துக்களை வீணடிப்பது.
• கொடுக்கும் நோக்கமின்றி கடன் வாங்குவது.
• மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை குறைத்துக் கொடுப்பது.
• கண்டெடுக்கப்பட்ட பொருளை மறைப்பது, மறைக்க முயற்சிப்பது.
• உரியவருக்குத் தெரியாமல் கீழே கிடக்கும் பொருளை எடுப்பது.
• மோசடி, ஏமாற்றுதல் ஆகியவற்றின் அனைத்து வழிகளும்.
• பிறர் பொருளை அனுமதியின்றி பயன்படுத்துவது.
• பிறரை வருத்தி அவரது பொருளை பெறுவது.
• சிபாரிசு செய்ததற்காக அன்பளிப்பு பெறுவது.
மார்க்கத்தை மறந்து (மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து) உலகப் பொருளை சம்பாதிக்கப் பாடுபடுவது.
Subscribe to:
Posts (Atom)