• அடக்கஸ்தலங்களை கற்களைக் கொண்டு கட்டுவது.
• அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது அவைகளை சம அளவை விட உயர்த்துவது.
• அடக்கஸ்தலங்களின் மேல் உட்காருவது.
• செருப்புகளை அணிந்து அடக்கஸ் தலங்களுக்கு மத்தியில் நடப்பது.
• அடக்கஸ்தலங்களில் பெயர் எழுதுவது.
• அடக்கஸ்தலங்களில் விளக்கு எரிப்பது.
• அடக்கஸ்தலங்களைத் தோண்டுவது.
• அடக்கஸ்தலங்களை பள்ளிவாயிலாக மாற்றுவது.
• ஜனாஸா தொழுகையைத் தவிர மற்றவைகளை அடக்கஸ்தலங்களில் தொழுதல்.
• இறந்துவிட்டவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
• கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகள் பயன்படுத்துவது.
• ஒப்பாரி வைப்பது.
• ஒப்பாரி வைக்கத் துண்டுவது.
• அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
• ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
• கன்னத்தில் அறைந்து கொள்வது.
• தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
• காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (அவ்வாறின்றி, பொதுவாக அறிவிப்பு செய்வது கூடும்.)
Thursday, December 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment