Thursday, December 07, 2006

மணம்முடிப்பதில் தடைசெய்யப்பட்டவைகள்

• திருமணத்தை விட்டு விலகுவது.
• ஆண்மையை போக்கிக் கொள்வது.
• இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
• ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
• தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
• இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது
• இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
• நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன், அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
• குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
• ஒரு பொருப்பாளரும் இரு சாட்சிகளு மின்றி திருமணம் முடிப்பது.
• பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
• பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
• பெண்ணை அவளது அனுமதியின்றி மணமுடித்துக் கொடுப்பது.
• ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகிவிட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை).
• கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப்படையாக) பெண் பேசுவது.
• ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
• ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
• ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, கணவனை விட்டுப் பிரிவது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற்காக தடுத்து வைத்துக் கொள்வது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
• தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது
• தலாக்கை விளையாட்டாக பயன் படுத்துவது.
• ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது முதல் மனைவியை தலாக் சொல்லும்படி கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
• கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
• கணவன் மனைவியை குழப்புவது, மனைவி கணவனை குழப்புவது.
• மனைவி கணவனின் பொருள்களி லிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
• மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பின்புறத்தில் உறவு கொள்வது.
• கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
• தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி நோவினை செய்வது.
• கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது).
• வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
• 'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
• பிறர் மூலம் கர்ப்பமான அடிமை பெண்ணிடம் உறவு கொள்வது.
• மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியேற்றுவது) செய்வது.
• பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
• மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
• மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகையைப் பெறுவதற்காக அவளைத் துன்பப்படுத்தி குலஆ (தலாக்) பெற வைப்பது.
• மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
• அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
• ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அனுசரனை காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.

No comments: