Friday, October 13, 2006

சுன்னத்தான நோன்புகள்

ஆஷூரா நோன்பு

ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பிpன் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : முஸ்லிம்

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹூரைரா(ரலி) : அபூதாவூத்

முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்

ரஸூல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்

அரஃபா நோன்பு

அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா

அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு

நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா

ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா

திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்

மாதம் மூன்று நோன்புகள்

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்

அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.

உபரியா(நஃபிலா)ன நோன்பு

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்

அதிக பட்ச(உபரியான) நோன்பு

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.


வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது

வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா

வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்

தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.

No comments: