• தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது.
• மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது.
• மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்வது அல்லது கிப்லாவை பின்னோக்கி அமர்வது. (சில அறிஞர்கள் கட்டிடங்களுக்குள் இருந்தால் குற்றமில்லை என்கின்றனர்.)
• வலது கையைக் கொண்டு மர்மஸ் தானத்தை சுத்தம் செய்வது அல்லது வலது கையால் (மர்மஸ்தானத்தை) துடைப்பது.
• தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவாமல் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் கைகளை நுழைப்பது.
• மலம், ஜலம் கழிப்பவருக்கு ஸலாம் சொல்வது.
• உறுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது.
தூக்கம் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• தடுப்பு இல்லாத மாடிகளில் தூங்குவது. (ஏனெனில் புறண்டு படுக்கும்போது கீழே விழும் அபாயம் உண்டு.)
• பெருந்தொடக்கு ஏற்பட்ட பின் உழு செய்யாமல் தூங்குவது.
• விரிப்பிலிருந்து எழுந்த பின் சிறிது நேரம் கழித்து அதே விரிப்பில் மீண்டும் தூங்க நேர்ந்தால் அதை மூன்று முறை உதறாமல் தூங்குவது.
• பள்ளத்தாக்கின் நடுவில், நீரோடைகளில் தூங்குவது.
• தனியாக இரவில் தூங்குவது.
• தூங்கும்போது நெருப்பை அணைக் காமல் எறிந்த நிலையில் விடுவது.
• கையில் கொழுப்புகள், உணவு எச்சம் உள்ள நிலையில் தூங்குவது.
• குப்புறப் படுத்து தூங்குவது.
• கைலி (லுங்கி) போன்ற ஆடை அணிந்திருக்கும்போது மல்லாந்து படுத்துக் கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு படுப்பது. (மர்மஸ்தானம் தெரியும் என்ற பயம் இல்லையெனில் இவ்வாறு தூங்குவது தவறில்லை.)
தீய கனவுகளை பிறரிடம் கூறுவது அல்லது அதற்கு விளக்கம் கூறுவது.
Monday, October 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment