Monday, October 30, 2006

ஆடை அலங்காரம் தொடர்பாக தடை செய்யப்பட்டவைகள்

• ஆடைகளில் வரம்பு மீறி செலவு செய்வது.
• ஆண்கள் தங்கம் அணிவது.
• நடு விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிவது.
• இரும்பு மோதிரம் அணிவது, ஆடையின்றி இருப்பது, நடப்பது, தொடையை பிறருக்குக் காட்டுவது.
• ஆடைகளை கரண்டைக்குக் கீழ் தொங்க விடுவது, பெருமையுடன் ஆடைகளை தரையில் இழுத்துச் செல்வது.
• பகட்டு ஆடைகளை அணிவது.
• ஆண்கள் பட்டாடை அணிவது,
• ஆண்கள் பெண்களின் ஆடைகளை, பெண்கள் ஆண்களின் ஆடைகளை அணிவது.
• பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய அல்லது குட்டையான ஆடைகளை அணிவது.
• மாற்றுமத பெண்கள் அணியும் ஆடைகளை அணிவது.
• நின்றுகொண்டு 'ஷூ' போன்ற காலணிகளை அணிவது. (அதாவது நின்று கொண்டு அணிந்தால் சிரமம் ஏற்படும் என்றிருக்கும் காலணிகளை உட்கார்ந்து கொண்டுதான் அணியவேண்டும்.)
• ஒரு காலணியை மட்டும் அணிந்து கொண்டு நடப்பது.
• இணைவைப்பவர்களைப் போல் மீசையை வளர்த்து தாடியை சிரைப்பது
• முகம், புருவத்தின் முடிகளை பிடிங்குவது.
• பெண் மொட்டையடித்துக் கொள்வது.
• சவரிமுடி கட்டுவது
• நரை முடியைப் பிடுங்குவது.
• நரைக்கு கருநிறம் பூசுவது (டை அடிப்பது).
• தலையில் சில பகுதிகளை சிரைத்து சில பகுதியை விட்டுவிடுவது.
• உயிருள்ளவைகளை வரைவது.
• பட்டாடையில் அமர்வது.
• புலித்தோல் அல்லது தற்பெருமை யூட்டும்படியான விரிப்புகளில் அமர்வது, அவைகளைப் பயன்படுத்துவது.
சுவர்களை திரையிட்டு அலங்கரிப்பது.

No comments: