Thursday, December 07, 2006

பேசுவது சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்

• பொய் சாட்சி சொல்வது.
• ஒழுக்கமான பெண் மீது பழி சுமத்துவது.
• பெண்களின் தன்மைகளைக் கூறி கவிதை எழுதுவது, பாடுவது.
• ஒழுக்கமானவர் மீது பழி சுமத்துவது.
• இட்டுக் கட்டுவது.
• குத்தலாகக் பேசுவது, ஏசுவது.
• இழிவான பட்டப் பெயர்களிட்டு அழைப்பது.
• புறம் பேசுவது.
• கோள் சொல்வது.
• முஸ்லிம்களை பரிகசிப்பது.
• பரம்பரைகளைக் கூறி பெருமை பேசுவது.
• பரம்பரையைக் கூறி குத்திக் காட்டுவது.
• கெட்ட வார்த்தைகளைப் பேசுவது.
• அசிங்கமாகப் பேசுவது, அறுவறுப்பாகப் பேசுவது.
• தீமையைப் பகிரங்கப்படுத்துவது. (ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை பகிரங்கப் படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது).
• பொய் பேசுவது, பொய்களில் மிக கடுமையான பொய் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் பேசுவது.
• கனவு கண்டதாக பொய்யுரைப்பது.
• ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது.
• மூவர் இருக்க இருவர் தனித்து ரகசியம் பேசுவது.
• பாவமான காரியத்திற்கும் மார்க்கத்திற்கு முரணான செயல்களுக்கும் ஆலோசனை செய்வது.
• முஃமின்களை அல்லது சபிக்கக் கூடாதவர்களை சபிப்பது.
• நபி (ஸல்) அவர்களின் சப்தத்திற்கு மேல் சப்தத்தை உயர்த்துவது. அவர்களது முன்னிலையில் சப்தமிட்டு பேசுவது. (நபிமொழியை படிப்பவருக்கு முன் சப்தத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.)
• நபியின் அடக்கஸ்தலத்திற்கு முன் சப்தத்தை உயர்த்துவது.
• இறந்தவர்களை ஏசுவது.
• சேவலை ஏசுவது.
• காற்றை ஏசுவது.
• உடல்நிலைக் குறைவை ஏசுவது.
• ஷைத்தானை ஏசுவது. (நாம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டுமே தவிர அவனை ஏசக் கூடாது.)
• இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது. (தேவைகளைக் கேட்பது.)
• நன்மையை வேண்டியோ தீமையிலிருந்து காக்கவோ இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது.
• தன்னை, குழந்தைகளை, வேலை செய்பவர்களை, பொருள்களை சபிப்பது.
• ஒருவர் 'எனது ஆத்மா தீயதாகிவிட்டது, கெட்டு விட்டது' என்று கூறுவது,
• நான் இன்ன இறைவசனத்தை மறந்து விட்டேன் என்று கூறுவது. (எனக்கு இன்ன வசனம் மறக்கடிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.)
• அல்லாஹ்விடம் 'நீ நாடினால் என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்திப்பது. (மாறாக, உறுதியாக கேட்க வேண்டும்).
• அல்லாஹ்வை மறுப்பவர்களை, முனாஃபிக்குகளைப் பார்த்து தலைவர் என்று கூறுவது.
• ஒருவரைப் பார்த்து 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும்' என்று கூறுவது.
• கணவன் மனைவியைப் பார்த்து அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தட்டும் என்று கூறுவது.
• ஸலாம் சொல்வதற்கு முன் பேசுவது.
• ஒருவர் ஒருவரை புகழ்ந்து பேசிக் கொள்வது.
• பேசாமல் துண்டித்து வாழ்வது.
ஒருவரை அவர்முன் புகழ்வது.

No comments: