நிரந்தர சலுகை அளிக்கப்பட்டவர்கள்
தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்
பயணிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
தடுக்கப்பட்டவர்கள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
சலுகை பற்றிய விளக்கம்.
நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
Friday, October 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment