பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத்
கோபத்தில் கொதிப்பவன் வீரனல்ல. மாறாக கோபமூட்டப்படும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வீரன்'' என்று நபி(ஸ ல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அநியாயம் (எவன் செய்கிறானோ அது அவனுக்காக) மறுமை நாளில் (அடுடக்கடுக்கான) பல இருள்களாக வந்து நிற்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அநியாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது மறுமை நாளில் (உங்கள் முன்பு) இருளாக வந்து நிற்கும், இன்னும் தீய கஞ்சத்தனத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு முன்பிருந்தோரை அழித்துவிட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுவதெல்லாம் நீங்கள் சிறிய இணைவைப்பில் ஈடுபட்டு விடுவீர்கள் என்பது தான். பிறருக்குக் காட்டிக் கொள்வதறக்காக வணக்கத்திலும், நற்செயல்களிலும் ஈடுபடுவதே சிறிய இணைவைப்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஹ்மூத் இப்னு லபீத்(ரலி) அறிவிக்கிறார்.
நயவஞ்சகனுடைய அடையாளங்கiளை மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியள்ளது.
முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனுடன் பேராடுவது இறைநிராகரிப்பாகும் என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு மஸ்வுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில் செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு மனிதரிடம் அல்லாஹ் ஒப்படைத்திருக்க, தன் பிரஜைகளை மோசடி செய்தவனாக அவன் மரணிக்கும் நாளில் உயிர்துறப்பானாயின், அவன் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃஜல் இப்னு யஸ்ஸார்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
என்னுடைய இரட்சகனே! எவரேனும் ஒருவர் ஒரு வேலைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபின், (அவரது பொறுப்பில் கவனமில்லாமல்) அவர் அதில் கஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர் மீது நீ கஷ்டத்தை உண்டாக்குவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் எவரேனும் சண்டையிட்டுக் கொண்டால் (எதிரியின்) முகத்தை (சேதப்படுத்தாமல்) தவிர்த்து விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். அதற்கு, கோபம் கொள்ளாதே! என்று அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும்,கோபம் கொள்ளாரே! என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
நிச்சயமாக சிலர் அல்லாஹ்வுடைய சொத்தில் நியாயமின்றி நுழைகிறார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகம் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கவ்லா அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பவற்றில் (ஹதீஸ் குதுஸியில்) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னுடைய அடியார்களே! அநியாயத்தை எனக்கு நானே விலக்கிக் கொண்டேன். இன்னும் உங்களுக்கிடையேயும் அதை விலக்கி விட்டேன். எனவே, நீங்கள் உங்களுக்கிடையேயும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
புறம் பேசுதல் என்றால் என்ன வென்று அறிவீர்களா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவர் என்று கூறினார்கள். உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா?' என்று கேட்டார். அதற்கு, நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் தீய வார்த்தை பேசிக்கொள்ளாதீர்கள். இன்னும் நஜ்ல்' செய்யாதீர்கள். இன்னும் ஒருவருடைய வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வுடைய அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கும் சகோதரனாவான். அவன், அவன் மீது அநியாயம் செய்யாமாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அ வனை இழிவுபடுத்த மாட்டான் இறையச்சம் இங்கே இருக்கிறது என்று (கூறி) தன்னுடைய நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காண்பித்து, மனிதன் தன்னுடைய சகோதரனை இழிவு படுத்துவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமுடைய இரத்தமும் அவனுடைய சொத்தும், மேலும் அவனது தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அ பூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இருவர் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதன் பாவம் (திட்ட) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநியாயம் செய்யப்பட்டவர் வரம்பு மீறாதவரை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
எவன் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸிர்மா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பகைமை கொள்பவர்களும். தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுதர்தா(ரலி) அறிவிக்கிறார்.
இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார். ஹாம்கி. இது தாரகுத்னீயில் மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டனர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
புறம் பேசுபவன் சுவர்க்கம் புக மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
எவர் தன்னுடைய கோபத்தைத் தடுத்துக் கொள்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ் தனது தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். தப்ரானி
ஒரு கூட்டம் வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களது பேச்சைக் கேட்பதற்கு எவர் முயற்சிக்கிறாரோ, மறுமை நாளில் அவரது காதில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.
தன்னைத் தானே பெரியவன் என்று எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். ஹாம்கி. இது பலமான ஹதீஸாகும்
அவசரப்படுவது ஷைத்தானின் (செயல்களில்) ஒன்றாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபிப்பவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி சொல்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
எவனொருவன் தன் முஸ்லிம் சகோதரனை பாவம் புரியத் தூண்டுகிறானோ அவன் அந்தப் பாவத்தைத் தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ.
மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடு தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், நஸயீ மற்றும் திர்மிதீ.
கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன். அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
Sunday, December 31, 2006
Saturday, December 30, 2006
முஸ்லிமின் உயர்ந்த பண்பு
ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன.
1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது.
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4. அவன் தும்மி ''அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது.
5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்¥த்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.
(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், பைஹக்கீ
நீங்கள் கிறிஸ்தவர்களையும், åதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இதில் இடக்கால் வரை என்பது வரையில் முஸ்லிமிலும் மீதி மாலிக் திர்மிதீ, அபூதாவுத், ஆகியவைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வீண் விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், அஹ்மத்
1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது.
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது)
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4. அவன் தும்மி ''அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது.
5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்¥த்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.
(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், பைஹக்கீ
நீங்கள் கிறிஸ்தவர்களையும், åதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரீ
உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இதில் இடக்கால் வரை என்பது வரையில் முஸ்லிமிலும் மீதி மாலிக் திர்மிதீ, அபூதாவுத், ஆகியவைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரீ, முஸ்லிம்
நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
வீண் விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அபூதாவுத், அஹ்மத்
Thursday, December 07, 2006
ஜனாஸா சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• அடக்கஸ்தலங்களை கற்களைக் கொண்டு கட்டுவது.
• அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது அவைகளை சம அளவை விட உயர்த்துவது.
• அடக்கஸ்தலங்களின் மேல் உட்காருவது.
• செருப்புகளை அணிந்து அடக்கஸ் தலங்களுக்கு மத்தியில் நடப்பது.
• அடக்கஸ்தலங்களில் பெயர் எழுதுவது.
• அடக்கஸ்தலங்களில் விளக்கு எரிப்பது.
• அடக்கஸ்தலங்களைத் தோண்டுவது.
• அடக்கஸ்தலங்களை பள்ளிவாயிலாக மாற்றுவது.
• ஜனாஸா தொழுகையைத் தவிர மற்றவைகளை அடக்கஸ்தலங்களில் தொழுதல்.
• இறந்துவிட்டவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
• கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகள் பயன்படுத்துவது.
• ஒப்பாரி வைப்பது.
• ஒப்பாரி வைக்கத் துண்டுவது.
• அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
• ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
• கன்னத்தில் அறைந்து கொள்வது.
• தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
• காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (அவ்வாறின்றி, பொதுவாக அறிவிப்பு செய்வது கூடும்.)
• அதைச் சுற்றிலும் மதில் கட்டுவது அல்லது அவைகளை சம அளவை விட உயர்த்துவது.
• அடக்கஸ்தலங்களின் மேல் உட்காருவது.
• செருப்புகளை அணிந்து அடக்கஸ் தலங்களுக்கு மத்தியில் நடப்பது.
• அடக்கஸ்தலங்களில் பெயர் எழுதுவது.
• அடக்கஸ்தலங்களில் விளக்கு எரிப்பது.
• அடக்கஸ்தலங்களைத் தோண்டுவது.
• அடக்கஸ்தலங்களை பள்ளிவாயிலாக மாற்றுவது.
• ஜனாஸா தொழுகையைத் தவிர மற்றவைகளை அடக்கஸ்தலங்களில் தொழுதல்.
• இறந்துவிட்டவருக்காக மூன்று நாள்களுக்கு அதிகமாக துக்கம் கடைப்பிடிப்பது. (ஆனால் கணவன் இறந்துவிட்டால் பெண் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்.)
• கணவன் இறந்துவிட்ட பெண் (இத்தா காலம் வரை) நறுமணம், சுர்மா, மருதாணி, நகைகள், அலங்காரமான ஆடைகள் பயன்படுத்துவது.
• ஒப்பாரி வைப்பது.
• ஒப்பாரி வைக்கத் துண்டுவது.
• அதற்காக இறந்தவர் வீட்டில் ஒன்று கூடுவது.
• ஒப்பாரி வைக்கும் பெண்ணை கூலிக்கு அமர்த்துவது.
• கன்னத்தில் அறைந்து கொள்வது.
• தலைமுடியை அவிழ்த்துக் கொள்வது, விரித்துப் போட்டுக் கொள்வது.
• காஃபிர்கள் முறையில் இறப்பு செய்தி அறிவிப்பது. (அவ்வாறின்றி, பொதுவாக அறிவிப்பு செய்வது கூடும்.)
மணம்முடிப்பதில் தடைசெய்யப்பட்டவைகள்
• திருமணத்தை விட்டு விலகுவது.
• ஆண்மையை போக்கிக் கொள்வது.
• இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
• ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
• தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
• இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது
• இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
• நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன், அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
• குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
• ஒரு பொருப்பாளரும் இரு சாட்சிகளு மின்றி திருமணம் முடிப்பது.
• பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
• பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
• பெண்ணை அவளது அனுமதியின்றி மணமுடித்துக் கொடுப்பது.
• ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகிவிட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை).
• கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப்படையாக) பெண் பேசுவது.
• ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
• ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
• ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, கணவனை விட்டுப் பிரிவது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற்காக தடுத்து வைத்துக் கொள்வது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
• தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது
• தலாக்கை விளையாட்டாக பயன் படுத்துவது.
• ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது முதல் மனைவியை தலாக் சொல்லும்படி கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
• கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
• கணவன் மனைவியை குழப்புவது, மனைவி கணவனை குழப்புவது.
• மனைவி கணவனின் பொருள்களி லிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
• மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பின்புறத்தில் உறவு கொள்வது.
• கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
• தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி நோவினை செய்வது.
• கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது).
• வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
• 'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
• பிறர் மூலம் கர்ப்பமான அடிமை பெண்ணிடம் உறவு கொள்வது.
• மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியேற்றுவது) செய்வது.
• பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
• மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
• மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகையைப் பெறுவதற்காக அவளைத் துன்பப்படுத்தி குலஆ (தலாக்) பெற வைப்பது.
• மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
• அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
• ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அனுசரனை காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.
• ஆண்மையை போக்கிக் கொள்வது.
• இரு சகோதரிகளை ஒருசேர மணம் முடிப்பது.
• ஒரு பெண்ணையும், அவளது மாமி அல்லது சிறிய தாயை ஒரு சேர மணமுடிப்பது.
• தனது தந்தையின் மனைவியை அல்லது திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்டவளை மணமுடிப்பது.
• இணைவைக்கும் பெண்ணுடன் திருமணம் செய்வது
• இணைவைக்கும் ஆணுக்கு முஸ்லிமான பெண்ணை மணமுடித்துக் கொடுப்பது.
• நிபந்தனையுடன், அதாவது நான் என் மகனை அல்லது சகோதரியை உனக்கு மணமுடித்துக் கொடுக்கிறேன், அதேபோல் நீ உன் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது.
• குறிப்பிட்டக் காலத்திற்கு மட்டும் திருமணம் முடிப்பது.
• ஒரு பொருப்பாளரும் இரு சாட்சிகளு மின்றி திருமணம் முடிப்பது.
• பெண், பெண்ணை முன்னின்று மணமுடித்து வைப்பது.
• பெண் தானாகவே மணமுடித்துக் கொள்வது.
• பெண்ணை அவளது அனுமதியின்றி மணமுடித்துக் கொடுப்பது.
• ஒருவர் பெண் பேசிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறுக்கிட்டு பெண் கேட்பது. (அவர் அனுமதியளித்தால் அல்லது அதிலிருந்து விலகிவிட்டால் இவ்வாறு செய்வது தவறில்லை).
• கணவன் இறந்து இத்தா இருக்கும் பெண்ணை தெளிவான வார்த்தையைக் கொண்டு (வெளிப்படையாக) பெண் பேசுவது.
• ரஜஈ (ஒன்று அல்லது இரண்டு) தலாக் கொடுக்கப்பட்ட பெண்ணை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெண் கேட்பது.
• ரஜஈ தலாக் சொன்ன பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றுவது.
• ரஜஈ தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா முடியும் முன் கணவனின் வீட்டைவிட்டு வெளியேறி விடுவது, கணவனை விட்டுப் பிரிவது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை அவள் மீது விருப்பமின்றி அவளுக்கு சிரமம் தருவதற்காக தடுத்து வைத்துக் கொள்வது.
• தலாக் விடப்பட்ட பெண்ணை தவணை காலத்திற்குள் அவளை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணமில்லாமல் அவளிடம் சேர்வது.
• தலாக் விடப்பட்ட பெண் தான் கற்பம் தரித்திருப்பதை மறைப்பது
• தலாக்கை விளையாட்டாக பயன் படுத்துவது.
• ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு பெண் கேட்கும்போது முதல் மனைவியை தலாக் சொல்லும்படி கூறுவது. அதேபோல் இரு மனைவிகளில் ஒருவர் கணவனிடம் மற்றவரை தலாக் சொல்லக் கூறுவது.
• கணவனோ மனைவியோ தங்களிடையே உள்ள அந்தரங்க உறவுகளை வெளியே சொல்வது.
• கணவன் மனைவியை குழப்புவது, மனைவி கணவனை குழப்புவது.
• மனைவி கணவனின் பொருள்களி லிருந்து அனுமதியின்றி செலவு செய்வது.
• மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது, பின்புறத்தில் உறவு கொள்வது.
• கணவன் தன்னை அழைக்கும்போது தகுந்த காரணமின்றி மனைவி தவிர்ப்பது.
• தீய குணமுடைய பெண் திருந்தியபின் அவளை குத்திக்காட்டி நோவினை செய்வது.
• கணவனின் அனுமதியின்றி அன்னியரை வீட்டிற்குள் அனுமதிப்பது. (கணவனின் பொதுவான அனுமதி போதுமானது. பெண் மார்க்க வரம்பை மீறிவிடக் கூடாது).
• வலிமா விருந்தை தகுந்த மார்க்கக் காரணமின்றி தவிர்ப்பது.
• 'ஆண் பிள்ளை பெற்று வளமுடன் வாழ்க' என்று வாழ்த்துவது.
• பிறர் மூலம் கர்ப்பமான அடிமை பெண்ணிடம் உறவு கொள்வது.
• மனைவியிடம் உறவு கொள்ளும்போது அவளது அனுமதியின்றி அஸ்ல் (உறவின் போது இந்திரியத்தை வெளியேற்றுவது) செய்வது.
• பயணத்திலிருந்து திரும்பும்போது முன் அறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று வீட்டிற்கு செல்வது.
• மனைவியின் விருப்பமின்றி முழு மஹரை அல்லது அதில் ஒரு பகுதியை நிர்ப்பந்தமாக திரும்பப் பெறுவது.
• மனைவியிடம் நிர்பந்தமாக மஹர் தொகையைப் பெறுவதற்காக அவளைத் துன்பப்படுத்தி குலஆ (தலாக்) பெற வைப்பது.
• மனைவியை ளிஹார் (தாய்க்கு ஒப்பீடு) செய்வது.
• அவ்வாறு ளிஹார் செய்த பெண்ணுடன் அதற்காக கஃபாரா (குற்றப் பரிகாரம்) கொடுப்பதற்கு முன் உறவு கொள்வது.
• ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளில் ஒருவருக்கு மட்டும் அதிகமான அனுசரனை காட்டுவது.
தலாக் விடப்பட்டப் பெண்ணை பழைய கணவருக்கு மணமுடித்து கொடுப்பதற்காக ஒருவருக்கு மணமுடிப்பது.
பேசுவது சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• பொய் சாட்சி சொல்வது.
• ஒழுக்கமான பெண் மீது பழி சுமத்துவது.
• பெண்களின் தன்மைகளைக் கூறி கவிதை எழுதுவது, பாடுவது.
• ஒழுக்கமானவர் மீது பழி சுமத்துவது.
• இட்டுக் கட்டுவது.
• குத்தலாகக் பேசுவது, ஏசுவது.
• இழிவான பட்டப் பெயர்களிட்டு அழைப்பது.
• புறம் பேசுவது.
• கோள் சொல்வது.
• முஸ்லிம்களை பரிகசிப்பது.
• பரம்பரைகளைக் கூறி பெருமை பேசுவது.
• பரம்பரையைக் கூறி குத்திக் காட்டுவது.
• கெட்ட வார்த்தைகளைப் பேசுவது.
• அசிங்கமாகப் பேசுவது, அறுவறுப்பாகப் பேசுவது.
• தீமையைப் பகிரங்கப்படுத்துவது. (ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை பகிரங்கப் படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது).
• பொய் பேசுவது, பொய்களில் மிக கடுமையான பொய் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் பேசுவது.
• கனவு கண்டதாக பொய்யுரைப்பது.
• ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது.
• மூவர் இருக்க இருவர் தனித்து ரகசியம் பேசுவது.
• பாவமான காரியத்திற்கும் மார்க்கத்திற்கு முரணான செயல்களுக்கும் ஆலோசனை செய்வது.
• முஃமின்களை அல்லது சபிக்கக் கூடாதவர்களை சபிப்பது.
• நபி (ஸல்) அவர்களின் சப்தத்திற்கு மேல் சப்தத்தை உயர்த்துவது. அவர்களது முன்னிலையில் சப்தமிட்டு பேசுவது. (நபிமொழியை படிப்பவருக்கு முன் சப்தத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.)
• நபியின் அடக்கஸ்தலத்திற்கு முன் சப்தத்தை உயர்த்துவது.
• இறந்தவர்களை ஏசுவது.
• சேவலை ஏசுவது.
• காற்றை ஏசுவது.
• உடல்நிலைக் குறைவை ஏசுவது.
• ஷைத்தானை ஏசுவது. (நாம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டுமே தவிர அவனை ஏசக் கூடாது.)
• இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது. (தேவைகளைக் கேட்பது.)
• நன்மையை வேண்டியோ தீமையிலிருந்து காக்கவோ இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது.
• தன்னை, குழந்தைகளை, வேலை செய்பவர்களை, பொருள்களை சபிப்பது.
• ஒருவர் 'எனது ஆத்மா தீயதாகிவிட்டது, கெட்டு விட்டது' என்று கூறுவது,
• நான் இன்ன இறைவசனத்தை மறந்து விட்டேன் என்று கூறுவது. (எனக்கு இன்ன வசனம் மறக்கடிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.)
• அல்லாஹ்விடம் 'நீ நாடினால் என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்திப்பது. (மாறாக, உறுதியாக கேட்க வேண்டும்).
• அல்லாஹ்வை மறுப்பவர்களை, முனாஃபிக்குகளைப் பார்த்து தலைவர் என்று கூறுவது.
• ஒருவரைப் பார்த்து 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும்' என்று கூறுவது.
• கணவன் மனைவியைப் பார்த்து அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தட்டும் என்று கூறுவது.
• ஸலாம் சொல்வதற்கு முன் பேசுவது.
• ஒருவர் ஒருவரை புகழ்ந்து பேசிக் கொள்வது.
• பேசாமல் துண்டித்து வாழ்வது.
ஒருவரை அவர்முன் புகழ்வது.
• ஒழுக்கமான பெண் மீது பழி சுமத்துவது.
• பெண்களின் தன்மைகளைக் கூறி கவிதை எழுதுவது, பாடுவது.
• ஒழுக்கமானவர் மீது பழி சுமத்துவது.
• இட்டுக் கட்டுவது.
• குத்தலாகக் பேசுவது, ஏசுவது.
• இழிவான பட்டப் பெயர்களிட்டு அழைப்பது.
• புறம் பேசுவது.
• கோள் சொல்வது.
• முஸ்லிம்களை பரிகசிப்பது.
• பரம்பரைகளைக் கூறி பெருமை பேசுவது.
• பரம்பரையைக் கூறி குத்திக் காட்டுவது.
• கெட்ட வார்த்தைகளைப் பேசுவது.
• அசிங்கமாகப் பேசுவது, அறுவறுப்பாகப் பேசுவது.
• தீமையைப் பகிரங்கப்படுத்துவது. (ஆனால் அநீதி இழைக்கப்பட்டவர் தனக்கு இழைக்கப்பட்டக் கொடுமையை பகிரங்கப் படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது).
• பொய் பேசுவது, பொய்களில் மிக கடுமையான பொய் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் பேசுவது.
• கனவு கண்டதாக பொய்யுரைப்பது.
• ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது.
• மூவர் இருக்க இருவர் தனித்து ரகசியம் பேசுவது.
• பாவமான காரியத்திற்கும் மார்க்கத்திற்கு முரணான செயல்களுக்கும் ஆலோசனை செய்வது.
• முஃமின்களை அல்லது சபிக்கக் கூடாதவர்களை சபிப்பது.
• நபி (ஸல்) அவர்களின் சப்தத்திற்கு மேல் சப்தத்தை உயர்த்துவது. அவர்களது முன்னிலையில் சப்தமிட்டு பேசுவது. (நபிமொழியை படிப்பவருக்கு முன் சப்தத்தை உயர்த்துவதும் இதில் அடங்கும்.)
• நபியின் அடக்கஸ்தலத்திற்கு முன் சப்தத்தை உயர்த்துவது.
• இறந்தவர்களை ஏசுவது.
• சேவலை ஏசுவது.
• காற்றை ஏசுவது.
• உடல்நிலைக் குறைவை ஏசுவது.
• ஷைத்தானை ஏசுவது. (நாம் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேட வேண்டுமே தவிர அவனை ஏசக் கூடாது.)
• இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்வது. (தேவைகளைக் கேட்பது.)
• நன்மையை வேண்டியோ தீமையிலிருந்து காக்கவோ இறந்தவர்களிடம் பிரார்த்திப்பது.
• தன்னை, குழந்தைகளை, வேலை செய்பவர்களை, பொருள்களை சபிப்பது.
• ஒருவர் 'எனது ஆத்மா தீயதாகிவிட்டது, கெட்டு விட்டது' என்று கூறுவது,
• நான் இன்ன இறைவசனத்தை மறந்து விட்டேன் என்று கூறுவது. (எனக்கு இன்ன வசனம் மறக்கடிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.)
• அல்லாஹ்விடம் 'நீ நாடினால் என்னை மன்னித்துவிடு' என்று பிரார்த்திப்பது. (மாறாக, உறுதியாக கேட்க வேண்டும்).
• அல்லாஹ்வை மறுப்பவர்களை, முனாஃபிக்குகளைப் பார்த்து தலைவர் என்று கூறுவது.
• ஒருவரைப் பார்த்து 'அல்லாஹ் உன்னை கேவலப்படுத்தட்டும்' என்று கூறுவது.
• கணவன் மனைவியைப் பார்த்து அல்லாஹ் உன்னைக் கேவலப்படுத்தட்டும் என்று கூறுவது.
• ஸலாம் சொல்வதற்கு முன் பேசுவது.
• ஒருவர் ஒருவரை புகழ்ந்து பேசிக் கொள்வது.
• பேசாமல் துண்டித்து வாழ்வது.
ஒருவரை அவர்முன் புகழ்வது.
பெண்கள் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• பெண் அந்நியர்களுக்கு தனது அலங்காரத்தை வெளிப்படுத்துவது.
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
• இஸ்லாம் கூறும் பர்தா முறையின்றி வெளியே செல்வது.
• ஒரு பெண் அடுத்துவர்மீது அவதூறு கூறுவது.
• குழந்தைக்கு பாலூட்டும் காலத்தில் கொடுக்கப்படும் உதவி தொகையில் கணவன் மனைவிக்கோ மனைவி கணவனுக்கோ சிரமம் ஏற்படுத்துவது.
• குழந்தையை தாயிடமிருந்து பிரிப்பது.
• பெண் மஹ்ரம் துணையின்றி பயணிப்பது.
• ஒரு ஆண் அந்நியப் பெண்ணிடம் கை கொடுப்பது.
• பெண் நறுமணம் பூசி ஆண்களுக் கிடையில் செல்வது.
• ஆண் அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது, அந்நியப் பெண்களை கூர்ந்து பார்ப்பது.
• அந்நியப் பெண்ணை ஒரு முறைக்கு மறுமுறை பார்ப்பது.
திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது.
மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.
பெண்ணை அவளுக்கு விருப்ப மில்லாதவருக்கு நிர்பந்தமாக மணம் முடித்துக் கொடுப்பது.
ஒரு பெண், தனது மூத்த சகோதரி மணம் முடிக்காதவரை தான் மணம் முடிக்க மாட்டேன் என்று கூறுவது. மூத்த பெண்ணுக்கு திருமணமானால்தான் இளைய வளுக்கு திருமணம் செய்து கொடுப்பேன் என்று பெண்ணின் பொறுப்பாளர் கூறுவது. (இதனால் இருவரது திருமணமும் தாமதமாகலாம்.)
பெண் கேட்டு வருபவரின் மார்க்கப் பண்பாட்டை பார்க்காமல் உலக பொருளா தாரத்தை மட்டும் பார்ப்பது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய குணமும் மார்க்கப் பேணுதலும் தான் விரும்பும்படி இருக்கிறதோ அத்தகையவர் பெண் கேட்டு வந்தால் அவருக்கு மணம் முடித்து கொடுங்கள். அப்படி செய்ய வில்லையெனில் பூமியில் குழப்பமும், பெரும் சீர்கேடும் ஏற்பட்டுவிடும். (திர்மிதி)
குடும்ப வழமையைக் காரணம் காட்டி உறவு முறையில் உள்ளவரை மணம் முடிக்க பெண்ணை நிர்பந்திப்பது.
குறி பார்ப்பவர்களிடம் சென்று ஆலோசனை செய்வது. நட்சத்திர ராசி, ஜாதக ஒற்றுமை பார்ப்பது. இவ்வாறு செய்வது மாபெரும் குற்றமாகும்.
பெண்பேச வரும் மாப்பிள்ளையை மார்க்கம் அனுமதித்த முறையில் பெண்ணை பார்க்க அனுமதிக்காமல் இருப்பது.
திருமணத்திற்கு முன் பெண்ணுடன் தொலைபேசியில் பேசி உரையாடுவது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறி இவ்வாறு செய்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத் தகுந்த காரணமல்ல.
மார்க்க ஹிஜாப் இன்றி (மாற்றார்களைப்போல) பெண் பிள்ளைகளை அலங்கரித்து பெண்பேச வரும் சபைக்கு கொண்டு வருவது. (மானமுள்ள மக்கள் இத்தகைய செயலை செய்யமாட்டார்கள்.)
பெண்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெண் பேசச் செல்வது திருமணம் முடிக்கவேண்டும் என்ற எண்ண மில்லாமல் இவ்வாறு செய்வது பெரும் மோசடியும் ஏமாற்றும் தன்மையுமாகும்.
பெண்பேச வருபவரிடம் பெண்ணின் போட்டோவை தருவது. இதன்மூலம் பல சீர்கேடுகள் நிகழ்கின்றன.
பெண் பேசும்போது மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றி மோதிரம் அணிவிப்பது.
பெண் பேசும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கூச்சலிடுவது, ஒருவிதமாக சப்தமிடுவது.
பெண் பேசிவிட்டு துரிதமாக திருமண ஏற்பாடு செய்யாமல் நீண்ட இடைவெளி விடுவது.
பெண் பேச துவங்கும் முன் அல்லது பேசிவிட்டு அல்ஃபாதிஹா ஓதுவது- இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
மஹ்ரை கூட்டிக் கேட்பது.
திருமண ஒப்பந்தம் நடக்கும் சமயம் யாராவது கை சொடக்குவிட்டால் அதை துற்குறியாக கருதுவது-அதனால் திருமணம் நின்றுவிடும் அல்லது முறிந்துவிடும் என்று நம்புவது.
பெண்ணின் பொருப்பாளி, மாப்பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டபின்தான் திருமண ஒப்பந்தம் படிப்பது சரி என்று கூறுவது. இவ்வாறு செய்வதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திருமண ஒப்பந்தத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமான வாக்கியங்களுடன் அதிகப்படியாக கூறுவது. எ.கா: என்னை வக்கீலாக நியமித்த பெண்ணை அல்லாஹ் வின் வேதப்படி, அவனது தூதரின் வழி முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட மஹ்ருக்கு இன்ன இமாமின் மத்ஹபை பின்பற்றி உனக்கு மணம் முடித்துக் கொடுக்கிறேன் என்று கூறுவது.
சில குறிப்பிட்ட நேரங்களில், நாள் களில், மாதங்களில் திருமணம் செய்வதை கெட்ட சகுணமாக கருதுவது.
துப்பாக்கி அல்லது வெடி வெடித்து திருமண நிகழ்ச்சி நடத்துவது.
பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்கிறேன் என்ற பெயரில் மார்க்கம் தடுத்தவைகளை செய்வது. எ.கா: மறைக்கவேண்டிய பகுதியை மறைக்காமல் இருப்பது, நெற்றி (புருவ) முடியை அகற்றுவது. மாற்று மத பெண்களைப்போல் முடியை கிராப் வெட்டிக் கொள்வது.
பொது நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இன்றி கலந்துறவாடுவது.
பெண் கவர்ச்சியான, அசிங்கமான ஆடைகளை அணிவது. (அவள் பெண்களுக்கு மத்தியில் இருப்பினும் சரியே!)
கிறிஸ்துவ பெண்களைப்போல் நீண்ட திருமண ஆடைகளை அணிவது. (இத்தகைய ஆடைகளை பின்பக்கத்திலிருந்து சுமந்து வருவதற்கு பல நபர்கள் தேவைப்படும்.)
மாப்பிள்ளையையும் பெண்ணையும் கூட்டத்திற்கு நடுவில் உட்கார வைப்பது, நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரும் அவர்களை பார்க்குமாறு ஏற்பாடு செய்வது.
பெண்கள் மார்க்க ஹிஜாப் இன்றியும் நறுமணம் பூசிக்கொண்டும் வீட்டுக்கு வெளியே செல்வது.
ஆண் குழந்தைகள் பெற்று வளமுடன் வாழ்க! என வாழ்த்துவது. (இது காஃபிர்களின் வாழ்த்தாகும். நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த (துஆ) வாழ்த்துரையைத்தான் கூறவேண்டும்.)
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்களை மணம் முடிப்பவர் பார்க்கும் படி செய்வது. அந்நியப் பெண்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்து கூறுவது.
இசை இசைப்பது, பாடகர்கள் அல்லது பாடகிகளை அழைத்து பாட வைப்பது.
நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெண்கள், மைக்கில் ஆண்கள் கேட்கும்படி பாடுவது.
கை தட்டி பாட்டுப்பாடி, கும்மாளம் போடும் பெண்களை நிகழ்ச்சிக்கு அழைப்பது.
பெண்கள் நடனமாடுவது.
வலிமா மற்றும் இதர விருந்துகளில் அளவுகடந்து செலவு செய்வது.
படுக்கை அறை ரகசியங்களை வெளியிடுவது.
தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேனிலவு கொண்டாட செல்கிறோம் என்று கூறி அந்நியர்களின் நாட்டுக்குச் செல்வது. இவ்வாறு செய்வது மேற்கத்திய கலாச்சாரமாகும். (இதனால் நடக்கக்கூடாத பல சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கிறோம்.)
தொழில், வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவைகள்
• வட்டி வாங்குவது.
• ஏமாற்றுவது, அறியாமை, மோசடி செய்வது.
• இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது.
• ¨(நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது.
• நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவைகளை வியாபாரம் செய்வது.
• நாயை விற்று அதன் கிரயத்தை சாப்பிடுவது.
• அல்லாஹ் ஹராமாக்கிய பொருள்களை விற்பது, வாங்குவது.
• வாங்கும் எண்ணமின்றி பொருள்களின் விலையை உயர்த்துவது.
• வியாபாரப் பொருள்களின் குறைகளை மறைப்பது.
• வியாபாரப் பொருளின் குறைகளை சொல்லாமல் விற்பது.
• ஜுமுஆ நாளன்று இரண்டாவது பாங்கிற்குப் பின் வியாபாரம் செய்வது.
• தனக்கு சொந்தமில்லாததை விற்பது.
• வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்வது.
• தங்கத்தை தங்கத்திற்குப் பகரமாக, வெள்ளியை வெள்ளிக்குப் பகரமாக விற்கும் போது ஏற்றத்தாழ்வுடன் விற்பது. (ஆனால் ஒன்றுக்கொன்று சமமாகவும், ரொக்கமாகவும் இருந்தால் விற்பது கூடும்).
• ஒருவர் ஒரு பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• ஒருவர் ஒரு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• பழங்களை அது பூவாக இருக்கும் போதும், பறிப்பதற்கு முன்னும் விற்பனை செய்வது.
• குறையுள்ள பொருளை மறைத்து விற்றுவிட்டு அதன் கிரயத்தை உண்பது.
• நிறுவையில், அளவையில் குறை செய்வது.
• பொருள்களை பதுக்குவது.
• வியாபாரிகள் ஊருக்குள் வருவதற்கு முன் ஊருக்கு வெளியில் சென்று வியாபாரம் பேசுவது.
• நகரத்தில் உள்ளவர் கிராமவாசிக்கு விற்றுக் கொடுப்பது. (அதாவது, கிராமவாசியின் பொருளை விற்பதற்கு இடைத் தரகராக செயல்படுவது. அவரது பொருளை தானாக விற்பனை செய்வதற்கு விட்டுவிட வேண்டும்.)
• குர்பானி கொடுத்துவிட்டு அதன் தோலை விற்று, குர்பானி கொடுத்தவர் பயன்பெறுவது.
• வீடு, தோட்டம் போன்றவற்றில் பங்காளியாக இருப்பவர், தனது பங்கை வாங்க சக்தியுள்ள மற்ற பங்காளியிடம் விற்காமல் பிறரிடம் விற்பது.
• திருக்குர்ஆனை ஓதிக்காண்பித்து சம்பாதிப்பது.
• எத்தீம்களின் (அநாதைகளின்) பொருளை சாப்பிடுவது.
• சூதாடுவது.
• அபகரிப்பது.
• லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது.
• திருடுவது.
• வெற்றி (கனீமத்து)ப் பொருளை பங்கிடும் முன் அனுமதியின்றி எடுத்துக் கொள்வது.
• கொள்ளையடிப்பது.
• அநியாயமான முறையில் மக்கள் சொத்துக்களை அனுபவிப்பது.
• மக்களின் சொத்துக்களை வீணடிப்பது.
• கொடுக்கும் நோக்கமின்றி கடன் வாங்குவது.
• மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை குறைத்துக் கொடுப்பது.
• கண்டெடுக்கப்பட்ட பொருளை மறைப்பது, மறைக்க முயற்சிப்பது.
• உரியவருக்குத் தெரியாமல் கீழே கிடக்கும் பொருளை எடுப்பது.
• மோசடி, ஏமாற்றுதல் ஆகியவற்றின் அனைத்து வழிகளும்.
• பிறர் பொருளை அனுமதியின்றி பயன்படுத்துவது.
• பிறரை வருத்தி அவரது பொருளை பெறுவது.
• சிபாரிசு செய்ததற்காக அன்பளிப்பு பெறுவது.
மார்க்கத்தை மறந்து (மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து) உலகப் பொருளை சம்பாதிக்கப் பாடுபடுவது.
• ஏமாற்றுவது, அறியாமை, மோசடி செய்வது.
• இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது.
• ¨(நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது.
• நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவைகளை வியாபாரம் செய்வது.
• நாயை விற்று அதன் கிரயத்தை சாப்பிடுவது.
• அல்லாஹ் ஹராமாக்கிய பொருள்களை விற்பது, வாங்குவது.
• வாங்கும் எண்ணமின்றி பொருள்களின் விலையை உயர்த்துவது.
• வியாபாரப் பொருள்களின் குறைகளை மறைப்பது.
• வியாபாரப் பொருளின் குறைகளை சொல்லாமல் விற்பது.
• ஜுமுஆ நாளன்று இரண்டாவது பாங்கிற்குப் பின் வியாபாரம் செய்வது.
• தனக்கு சொந்தமில்லாததை விற்பது.
• வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்வது.
• தங்கத்தை தங்கத்திற்குப் பகரமாக, வெள்ளியை வெள்ளிக்குப் பகரமாக விற்கும் போது ஏற்றத்தாழ்வுடன் விற்பது. (ஆனால் ஒன்றுக்கொன்று சமமாகவும், ரொக்கமாகவும் இருந்தால் விற்பது கூடும்).
• ஒருவர் ஒரு பொருளை விற்பனை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• ஒருவர் ஒரு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிடுவது.
• பழங்களை அது பூவாக இருக்கும் போதும், பறிப்பதற்கு முன்னும் விற்பனை செய்வது.
• குறையுள்ள பொருளை மறைத்து விற்றுவிட்டு அதன் கிரயத்தை உண்பது.
• நிறுவையில், அளவையில் குறை செய்வது.
• பொருள்களை பதுக்குவது.
• வியாபாரிகள் ஊருக்குள் வருவதற்கு முன் ஊருக்கு வெளியில் சென்று வியாபாரம் பேசுவது.
• நகரத்தில் உள்ளவர் கிராமவாசிக்கு விற்றுக் கொடுப்பது. (அதாவது, கிராமவாசியின் பொருளை விற்பதற்கு இடைத் தரகராக செயல்படுவது. அவரது பொருளை தானாக விற்பனை செய்வதற்கு விட்டுவிட வேண்டும்.)
• குர்பானி கொடுத்துவிட்டு அதன் தோலை விற்று, குர்பானி கொடுத்தவர் பயன்பெறுவது.
• வீடு, தோட்டம் போன்றவற்றில் பங்காளியாக இருப்பவர், தனது பங்கை வாங்க சக்தியுள்ள மற்ற பங்காளியிடம் விற்காமல் பிறரிடம் விற்பது.
• திருக்குர்ஆனை ஓதிக்காண்பித்து சம்பாதிப்பது.
• எத்தீம்களின் (அநாதைகளின்) பொருளை சாப்பிடுவது.
• சூதாடுவது.
• அபகரிப்பது.
• லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது.
• திருடுவது.
• வெற்றி (கனீமத்து)ப் பொருளை பங்கிடும் முன் அனுமதியின்றி எடுத்துக் கொள்வது.
• கொள்ளையடிப்பது.
• அநியாயமான முறையில் மக்கள் சொத்துக்களை அனுபவிப்பது.
• மக்களின் சொத்துக்களை வீணடிப்பது.
• கொடுக்கும் நோக்கமின்றி கடன் வாங்குவது.
• மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை குறைத்துக் கொடுப்பது.
• கண்டெடுக்கப்பட்ட பொருளை மறைப்பது, மறைக்க முயற்சிப்பது.
• உரியவருக்குத் தெரியாமல் கீழே கிடக்கும் பொருளை எடுப்பது.
• மோசடி, ஏமாற்றுதல் ஆகியவற்றின் அனைத்து வழிகளும்.
• பிறர் பொருளை அனுமதியின்றி பயன்படுத்துவது.
• பிறரை வருத்தி அவரது பொருளை பெறுவது.
• சிபாரிசு செய்ததற்காக அன்பளிப்பு பெறுவது.
மார்க்கத்தை மறந்து (மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து) உலகப் பொருளை சம்பாதிக்கப் பாடுபடுவது.
Monday, October 30, 2006
சுத்தம், தூக்கம் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பது மற்றும் தெருக்களிலோ அல்லது தெருக்களின் ஓரங்களிலோ மலம், ஜலம் கழிப்பது.
• மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது.
• மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்வது அல்லது கிப்லாவை பின்னோக்கி அமர்வது. (சில அறிஞர்கள் கட்டிடங்களுக்குள் இருந்தால் குற்றமில்லை என்கின்றனர்.)
• வலது கையைக் கொண்டு மர்மஸ் தானத்தை சுத்தம் செய்வது அல்லது வலது கையால் (மர்மஸ்தானத்தை) துடைப்பது.
• தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவாமல் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் கைகளை நுழைப்பது.
• மலம், ஜலம் கழிப்பவருக்கு ஸலாம் சொல்வது.
• உறுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது.
தூக்கம் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• தடுப்பு இல்லாத மாடிகளில் தூங்குவது. (ஏனெனில் புறண்டு படுக்கும்போது கீழே விழும் அபாயம் உண்டு.)
• பெருந்தொடக்கு ஏற்பட்ட பின் உழு செய்யாமல் தூங்குவது.
• விரிப்பிலிருந்து எழுந்த பின் சிறிது நேரம் கழித்து அதே விரிப்பில் மீண்டும் தூங்க நேர்ந்தால் அதை மூன்று முறை உதறாமல் தூங்குவது.
• பள்ளத்தாக்கின் நடுவில், நீரோடைகளில் தூங்குவது.
• தனியாக இரவில் தூங்குவது.
• தூங்கும்போது நெருப்பை அணைக் காமல் எறிந்த நிலையில் விடுவது.
• கையில் கொழுப்புகள், உணவு எச்சம் உள்ள நிலையில் தூங்குவது.
• குப்புறப் படுத்து தூங்குவது.
• கைலி (லுங்கி) போன்ற ஆடை அணிந்திருக்கும்போது மல்லாந்து படுத்துக் கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு படுப்பது. (மர்மஸ்தானம் தெரியும் என்ற பயம் இல்லையெனில் இவ்வாறு தூங்குவது தவறில்லை.)
தீய கனவுகளை பிறரிடம் கூறுவது அல்லது அதற்கு விளக்கம் கூறுவது.
• மக்கள் பயன்படுத்தும் நிழலிலும், குடிநீருக்கு பயன்படுத்தும் குளங்களுக்கு அருகிலும் மலம், ஜலம் கழிப்பது.
• மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்வது அல்லது கிப்லாவை பின்னோக்கி அமர்வது. (சில அறிஞர்கள் கட்டிடங்களுக்குள் இருந்தால் குற்றமில்லை என்கின்றனர்.)
• வலது கையைக் கொண்டு மர்மஸ் தானத்தை சுத்தம் செய்வது அல்லது வலது கையால் (மர்மஸ்தானத்தை) துடைப்பது.
• தூங்கி எழுந்தவுடன் கைகளைக் கழுவாமல் தண்ணீர் உள்ள பாத்திரங்களில் கைகளை நுழைப்பது.
• மலம், ஜலம் கழிப்பவருக்கு ஸலாம் சொல்வது.
• உறுப்பை வலது கையால் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிப்பது.
தூக்கம் சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• தடுப்பு இல்லாத மாடிகளில் தூங்குவது. (ஏனெனில் புறண்டு படுக்கும்போது கீழே விழும் அபாயம் உண்டு.)
• பெருந்தொடக்கு ஏற்பட்ட பின் உழு செய்யாமல் தூங்குவது.
• விரிப்பிலிருந்து எழுந்த பின் சிறிது நேரம் கழித்து அதே விரிப்பில் மீண்டும் தூங்க நேர்ந்தால் அதை மூன்று முறை உதறாமல் தூங்குவது.
• பள்ளத்தாக்கின் நடுவில், நீரோடைகளில் தூங்குவது.
• தனியாக இரவில் தூங்குவது.
• தூங்கும்போது நெருப்பை அணைக் காமல் எறிந்த நிலையில் விடுவது.
• கையில் கொழுப்புகள், உணவு எச்சம் உள்ள நிலையில் தூங்குவது.
• குப்புறப் படுத்து தூங்குவது.
• கைலி (லுங்கி) போன்ற ஆடை அணிந்திருக்கும்போது மல்லாந்து படுத்துக் கொண்டு ஒரு காலின் மேல் மற்றொரு காலை வைத்துக்கொண்டு படுப்பது. (மர்மஸ்தானம் தெரியும் என்ற பயம் இல்லையெனில் இவ்வாறு தூங்குவது தவறில்லை.)
தீய கனவுகளை பிறரிடம் கூறுவது அல்லது அதற்கு விளக்கம் கூறுவது.
உணவு வகைகளில் தடை செய்யப்பட்டவைகள்
• தானாக செத்தது, அடிபட்டு செத்தது, கழுத்து நெறிக்கி செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, சிங்கம், புலி போன்ற மிருகங்கள் கடித்து செத்தது, உயரமான இடத்திலிருந்து விழுந்து செத்தது ஆகிய வற்றை உண்பது.
• இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப் பட்டது, சிலைகளுக்காக அறுக்கப்பட்டது, அல்லாஹ்வின் பெயரை வேண்டுமென்றே கூறாமல் அறுக்கப்பட்டது, தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உண்பது.
• கோரைப் பற்களுடைய பிராணிகளை சாப்பிடுவது.
• கிழிக்கும் நகங்களுடைய பறவைகளை சாப்பிடுவது.
• நாட்டுக் கழுதையை சாப்பிடுவது.
• மருந்திற்காக தவளையை கொல்வது, அதை உண்பது.
• பிராணிகளை நிற்கவைத்து அம்பெறிந்து கொலை செய்வது, உணவளிக்காமல் அவைகளை கட்டிப்போட்டு வைப்பது.
• பயிற்சியளிக்கப்படாத மிருகங்களைக் கொண்டு வேட்டையாடப்பட்ட பிராணிகளை உண்பது.
• பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை பிராணிகளுடன் பயிற்சியளிக்கப்படாத பிராணிகளும் சேர்ந்து வேட்டையாடியதை சாப்பிடுவது.
• கடினமான ஒரு கருவியைக் கொண்டு வேட்டையாடப்பட்டதை உண்பது. (ஆனால் கூர்மையான ஒன்றைக் கொண்டு வேட்டை யாடப்பட்டு பிஸ்மில்லாஹ் கூறப்பட்டால் அவைகளை உண்பது கூடும்).
• பல், நகம், எலும்பு போன்றவற்றைக் கொண்டு பிராணிகளை அறுப்பது.
• ஒரு மிருகத்தை மற்றொரு மிருகத்தின் முன்னிலையில் அறுப்பது.
• அறுக்கப்படப்போகும் மிருகத்திற்கு முன் கத்தியை தீட்டுவது.
• பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்வது.
• போதையேரிய பழரசத்தை அருந்துவது.
ஹராமான முறையில் செய்யப்பட்ட உணவை உண்பது
உண்பது, குடிப்பதில் தடை செய்யப்பட்டவைகள்
• உணவுத் தட்டில் பிறர் முன் இருப்பவற்றிலிருந்து உண்பது.
• தட்டின் நடுவிலிருந்து உண்பது (ஓரத்திலிருந்து உணவை சாப்பிட வேண்டும். அல்லாஹ்வின் பரகத் (அருள்) நடுவில் இறங்குகிறது.)
• கீழே விழுந்த கவலத்தை, உணவை எடுத்துச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுவது. (மாறாக அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.)
• தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவது, குடிப்பது.
• நின்றுகொண்டு குடிப்பது.
• உடைந்த பாத்திரத்தின் ஓட்டையிலிருந்து குடிப்பது.
• குடிக்கும்போது பாத்திரத்தில் மூச்சு விடுவது, ஒரே மூச்சில் குடிப்பது. (மாறாக மூன்று மூச்சில் குடிக்க வேண்டும்).
• இடது கையால் குடிப்பது, சாப்பிடுவது.
• கூட்டாக சாப்பிடும்போது பழம் முதலிய வற்றை இரண்டிரண்டாக எடுத்துச் சாப்பிடுவது. (ஆனால் உடன் சாப்பிடுபவர் அனுமதித்தால் சேர்த்து சாப்பிடலாம்.)
• மாற்றார்களின் பாத்திரங்களை பயன் படுத்துவது. (வேறு வழியில்லையெனில் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.)
• மது பரிமாறப்படும் மேஜைகளிலும், விரிப்புகளிலும் உணவு உண்பது.
• சாய்ந்துகொண்டு சாப்பிடுவது.
• இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவைகளின் பெயர் கூறி அறுக்கப் பட்டது, சிலைகளுக்காக அறுக்கப்பட்டது, அல்லாஹ்வின் பெயரை வேண்டுமென்றே கூறாமல் அறுக்கப்பட்டது, தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளின் பால் மற்றும் இறைச்சியை உண்பது.
• கோரைப் பற்களுடைய பிராணிகளை சாப்பிடுவது.
• கிழிக்கும் நகங்களுடைய பறவைகளை சாப்பிடுவது.
• நாட்டுக் கழுதையை சாப்பிடுவது.
• மருந்திற்காக தவளையை கொல்வது, அதை உண்பது.
• பிராணிகளை நிற்கவைத்து அம்பெறிந்து கொலை செய்வது, உணவளிக்காமல் அவைகளை கட்டிப்போட்டு வைப்பது.
• பயிற்சியளிக்கப்படாத மிருகங்களைக் கொண்டு வேட்டையாடப்பட்ட பிராணிகளை உண்பது.
• பயிற்சியளிக்கப்பட்ட வேட்டை பிராணிகளுடன் பயிற்சியளிக்கப்படாத பிராணிகளும் சேர்ந்து வேட்டையாடியதை சாப்பிடுவது.
• கடினமான ஒரு கருவியைக் கொண்டு வேட்டையாடப்பட்டதை உண்பது. (ஆனால் கூர்மையான ஒன்றைக் கொண்டு வேட்டை யாடப்பட்டு பிஸ்மில்லாஹ் கூறப்பட்டால் அவைகளை உண்பது கூடும்).
• பல், நகம், எலும்பு போன்றவற்றைக் கொண்டு பிராணிகளை அறுப்பது.
• ஒரு மிருகத்தை மற்றொரு மிருகத்தின் முன்னிலையில் அறுப்பது.
• அறுக்கப்படப்போகும் மிருகத்திற்கு முன் கத்தியை தீட்டுவது.
• பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் அளிக்கப்படும் விருந்தில் கலந்து கொள்வது.
• போதையேரிய பழரசத்தை அருந்துவது.
ஹராமான முறையில் செய்யப்பட்ட உணவை உண்பது
உண்பது, குடிப்பதில் தடை செய்யப்பட்டவைகள்
• உணவுத் தட்டில் பிறர் முன் இருப்பவற்றிலிருந்து உண்பது.
• தட்டின் நடுவிலிருந்து உண்பது (ஓரத்திலிருந்து உணவை சாப்பிட வேண்டும். அல்லாஹ்வின் பரகத் (அருள்) நடுவில் இறங்குகிறது.)
• கீழே விழுந்த கவலத்தை, உணவை எடுத்துச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுவது. (மாறாக அதை சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.)
• தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் சாப்பிடுவது, குடிப்பது.
• நின்றுகொண்டு குடிப்பது.
• உடைந்த பாத்திரத்தின் ஓட்டையிலிருந்து குடிப்பது.
• குடிக்கும்போது பாத்திரத்தில் மூச்சு விடுவது, ஒரே மூச்சில் குடிப்பது. (மாறாக மூன்று மூச்சில் குடிக்க வேண்டும்).
• இடது கையால் குடிப்பது, சாப்பிடுவது.
• கூட்டாக சாப்பிடும்போது பழம் முதலிய வற்றை இரண்டிரண்டாக எடுத்துச் சாப்பிடுவது. (ஆனால் உடன் சாப்பிடுபவர் அனுமதித்தால் சேர்த்து சாப்பிடலாம்.)
• மாற்றார்களின் பாத்திரங்களை பயன் படுத்துவது. (வேறு வழியில்லையெனில் நன்கு கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.)
• மது பரிமாறப்படும் மேஜைகளிலும், விரிப்புகளிலும் உணவு உண்பது.
• சாய்ந்துகொண்டு சாப்பிடுவது.
ஆடை அலங்காரம் தொடர்பாக தடை செய்யப்பட்டவைகள்
• ஆடைகளில் வரம்பு மீறி செலவு செய்வது.
• ஆண்கள் தங்கம் அணிவது.
• நடு விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிவது.
• இரும்பு மோதிரம் அணிவது, ஆடையின்றி இருப்பது, நடப்பது, தொடையை பிறருக்குக் காட்டுவது.
• ஆடைகளை கரண்டைக்குக் கீழ் தொங்க விடுவது, பெருமையுடன் ஆடைகளை தரையில் இழுத்துச் செல்வது.
• பகட்டு ஆடைகளை அணிவது.
• ஆண்கள் பட்டாடை அணிவது,
• ஆண்கள் பெண்களின் ஆடைகளை, பெண்கள் ஆண்களின் ஆடைகளை அணிவது.
• பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய அல்லது குட்டையான ஆடைகளை அணிவது.
• மாற்றுமத பெண்கள் அணியும் ஆடைகளை அணிவது.
• நின்றுகொண்டு 'ஷூ' போன்ற காலணிகளை அணிவது. (அதாவது நின்று கொண்டு அணிந்தால் சிரமம் ஏற்படும் என்றிருக்கும் காலணிகளை உட்கார்ந்து கொண்டுதான் அணியவேண்டும்.)
• ஒரு காலணியை மட்டும் அணிந்து கொண்டு நடப்பது.
• இணைவைப்பவர்களைப் போல் மீசையை வளர்த்து தாடியை சிரைப்பது
• முகம், புருவத்தின் முடிகளை பிடிங்குவது.
• பெண் மொட்டையடித்துக் கொள்வது.
• சவரிமுடி கட்டுவது
• நரை முடியைப் பிடுங்குவது.
• நரைக்கு கருநிறம் பூசுவது (டை அடிப்பது).
• தலையில் சில பகுதிகளை சிரைத்து சில பகுதியை விட்டுவிடுவது.
• உயிருள்ளவைகளை வரைவது.
• பட்டாடையில் அமர்வது.
• புலித்தோல் அல்லது தற்பெருமை யூட்டும்படியான விரிப்புகளில் அமர்வது, அவைகளைப் பயன்படுத்துவது.
சுவர்களை திரையிட்டு அலங்கரிப்பது.
• ஆண்கள் தங்கம் அணிவது.
• நடு விரலிலும், ஆள்காட்டி விரலிலும் மோதிரம் அணிவது.
• இரும்பு மோதிரம் அணிவது, ஆடையின்றி இருப்பது, நடப்பது, தொடையை பிறருக்குக் காட்டுவது.
• ஆடைகளை கரண்டைக்குக் கீழ் தொங்க விடுவது, பெருமையுடன் ஆடைகளை தரையில் இழுத்துச் செல்வது.
• பகட்டு ஆடைகளை அணிவது.
• ஆண்கள் பட்டாடை அணிவது,
• ஆண்கள் பெண்களின் ஆடைகளை, பெண்கள் ஆண்களின் ஆடைகளை அணிவது.
• பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய அல்லது குட்டையான ஆடைகளை அணிவது.
• மாற்றுமத பெண்கள் அணியும் ஆடைகளை அணிவது.
• நின்றுகொண்டு 'ஷூ' போன்ற காலணிகளை அணிவது. (அதாவது நின்று கொண்டு அணிந்தால் சிரமம் ஏற்படும் என்றிருக்கும் காலணிகளை உட்கார்ந்து கொண்டுதான் அணியவேண்டும்.)
• ஒரு காலணியை மட்டும் அணிந்து கொண்டு நடப்பது.
• இணைவைப்பவர்களைப் போல் மீசையை வளர்த்து தாடியை சிரைப்பது
• முகம், புருவத்தின் முடிகளை பிடிங்குவது.
• பெண் மொட்டையடித்துக் கொள்வது.
• சவரிமுடி கட்டுவது
• நரை முடியைப் பிடுங்குவது.
• நரைக்கு கருநிறம் பூசுவது (டை அடிப்பது).
• தலையில் சில பகுதிகளை சிரைத்து சில பகுதியை விட்டுவிடுவது.
• உயிருள்ளவைகளை வரைவது.
• பட்டாடையில் அமர்வது.
• புலித்தோல் அல்லது தற்பெருமை யூட்டும்படியான விரிப்புகளில் அமர்வது, அவைகளைப் பயன்படுத்துவது.
சுவர்களை திரையிட்டு அலங்கரிப்பது.
Friday, October 13, 2006
சுன்னத்தான நோன்புகள்
ஆஷூரா நோன்பு
ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பிpன் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : முஸ்லிம்
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹூரைரா(ரலி) : அபூதாவூத்
முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்
ரஸூல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா
அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு
நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.
உபரியா(நஃபிலா)ன நோன்பு
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்
அதிக பட்ச(உபரியான) நோன்பு
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.
ரமலானுக்குப்பின் நோன்புகளில் மிக்க விஷேசமான நோன்பு அல்லாஹ்வின் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். ஃபர்லான தொழுகைக்குப்பிpன் மிக்க விஷேசமான தொழுகை இரவுத் தொழுகையாகும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்; கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : முஸ்லிம்
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயக் கடமையாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தபோது யூதர்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று நோன்பு நோற்கக் கண்டு இது என்ன நோன்பு என்று கேட்டதற்கு இந்த நல்ல நாளில் தான் மூஸா(அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினான். அதனால் மூஸா(அலை) நோன்பிருந்தனர் என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் உரிமையுடையவன் நான் தான் என்று கூறி விட்டு தானும் நோன்பு நோற்று மற்றவர்களையும் நோன்பு நோற்கக் கட்டளையிட்டார்கள். - அபூஹூரைரா(ரலி) : அபூதாவூத்
முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தனர் மற்றவர்களையும் நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்நாளை கண்ணியப்படுததுகின்றனர் என்று கூற அதற்கு நபி(ஸல்) அவர்கள் இன்ஷாஅல்லாஹ் (இறைவன் நாடினால்) வரும் ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்றார்கள். ஆனால் மறு ஆண்டு வருவதற்குள் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். - இப்னுஅப்பாஸ்(ரலி) : முஸ்லிம் அபூதாவூத்
ரஸூல்(ஸல்) அவர்களிடம் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் நோன்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் முந்தய வருடப்பாவங்களுக்கு அது பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம்
அரஃபா நோன்பு
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தய வருடம் மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா
அரஃபாவில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். - அபூஹூரைரா(ரலி) : அஹ்மத் இப்னுமாஜா
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு
நபி(ஸல்) அவர்கள் திங்கள் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி, இப்னுமாஜா
ஒவ்வொரு வியாழன் மற்றும்; திங்கட்;கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா
திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஆதற்கு நபி(ஸல்) அவர்கள் அன்றுதான் நான் பிறந்தேன்;. அன்று தான் என்மீது இறைச்செய்தியும் அருளப்பட்டது என்று விடையளித்தாத்கள். - அபுகதாதா அல் அன்சாரி(ரலி) : முஸ்லிம்
மாதம் மூன்று நோன்புகள்
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோற்றதாக அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுகதாதா(ரலி) : முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்
அபுதர் மாதம் மூன்று நோன்பு நோற்பதென்றால் 13, 14, 15 ஆகிய நாட்களில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூதர்(ரலி) : அஹ்மத், நஸயி, திர்மிதி.
உபரியா(நஃபிலா)ன நோன்பு
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து (உண்பதற்கு) ஏதாவது உள்ளதா என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம் அவர்கள் நான் நோன்பாளியாக உள்ளேன் என்று கூறினார்கள் பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது என்று நான் கூறினேன் அதைக்கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள் பின்னர் அதை உண்டார்கள். - ஆயிஷா(ரலி) : முஸ்லிம்
அதிக பட்ச(உபரியான) நோன்பு
மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக எனறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அப்போது எனக்கு இதை விட அதிக சக்தி இருக்கிறது என்று கூறினேன். முடிவில் நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக. அதுதான் நோன்புகளிலேயே சிறந்ததாகும் இது என் சகோதரர் தாவூத் நபி(அலை) அவர்களின் நோன்பாகும் என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) ,புகாரி, முஸ்லிம், அஹ்மத்.
வெள்ளிக்கிழமை(மட்டும்) நோன்பு நோற்கலாகாது
வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள் அல்லது அதை அடுத்து ஒரு நாள் சேர்த்தே தவிர வெள்ளிக்கிழமை நோன்பு நோற்கலாகாது. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபுஹூரைரா(ரலி) : திர்மிதி இப்னுமாஜா
வெள்ளிக்கிழமை நான் நோன்பு நோற்றிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன் நாளை நோன்பு நோற்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டார்கள் நான் இல்லை என்றேன். அப்படியானால் நோன்பை விட்டுவிடு என்று கூறினார்கள். - ஜூவைரியா(ரலி) : புகாரி
நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். - அபூஸயீத்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
தஷ்ரீகுடைய நாட்கள்; (துல்ஹஜ் பிறை 11, 12, 13)உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். - ஸஃது பின் அபீவக்காஸ்(ரலி) : அஹ்மத்.
நோன்பை முறிப்பவை மற்றும் அனுமதித்தவை
சுபுஹ் முதல் மஃரிப்வரை உண்ணாமல் இருப்பது பருகாமல் இருப்பது, இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது ஆகிய கட்டுப்பாடுதான் நோன்பு எனப்படுகிறது. நோன்பாளிகளுக்கு இம்மூன்றைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்று தடை இல்லை. இம்மூன்று காரியங்களில் எதைச் செய்தாலும் நோன்பு முறிந்து விடும்.
சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.
முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.
அனுமதிக்கப் பட்டவைகள்
மறதியாகச் செய்தல்
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹூரைரா(ரலி) : ஆபுதாவுத்
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பு வைத்துக் கொண்டே குளிக்கலாம்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ
உணவுகளை ருசி பார்ப்பது
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.
சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.
என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!
பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி
இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.
நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.
நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களிpல் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.
குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்;;;லை.
நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.
சாப்பிடுதல், குடித்தல், போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியோ) நோன்பு முறிந்துவிடும்.
முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய வற்றை (மருந்து, குளுக்கோஸ், போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடலுக்கு செலுத்தினால் நோன்பு முறிந்து விடும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்பட்டால் நோன்பு முறிந்து விடும்.
அனுமதிக்கப் பட்டவைகள்
மறதியாகச் செய்தல்
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாக சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும்! ஏனெனில், அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் அளித்துள்ளான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
மனைவியுடன் நோன்பாளி நெருக்கமாக இருப்பது
1.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது தம் மனைவியரை முத்தமிடுவார்கள். கட்டியணைப்பார்கள் அவர்கள் தம் உணர்வுகளை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக இருந்தார்கள்! - இப்னுமாஜா : ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ
2. நோன்பாளி (தம் மனைவியை) கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டார் அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர். - அபுஹூரைரா(ரலி) : ஆபுதாவுத்
குளிப்புக் கடமையான நிலையில் நோன்பு நோற்பது
ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹு நேரத்தை அடைவார்கள் (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள். - உம்மு ஸலாமா(ரலி) , ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நோன்பு வைத்துக் கொண்டே குளிக்கலாம்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார். - அஹ்மத், அபூதாவூத், நஸயீ
நோன்பு நோற்றவர் பல் துலக்குதல்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்லமுடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன். - ஆமிர் பின் ரபீஆ(ரலி) : அபூதாவூத், திர்மிதீ
உணவுகளை ருசி பார்ப்பது
உணவு சமைக்கும் போது போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா? என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம். இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது துணியைத் தண்ணீரில் நனைத்துத் தன் மீது போட்டுக் கொள்வார்கள்.
சமைக்கப்பட்ட உணவை ருசி பார்ப்பது தவறில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்கள்.
வாய் கொப்பளிப்பதும், உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் பஸரி (ரலி) கூறினார்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலை வாரிக் கொண்டு வெளியே வரட்டும் என்று இப்னு மஸ்வூத்(ரலி) கூறுகிறார்கள்.
என்னிடம் கல்லால் ஆன தண்ணீர்த் தொட்டி உள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு அதில் மூழ்கிக் குளிப்பேன் என்று அனஸ்(ரலி) கூறியுள்ளார்கள்!
பச்சையான குச்சியால் பல்துலக்குவது குற்றமில்லை என்று இப்னு சீரீன் கூறினார், அதற்கு ருசி இருக்கிறதே என்று ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், தண்ணீருக்கும் தான் ருசி உள்ளது ஏன் வாய் கொப்பளிக்கிறாய்? என்று திருப்பிக் கேட்டார்கள். - புகாரி
இந்த காரியங்கள் நோன்புக்கு எதிரானது என்ற கருத்து பிற்காலத்தில் உருவானது என்பதற்கு புகாரியில் இடம் பெற்ற இந்தச் செய்திகள் ஆதாரமாகவுள்ளன.
நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல்பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்ற வற்றிற்கு அனுமதியுள்ளது.
நோன்பு நாட்களின் பகல் பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களிpல் சுன்னதாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னதாகும்.
குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. சுப்ஹுதொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது.
கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதோ, பகல் மற்றும் மாலை பொழுதில் குளித்துக் கொள்வதோ தவறில்;;;லை.
நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாயப்;புக் கிடைக்கும் போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.
வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
நேரம் தெரியாது சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து ஃபஜ்ர் நேரம் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டுவிட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
காயங்கள் சிறு(கிளி) மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்தி கொள்ளவேண்டும்.
நோன்பிலிருந்து சலுகை மற்றும் தடுக்கப்பு
நிரந்தர சலுகை அளிக்கப்பட்டவர்கள்
தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்
பயணிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
தடுக்கப்பட்டவர்கள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
சலுகை பற்றிய விளக்கம்.
நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
தள்ளாத வயதினர் மற்றும் நோயாளிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
தற்காலிக சலுகை அளிக்கப்பட்டவர்கள்
பயணிகள்
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). (2:184)
ஹதீஸ்:
1. நான் பயணத்தில் நோன்பு நோற்கலாமா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஹம்ஸா பின் அம்ர்(ரலி) கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்! விரும்பினால் நோன்பை விட்டுவிடு என விடையளித்தார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. பயணத்தின் போதும் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உள்ளது. எனவே (நோன்பு நோற்பது) குற்றமாகுமா? என் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அது அல்லாஹ்வின் சலுகையாகும். யார் அச்சலுகையைப் பயண்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே, யார் நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் மீது குற்றமில்லை, என்றார்கள். - ஹம்ஸா பின் அம்ரு (ரலி) : முஸ்லிம்
3. நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியின் போது நோன்ப நோற்றவர்களாக போருக்கு ஆயத்தமானார்கள். கதீத் எனும் நீரோடையை அடைந்த போது நோன்பை விட்டு விட்டார்கள். பின்னர் அம்மாதம் (ரமலான்) முடியும் வரை நோன்பை விட்டு விட்டார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
கர்ப்பிணிகளும், பாலூட்டும் அன்னையரும்
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பிலிருந்து நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் அனஸ்பின் மலிக்(ரலி) : திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா
தடுக்கப்பட்டவர்கள்
மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்
1.நாங்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்டிருந்த நோன்பைக் களாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைச் களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா
2.ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்(பெண்ணுக்)குள்ள குறைபாடாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூ ஸயீத்(ரலி) : புகாரி
சலுகை பற்றிய விளக்கம்.
நோன்பு நோற்க சக்தி பெற்றவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வசனம் பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) கூறும் போது இது முழுமையாக மாற்றப்படவில்லை, நோன்பு நோற்கச் சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்கவேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடும் வசனம் பற்றி முதலில் நாம் அறிந்து கொண்டால்தான் முழு விளக்கம் பெறமுடியும்.
நோன்பு கடமையாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் ஒரு சலுகையுடன் தான் கடமையாக்கப் பட்டிருந்தது. நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் விரும்பினால் நோன்பு நோற்கலாம். விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என்பதுதான் அந்த சலுகை.
நல்ல திடகாத்திரமாக இருந்தவர்கள்கூட நோன்புக்கு பகரமாக ஏழைக்கு உணவளித்து வந்தனர். பின்னர், ''யார் ரமலானை அடைந்து விட்டாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்'' என்ற வசனம் அருளப்பட்டவுடன் இந்தச் சலுகை நீக்கப்பட்டுவிட்டது. சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு தான் நோற்க வேண்டும் என்ற சட்டம் இதன மூலம் நடைமுறைக்கு வந்தது.
இதைத்தான் இப்னு அப்பாஸ்(ரலி) குறிப்பிடுகிறார்கள். ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்ற சட்டம் சக்தியுள்ளவர்களைப் பொருத்தவரை மாற்றப்பட்டாலும் தள்ளாத வயதினரைப் பொருத்தவரை மாற்றப்படவில்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்!.
Wednesday, October 11, 2006
நோன்பின் ஒழுக்கங்கள்
ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.
கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது
1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி
ரமலான் இரவு வணக்கங்கள்
1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவாhகள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி
மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்
2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹூ(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.
3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹூ தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.
மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?
4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதிpல் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.
நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.
லைலத்துல் கத்ர்
இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)
லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.
8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி
இஃதிகாஃப்
...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா
ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்திpல் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி
(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிpய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்
பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்
முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
இஃதிகாஃபின் முடிவு
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.
(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை
அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷூஐப் (ரலி) : திர்மிதி
ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்
ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ
ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு
பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி
ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.
(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி
ஷவ்வால் (ஆறு)நோன்பு
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா
விடுபட்ட(களா)நோன்பு
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.
எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிiறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.
ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
ஸஹர் நேரத்தில் தாமதாமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டது என தெரிந்தும் விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.
நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும். அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாகத் தவிர்ந்து கொள்ளவேண்டும் பொய், புறம், கோள் சொல்லுதல். ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல் செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாய கடமையாகும்.
கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஓற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ள வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்பு (ஜகாத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தருமத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
மற்றவர்களுக்காக நோன்பு நோற்பது
1. நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
2. ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே என் தாய்மீது ஒரு மாத நோன்பு (கடமையாக) உள்ள நிலையில் மரணித்து விட்டார்.அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது என்று கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகாரி
ரமலான் இரவு வணக்கங்கள்
1. ரமலானில் நபி(ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன் அதற்கு அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை, நான்கு ரக அத்துகள் தொழுவாhகள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் நான்கு ரக அத்துகள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்க்க வேண்டாம் பின்னர் மூன்று ரக அத்துகள் தொழுவார்கள் என்று விடையளித்தார்கள். - அபூஸலமா(ரலி) : புகாரி, முஸ்லிம், திர்மிதி
மேற் கண்ட ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகையை நான்கு நான்காகத்தான் தொழ வேண்டும் என்றல்லவா விளங்க முடிகிறது. அப்படியானால் நாம் இரண்டிரண்டாக தொழுவது சரியா? சரிதான் அதற்கான ஆதாரம்
2. இஷாவை முடித்ததிலிருந்து சுப்ஹூ(ஃபஜ்ர்)வரை நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக அத்துகள் தொழுவார்கள் ஒவ்வொரு இரண்டு ரக அத்துகளுக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். - ஆயிஷா(ரலி) : இப்னு மாஜா.
3.நபி(ஸல்) அவர்கள் நள்ளிரவில் பள்ளிக்குச் சென்றுத் தொழுதார்கள் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப்;; பேசிக்கொண்டார்கள் (மறு நாள்) முதல் நாளை விட அதிகமான மக்கள் திரண்டு நபி(ஸல்) அவர்களின் பின்னால் நின்று தொழுதார்கள் விடிந்ததும் மக்கள் இதுபற்றிப் பேசிக் கொண்டார்கள் மூன்றாம் இரவில் பள்ளி வாசலுக்கு நிறைய பேர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார்கள் அவாகளைப் பின் பற்றி மக்களும் தொழுதனர். நான்காம் இரவு பள்ளிவாசல் கொள்ளாத அளவுக்கு மக்கள் திரண்டனர். ஆனால் நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகைக்குத்தான் பள்ளி வாசலுக்கு வந்தார்கள். சுப்ஹூ தொழுகையை முடித்ததும் மக்களை நோக்கி நான் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கூறுகிறேன் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமலில்லை எனினும் இது உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன் எனவேதான் நான் தொழுவிக்க வரவில்லை என்று கூறினார்கள். - ஆயிஷா(ரலி) - புகாரி.
மூன்று நபர்களுக்கு மேல் நாம் ஜமாத்தாக தொழலாமா? தொழலாம். ஆதாரம் என்ன?
4. ரமலானில் மக்கள் (தனித்தனி) குழக்களாகத் தொழுது வந்தனர் குர்ஆனில் சிறிதளவு மனனம் செய்திருந்த ஒருவரைப் பின்பற்றி ஐந்து நபர்கள் அல்லது ஏழு நபர்கள் அல்லது அதைவிடக் குறைந்த எண்ணிக்கையினர் அல்லது அதைவிட அதிக எண்ணிக்கையினர் தொழுது வந்தனர். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
5.நபி(ஸல்) அவர்கள் காலத்தில் (மக்கள்)சிறு சிறு ஜமாஅத்தாக தொழுது வந்தனர் இதனை நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்தார்கள். - ஆயிஷா(ரலி) : அஹ்மத்.
தராவீஹ் என்ற பெயரில் 20 ரக்அத்துகள் தொழும் வழக்கம் பரவலாகவுள்ளது. இதிpல் ஆச்சர்யமான விஷயம் என்ன வென்றால் திருகுர்ஆனிலோ, (பல்லாயிரக் கணக்கான ஹதீஸ்கள் இருந்தும்);, ஒரே ஒரு ஹதீஸிலோ, கூட தராவீஹ் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.
நபி(ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழுத தொழுகை தஹஜ்ஜத் இரவுத் தொழுகை என்றுதான் குறிப்பிடப்படுள்ளது.
லைலத்துல் கத்ர்
இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்;க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்கு தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும் (97:1-5)
லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் நீங்கள் தேடுங்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அவ்விருவருடனும் ஷைத்தான் இருந்தான். எனவே அதை நான் மறந்துவிட்டேன். எனவே அதைக் கடைசிப்பத்து நாட்களில் தேடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - அபூஸயீத்(ரலி) : முஸ்லிம், அஹமத்
அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன்சென்றப் பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ரில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள், அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள், அப்போது நபி(ஸல்) கூறினார்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவித்து கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப்பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஜந்து, இருபத்தி எழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - புகாரி
7. (ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தித் கொள்வார்கள்.இரவை (அல்லாஹ்வை வணங்கி) உயிர்ப்பிப்பார்கள். (இறைவனை வணங்குவதற்காகத்)தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்;. ஆயிஷா(ரலி)புகாரி.
8.அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூற வேண்டும் என்று கேட்டேன்? இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபுஅன்னீ. - ஆயிஷா(ரலி): திர்மிதி
இஃதிகாஃப்
...நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்; அந்த வரம்புகளை(த்தாண்ட) முற்படாதீர்கள்; இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (2:187)
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுப்ஹுதொழுது விட்டு தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்,நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா
ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை முன்பே நாம் அறிந்தோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாஃப் இருக்கத்துவங்குவார்கள் என்பது 21 ஆம் நாள் ஃபஜ்ராக இருக்க முடியாது அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப்போயிருக்கும். 20ம் நாள் பஜ்ரு தொழுதுவிட்டு இஃதிகாப் இருப்பார்கள் என்று விளங்குவதே சரியானது.
ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். - அபூஹுரைரா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமலான் மாதத்தின் கடைசிப்பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். - புகாரி
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள், மரணித்த வருடத்திpல் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.- அபூஹுரைரா(ரலி) : புகாரி
(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள், தன் குடும்பத்தையும் அமல்செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள், தன் மனைவிமார்களிடமிருந்து தூரமாகி விடுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்கும் போது மனிதனின் அவசியத்தேவை (மலஜலம் கழித்தல்)க்காகத் தவிர வீட்டிற்குச் செல்லமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது நான் வீட்டில் மாதவிடாயாக இருந்து கொண்டே அவர்களது தலையை வாரிவிடுவேன். அவர்கள் தமது தலையை(மட்டும்) வீட்டிற்குள் நீட்டுவார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இரவில் அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் நான் புறப்படுவதற்காக எழுந்தேன், என்னை வீட்டில் விடுவதற்காக அவர்களும் எழுந்தார்கள். - ஸபிpய்யா(ரலி) : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும், ஜனாஸாவில் பங்கெடுக்காமலிருப்பதும், மனைவியைத் தீண்டாலும் அணைக்காலிருப்பதும், அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் நபிவழியாகும். - ஆயிஷா(ரலி) : அபூதாவூத்
பெண்களும் இஃதிகாஃப் இருக்கலாம்
முஃமின்களின் தாயான ஒருவர் உதிரப் போக்கு உள்ள நிலையிலும் (மாதவிலக்கு அல்ல) இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி
இஃதிகாஃபின் முடிவு
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் ஃபித்ர்)பெருநாளன்று (காலை) உணவு உண்டு பெருநாள் தொழகை முடிக்காதவரை (இஃதிகாஃபை விட்டு) வெளியேற மாட்டார்கள். - புரைதா(ரலி) : திர்மிதி, ஹாகிம், அஹ்மத்.
(ஜகாத்துல் ஃபித்ர்)கட்டாயக் கடமை
அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள். சிறியோர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பொருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை, ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள். - இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜகாத்துல் ஃபிதர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். - அம்ர் பின் ஷூஐப் (ரலி) : திர்மிதி
ஜகாத்துல் ஃபித்ர் கொடுக்கவேண்டிய காலம்
நபித் தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதை(ஜகாத்துல் ஃபித்ரை)க் கொடுத்து வந்தனர். - இப்னு உமர்(ரலி) : புகாரி
நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பொருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஜகாதுல்ஃபித்ராhக அமையும், யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத்
ரமலான் இறுதியில் உங்கள் நோன்பு தர்மத்தை கொடுத்து விடுங்கள் எனக்கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : அபூதாவூத், நஸயீ
ஜகாத்துல் ஃபித்ரின் (பொருள்) அளவு
பேரித்தம் பழம் கோதுமை ஆகியவற்றிலிருந்து பெருநாள் தர்மம் ஒரு ஸாவு என்று நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். - இப்னு உமர்(ரலி) : பைஹகி, தாரகுத்னி
ஒரு ஸாவு என்பது இரு கைகள் நிறைய நான்கு முறை அள்ளினால் எவ்வளவு இருக்குமோ அந்த அளவாகும்.
(ஜகாத்துல் பித்ர்) கொடுக்க வேண்டிய பொருள்
நாங்கள் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் உணவுப்பொருட்களில் ஒரு ஸாவு ஃபித்ரா தர்மம் வழங்குவோம் அன்றைய தினங்களில் எங்களின் உணவாக கோதுமையும, உலர்ந்த திராட்சையும் இருந்தது. அபூஸயீத்(ரலி)புகாரி
ஷவ்வால் (ஆறு)நோன்பு
யார் ரமலான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோன்பு நோற்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். - அபு அய்யுப்அல் அன்சாரி (ரலி) : முஸ்லிம், அபுதாவுத், திர்மிதி, இப்னு மாஜா
விடுபட்ட(களா)நோன்பு
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் எற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பைக் களா செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகை களைக் களாச்செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்.
எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஃபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. - ஆயிஷா(ரலி) : புகாரி
நபி(ஸல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) அவர்கள் பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா கூறுகிறார்.
இறந்தவர்களுக்காக நோன்பு வைத்தல்
அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார் அவர்களுக்காக நான் அதை நிறைவேற்றலாமா? ஏன்று ஒருவர் கேட்டார். உனது தாய்க்கு (மற்ற)கடன்கள் இருந்தால் நிறைவேற்றத்தானே செய்வாய் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நிiறைவேற்றப்பட அதிகம் தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடனா(நோன்பா)கும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - இப்னு அப்பாஸ்(ரலி) : புகரி, முஸ்லிம்.
ஏவரேனும் தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொருப்பாளி (வாரிசுதாரர்) நோன்பு வைப்பார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - ஆயிஷா(ரலி) : புகாரி, முஸ்லிம்
நன்மைகளை பெற்றுத் தரத் கூடிய செயல்கள்
ரமளானில் செய்யப்படும் அமல்களுக்கான கூலிகள் அபரிதமாகக் கணக்கிடப்பட்டு அல்லாஹ்வால் கொடுக்கப்படுகின்றன : அத்தகைய நற்செயல்களாவன :
1. திருமறையை ஓதுதல் :
மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகஷpயமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
(35:29-30)
2.கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :
இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுவருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)
3. ஸலாத்துத் தராவீஹ் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)
ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும்அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. புகாரி, முஸ்லிம் மற்றும் பல)
ஆஸ்-ஐஸப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :
ஊபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத் தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினாhகள். (முவத்தா இமாம் மாலிக்).
ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடையஅந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகி விடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாகஇருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன்என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி(ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டாhகள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).
4. உம்ராச் செய்தல் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)
ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. ஆந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :
அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!
யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).
1. திருமறையை ஓதுதல் :
மகத்துவமிக்கவனான அல்லாஹ் கூறுகின்றான் :
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகஷpயமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
(35:29-30)
2.கியாம் என்றழைக்கக் கூடிய இரவுத் தொழுகை :
இது இன்று தராவீஹ் தொழுகை என்றழைக்கப்படுகின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எவனொருவன் ரமளான் மாதத்தின் இரவுத் தொழுகையைக் கடைபிடித்துத் தொழுவருகின்றானோ, அவன் தன்னுடைய வெகுமதியை எதிர்பார்க்கட்டும், அல்லாஹ் அவனது முந்தைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். (புகாரி, முஸ்லிம், மற்றும் பல.. ..)
3. ஸலாத்துத் தராவீஹ் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மக்களே உங்களுக்கிடையில் வாழ்த்துக்களை (ஸலாத்தை)ப் பரிமாறிக் கொள்ளுங்கள், உணவுகளை அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள், உங்களுக்கிடையே சொந்தங்கள் நட்புகளை இறுக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள், மக்கள் தூங்குகின்ற இரவு நேரங்களில் நீங்கள் எழுந்திருந்து தொழுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால்) பாதுகாப்பாகச் சொர்க்கத்தில் நீங்கள் நுழைந்து விடலாம். (அத்திர்மிதி)
ஸலாத்துத் தராவீஹ் என்ற தொழுகையானது, ரமளான் நாட்களில் இஷாத் தொழுகைக்குப் பின்பு தொழப்படுகின்றது. இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது என்பது மிகச் சிறந்ததொரு செயலாகும். ஓருவேளை அருகில் பள்ளிவாசல் எதுமில்லை என்றால், அதனைத் தனித்துச் தொழுதும் கொள்ளலாம். இது 8 ரக்அத்துக்களைக் கொண்டதாகவும் (4 தடவையாக, ஒவ்வொரு தடவைக்கும் 2 ரக்அத் என்ற அடிப்டையில் தொழ வேண்டும்.), அதனை அடுத்து 3 ரக்அத் கொண்ட வித்ருத் தொழுகையைத் தொழ வேண்டும்.
இரவுத்தொழுகையின் பொழுது வழக்கமாக ரசூல் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைத் தொழுது வந்தார்கள் என்பதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்:
முஹம்மது (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்திலும்அது அல்லாத மாதங்களிலும், 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுததில்லை. புகாரி, முஸ்லிம் மற்றும் பல)
ஆஸ்-ஐஸப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் கூறுகின்றார்கள் :
ஊபை பின் கஃப் அவர்களையும், தமீம் அத் தாரி (ரலி) அவர்களையும் முன்னின்று தராவீஹ் தொழுகையை நடத்துமாறு உமர் (ரலி) அவர்கள் கூறினாhகள். (முவத்தா இமாம் மாலிக்).
ஷேய்க் நஸீரத்தீன் அல்-பானி (ரஹ்) இந்த மேலே உள்ள ஹதீஸ் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறியதாவது: முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு நாளின் இரவில் 11 ரக்அத்துக்களுக்கு மேலாக இரவுத் தொழுகையைத் தொழுகாதிருந்திருக்கும் பொழுது, அந்தப் 11 ரக்அத்துக்களை விடத் தொழ நினைப்பது அனுமதியளிக்கப்பட்டதல்ல. இவ்வாறு அதற்கு அதிகமாகத் தொழ நினைப்பது முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளையை மறுத்து, அவருடையஅந்தச் செயலில் குறைகாண்பதாக ஆகி விடக் கூடியதாக இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்று கூறியிருக்கும் பொழுது, எவ்வாறு பஜர் தொழுகையினுடைய சுன்னத்தான 2 ரக்அத்துக்களை அதைவிட அதிகமாகத் தொழ முயற்சி செய்ய மாட்டோமோ அதைப் போலவே, இந்தத் தராவீஹ் தொழுகையிலும் 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழ முயற்சி செய்தல் கூடாது. இவ்வாறு அல்லாமல், 11 ரக்அத்துக்களுக்கு மேலாக நாம்தொழுதோமென்றால் இஸ்லாத்தில் ஒரு புதிய நூதனத்தைக் (பித்அத்தைக்) கடைபிடித்தவர்களாவோம், அவ்வாறு 11 ரக்அத்துக்களுக்கு மேலாகத் தொழுது வருபவர்கள் சட்டம் தெரியாதவர்களாகஇருப்பின், அவர்களை அழைத்து சட்டத்தைக் கூறுங்கள், அல்லது அவர்களது மன இச்சையைப் பின்பற்றாதிருங்கள். இந்தத் தொழுகையை கூட்டுத் தொழுகையாகத் தொழுவது, ஜமாத்துடன் பர்ளுத் தொழுகையை நிறைவேற்றியதற்கு ஒப்பாகும். இந்த இரவு தராவீஹ் தொழுகையை ஆரம்பித்து வைத்து, அதை மூன்று நாட்கள் தொடர்ந்து ஜமாத்தாக முஹம்மது (ஸல்) அவர்கள் தொழுது வந்தார்கள். மேலும், இந்தத் தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்தும் தொழாமல் இடையிலேயே விட்டு விட்டதன் காரணமென்னவெனில், இது என்னுடைய சமுதாயத்தினர் மீது பர்ளான தொழுகையைப் போல கடமையாகி விடுமோ எனப் பயந்தே தான் அதைக் கைவிட்டேன்என முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பின்பு வந்த உமர் (ரலி) அவர்கள் இந்த தராவீஹ் தொழுகையை கூட்டுத் தொழுகையாக நடத்தும்படி உபை பின் கஃப் (ரலி) அவர்களையும், தமீம் அத்தாரி(ரலி) அவர்களையும் ஏவினார்கள். மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில் 11 ரக்அத்துத் தொழுகையாகவே தொழும்படி அவர்கள் கட்டளையிட்டாhகள் என்பது குறிப்பிடத்தக்கது. (நஸீரத்தீன் அல்பானி, ஸலாத்துத் தராவீஹ் பக்.25).
4. உம்ராச் செய்தல் :
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வது, ஹஜ்ஜுச் செய்ததன் கூலிக்குச் சமமானது. (முஸ்லிம்)
ரமளான் மாதத்தில் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன மற்றும் நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. மேலும், இந்த மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையாக உள்ள நாட்களில் லைலத்துல் கத்ர் என்ற இரவு ஒன்று வருகின்றது, அ (ந்த இரவான)தில் செய்கின்ற அமல்கள், தொழுகைகள், ஆயிரம் மாதங்கள் அமல்கள் செய்த நன்மையைப் பெற்றுத்தரக் கூடியதாக இருக்கின்றது. ஆந்த இரவில் யாரொருவர் இறைவனுடைய நற்கூலியை எதிர்பார்த்து இறைவனை வணங்குகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த இரவு ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் வருகின்றது, அப்பொழுது கீழ்க்கண்ட துஅவை அதிகமதிகம் ஓதிக் கொள்வது சிறப்பானது :
அல்லாஹும்ம இன்னக்க அஃபுஉன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ!
யா அல்லாஹ் நீ மன்னிப்பவனாக இருக்கின்றாய்! மன்னிப்பை விரும்பக் கூடியவனாக இருக்கின்றாய்! எனவே, என்னை மன்னித்தருள்வாயாக! (திர்மிதி மற்றும் இப்னு மாஜா).
Sunday, September 03, 2006
நோன்பில் தடை செய்யப்பட்டவைகள்
• நோன்புப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது,
• ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது
• ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது.
• 'யவ்முஷ் ஷக்' என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குறிய நாளில் நோன்பு நோற்பது.
• வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது.
• வாழ்க்கை முழுவதும் நோன்பு நோற்பது.
• ரமழான் பிறைக்கு முன்புள்ள இரண்டு அல்லது ஒரு நாள் நோன்பு நோற்பது.
• ஷஅபான் மாதத்தின் பிந்திய 15 நாள்களில் நோன்பு வைப்பது. (ஆனால் வழக்கமாக பிடிக்கும் நோன்பாக இருப்பின் குற்றமில்லை.)
• இஃப்தார் இன்றி (முதல் நோன்பு திறக்காமல்) இரண்டாவது நோன்பு நோற்பது.
• ஹஜ்ஜில் உள்ளவர் அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது கூடாது. ஆனால் குர்பானி கொடுக்க முடியாதவர் நோற்கலாம்.
• நோன்பில் வாய் கொப்பளிக்கும்போதும் மூக்கு சுத்தம் செய்யும்போதும் அதிகமாக செய்வது.
• கணவன் இருக்கும்போது அவன் அனுமதியின்றி மனைவி நஃபில் நோன்பு வைப்பது.
• ஸஹர் நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்பது.
• நோன்பாளி மனைவியிடம் இச்சையான வார்த்தைகளைப் பேசுவது.
• நோன்பாளி பிறரிடம் சண்டை, சச்சரவு செய்வது.
• நோன்பு வைத்துக்கொண்டு பொய் பேசுவது.
• போர்க் காலத்தில் நோன்பு நோற்பது.
ஹஜ் மற்றும் குர்பானி சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• ஹஜ் கடமையான பின்பு தக்க காரணமின்றி பிற்படுத்துவது.
• ஹஜ்ஜில் இச்சையான வார்த்தைகள், தீய வார்த்தைகள் பேசுவது, தர்க்கம் செய்வது.
• இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப் பாகை, சுர்வால் (கால்சட்டை) இதுபோன்ற தைக்கப்பட்ட ஆடைகள் அணிவது.
• இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை மற்றும் கையுறை அணிவது.
• இஹ்ராம் அணிந்தவர் புனித மக்கா நகரத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவது, ஒடிப்பது, பிடுங்குவது.
• ஹரம் ஷரீஃபில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது, அங்கு வேட்டையாடுவது, அங்குள்ள வேட்டை பிராணிகளை விரட்டுவது.
• ஹரமில் கீழே கிடக்கும் பொருள்களை அறிவிப்புச் செய்து ஒப்படைப்பவரைத் தவிர மற்றவர் எடுப்பது.
• இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தவரை கஃபனிடும்போது அவருக்கு நறுமணம் பூசுவது, அவர் தலையை மறைப்பது.
• ஹஜ் செய்த பின்பு விடைபெறும் தவாஃப் (தவாஃபுல் விதா) செய்யாமல் திரும்புவது. (ஆனால், மாதவிடாய், பிரசவ காலம் உள்ள பெண்களுக்கு அனுமதி உண்டு).
• பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பு குர்பானியை அறுப்பது.
• குறையுள்ள பிராணியை குர்பானி கொடுப்பது.
• குர்பானி பிராணியின் இறைச்சி அல்லது அதன் உறுப்பில் ஏதாவதொன்றை, உரித்து சுத்தம் செய்து தருபவருக்கு கூலியாக கொடுப்பது.
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை பிறந்தபின் முடிவெட்டுவது, நகம் வெட்டுவது. (குர்பானி கொடுத்தபின் இவைகளை செய்து கொள்ளலாம்).
• ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நோன்பு நோற்பது
• ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்துள்ள மூன்று நாள்களில் நோன்பு நோற்பது.
• 'யவ்முஷ் ஷக்' என்ற ஷவ்வாலின் 29 பிறையை அடுத்து உள்ள சந்தேகத்திற்குறிய நாளில் நோன்பு நோற்பது.
• வெள்ளிக்கிழமை மட்டும் அல்லது சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது.
• வாழ்க்கை முழுவதும் நோன்பு நோற்பது.
• ரமழான் பிறைக்கு முன்புள்ள இரண்டு அல்லது ஒரு நாள் நோன்பு நோற்பது.
• ஷஅபான் மாதத்தின் பிந்திய 15 நாள்களில் நோன்பு வைப்பது. (ஆனால் வழக்கமாக பிடிக்கும் நோன்பாக இருப்பின் குற்றமில்லை.)
• இஃப்தார் இன்றி (முதல் நோன்பு திறக்காமல்) இரண்டாவது நோன்பு நோற்பது.
• ஹஜ்ஜில் உள்ளவர் அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது கூடாது. ஆனால் குர்பானி கொடுக்க முடியாதவர் நோற்கலாம்.
• நோன்பில் வாய் கொப்பளிக்கும்போதும் மூக்கு சுத்தம் செய்யும்போதும் அதிகமாக செய்வது.
• கணவன் இருக்கும்போது அவன் அனுமதியின்றி மனைவி நஃபில் நோன்பு வைப்பது.
• ஸஹர் நேரத்தில் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்பது.
• நோன்பாளி மனைவியிடம் இச்சையான வார்த்தைகளைப் பேசுவது.
• நோன்பாளி பிறரிடம் சண்டை, சச்சரவு செய்வது.
• நோன்பு வைத்துக்கொண்டு பொய் பேசுவது.
• போர்க் காலத்தில் நோன்பு நோற்பது.
ஹஜ் மற்றும் குர்பானி சம்பந்தமாக தடை செய்யப்பட்டவைகள்
• ஹஜ் கடமையான பின்பு தக்க காரணமின்றி பிற்படுத்துவது.
• ஹஜ்ஜில் இச்சையான வார்த்தைகள், தீய வார்த்தைகள் பேசுவது, தர்க்கம் செய்வது.
• இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப் பாகை, சுர்வால் (கால்சட்டை) இதுபோன்ற தைக்கப்பட்ட ஆடைகள் அணிவது.
• இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரை மற்றும் கையுறை அணிவது.
• இஹ்ராம் அணிந்தவர் புனித மக்கா நகரத்திலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டுவது, ஒடிப்பது, பிடுங்குவது.
• ஹரம் ஷரீஃபில் ஆயுதங்கள் எடுத்துச் செல்வது, அங்கு வேட்டையாடுவது, அங்குள்ள வேட்டை பிராணிகளை விரட்டுவது.
• ஹரமில் கீழே கிடக்கும் பொருள்களை அறிவிப்புச் செய்து ஒப்படைப்பவரைத் தவிர மற்றவர் எடுப்பது.
• இஹ்ராம் அணிந்த நிலையில் மரணித்தவரை கஃபனிடும்போது அவருக்கு நறுமணம் பூசுவது, அவர் தலையை மறைப்பது.
• ஹஜ் செய்த பின்பு விடைபெறும் தவாஃப் (தவாஃபுல் விதா) செய்யாமல் திரும்புவது. (ஆனால், மாதவிடாய், பிரசவ காலம் உள்ள பெண்களுக்கு அனுமதி உண்டு).
• பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பு குர்பானியை அறுப்பது.
• குறையுள்ள பிராணியை குர்பானி கொடுப்பது.
• குர்பானி பிராணியின் இறைச்சி அல்லது அதன் உறுப்பில் ஏதாவதொன்றை, உரித்து சுத்தம் செய்து தருபவருக்கு கூலியாக கொடுப்பது.
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை பிறந்தபின் முடிவெட்டுவது, நகம் வெட்டுவது. (குர்பானி கொடுத்தபின் இவைகளை செய்து கொள்ளலாம்).
தொழுகையில் தடை செய்யப்பட்டவைகள்
• சூரியன் உதிக்கும் நேரத்திலோ அல்லது மறையும் நேரத்திலோ அல்லது நடு உச்சி நேரத்திலோ (நஃபில்) தொழுவது.
• ¨(சுபு{ஹ) தொழுகைக்குப் பின் சூரியன் பூரண உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.
• வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அதை ஆக்குவது.
• ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடைவெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)
• ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான தொழுகையில் ஈடுபடுவது.
• தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல்களை செய்வது.
• ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.
• தொழுகையில் முகத்தைத் திரும்பி பார்ப்பது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.
• ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)
• உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுவது.
• சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.
• அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளிலும் தொழுவது.
• காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.
• நரி அங்குமிங்கும் பார்ப்பது போன்று தொழுகையில் பார்ப்பது.
• மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுவது.
• முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாயைப் போன்று உட்காருவது.
• ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வது.
• தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் சுஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரு முறை அனுமதி உண்டு.)
• துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.
• அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.
• தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங்களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)
• மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)
• தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.
• வரிசையில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்வது.
• தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.
• சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.
• தொழும்போது காற்றுபிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல் வெறும் சந்தேகத்தில் தொழுகையை விட்டு வெளியேறுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது, விளையாடுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது இரு கால்களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களை துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.
• இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.
• தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழ வைப்பது.
• தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.
• தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.
• தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (எனவே தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
• இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)
• மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவைகளை இஷா தொழுத பின் பேசுவது, அவைகளில் ஈடுபடுவது.
• வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக முந்துவது.
மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது அவர்களுக்கு இமாமத் செய்ய முந்துவது.
• ¨(சுபு{ஹ) தொழுகைக்குப் பின் சூரியன் பூரண உதயமாகும் வரையிலும் அஸர் தொழுகைக்குப் பின் அது மறையும் வரையிலும் (நஃபில்) தொழுவது. (ஆனால் பள்ளியின் காணிக்கைத் தொழுகை போன்ற காரணங்களுடன் நிறைவேற்றப்படும் தொழுகைகளைத் தொழலாம்.
• வீடுகளில் நஃபில் தொழுகைகளை தொழாமல் அடக்கஸ்தலங்களைப் போன்று அதை ஆக்குவது.
• ஃபர்ளு தொழுகையை தொழுத பின்பு இடைவெளி இல்லாமல் நஃபிலான தொழுகையை சேர்த்துத் தொழுவது. (ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு சிறிது நேரம் திக்ரு செய்வது அல்லது துஆ செய்வது அல்லது இடம் மாறி தொழுதுகொள்ள வேண்டும்.)
• ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பித்தபின் அதனுடைய சுன்னத்தான தொழுகையைத் தவிர மற்ற நஃபிலான தொழுகையில் ஈடுபடுவது.
• தொழுகையில் இமாமுக்கு முந்தி செயல்களை செய்வது.
• ஜமாஅத் தொழுகையில் வரிசையை விட்டு தனியாக நின்று தொழுவது.
• தொழுகையில் முகத்தைத் திரும்பி பார்ப்பது அல்லது வானத்தின் பக்கம் உயர்த்திப் பார்ப்பது.
• ருகூஃ, சுஜுதுகளில் குர்ஆன் ஓதுவது. (சுஜுதுகளில் குர்ஆனில் உள்ள துஆ உடைய ஆயத்துகளை துஆவிற்காக ஓதலாம்.)
• உணவு தயாராகி, மனம் உணவில் நாட்டம் கொண்ட பின்பு தொழுவது.
• சிறுநீரையோ, மலத்தையோ, காற்றையோ அடக்கிக் கொண்டு தொழுவது.
• அடக்கஸ்தலங்களிலும், குளியல் அறைகளிலும் தொழுவது.
• காக்கை கொத்துவது போன்று அவசர அவசரமாகத் தொழுவது.
• நரி அங்குமிங்கும் பார்ப்பது போன்று தொழுகையில் பார்ப்பது.
• மிருகங்கள் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்காருவது போன்று தொழுவது.
• முன்னங்கால்களை தரையில் ஊன்றிக் கொண்டு நாயைப் போன்று உட்காருவது.
• ஒட்டகங்களைப் போன்று தனக்கென்று பள்ளியில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வது.
• தொழுகையில் பூமியை துடைப்பது. (தேவை ஏற்பட்டால் சுஜுதுடைய இடத்தில் கல் போன்றதை அகற்ற ஒரு முறை அனுமதி உண்டு.)
• துணி போன்றவற்றால் வாயை மறைப்பது.
• அருகில் தொழுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொழுகையில் சப்தமிட்டு ஓதுவது.
• தூக்கம் மிகைக்கும் போது இரவு வணக்கங்களைத் தொடர்வது. (தூக்கம் மிகைத்தால் சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுத்த பின்புதான் வணக்கத்தில் ஈடுபட வேண்டும்.)
• மார்க்கத்தில் குறிப்பிட்ட இரவுகளைத் தவிர ஏனைய இரவுகளில் முழு இரவு விழித்திருந்து வணங்குவது. (குறிப்பாக, தொடர்ந்து இவ்வாறு செய்வது அறவே கூடாது.)
• தொழுகையில் கொட்டாவி விடுவது, ஊதுவது.
• வரிசையில் அமர்ந்திருக்கும் மக்களின் பிடரிகளை தாண்டிச் செல்வது.
• தொழுகையில் ஆடையை இறுக்கிக் கொண்டு தொழுவது.
• சரியாக தொழுத தொழுகையை திரும்ப மீண்டும் தொழுவது.
• தொழும்போது காற்றுபிரிந்துவிட்டது என்று உறுதியில்லாமல் வெறும் சந்தேகத்தில் தொழுகையை விட்டு வெளியேறுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது பேசுவது, விளையாடுவது.
• ஜுமுஆ குத்பாவின்போது இரு கால்களையும் உயர்த்தி, தொடையை வயிற்றுடன் சேர்த்து கால்களை துணியைக் கொண்டோ, கையைக் கொண்டோ கட்டி உட்காரும்போது தூக்கம் வந்துவிடும் அல்லது அவ்ரத் (மறைக்க வேண்டிய பகுதி) வெளிப்பட்டு விடும் அல்லது காற்று வெளியேறிவிடும் என்று இருப்பின் அப்படி உட்காருவது.
• இகாமத் சொல்லப்பட்டபின் ஜமாஅத் தொழுகையில் சேராமல் வேறு தொழுகையில் ஈடுபடுவது.
• தேவையில்லாமல் இமாம் உயர்ந்த இடத்தில் நின்று தொழ வைப்பது.
• தொழுபவருக்கு முன் குறுக்கே செல்வது.
• தொழுபவர் தனக்குமுன் வைக்கப்பட்ட சுத்ராவிற்கு (தடுப்புக்கு) இடையில் யாரும் செல்லும்போது அவரை தடுக்காமல் விடுவது.
• தொழுபவர் தனது காலணியை வலப்பக்கம் வைப்பது அதுபோன்று இடப் பக்கம் யாரும் தொழுவார்கள் என்று இருப்பின் இடப்பக்கம் வைப்பது. (எனவே தனது இரு கால்களுக்கிடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.)
• இஷா தொழுகைக்கு முன் தூங்குவது. (அதாவது மஃரிப் தொழுதபின் தூங்கினால் இஷாவின் நேரம் முடியும் வரை தூக்கத்திலேயே இருந்துவிடுவோம் என்று அஞ்சினால் இஷா தொழுகாமல் தூங்கக் கூடாது.)
• மார்க்க விஷயங்களை அல்லது தவிர்க்க முடியாத முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றவைகளை இஷா தொழுத பின் பேசுவது, அவைகளில் ஈடுபடுவது.
• வீட்டில் உள்ளவர்கள் தன்னை முற்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு இமாமத் செய்ய தானாக முந்துவது.
மார்க்க காரணத்தை முன்னிட்டு மக்கள் தன்னை வெறுக்கும்போது அவர்களுக்கு இமாமத் செய்ய முந்துவது.
Tuesday, August 08, 2006
கொள்கை சம்பந்தமாக தடுக்கப்பட்டவைகள்
• அல்லாஹ்விற்கு இணைவைப்பதின் அனைத்து வகைகளும்.
• குறி பார்ப்பவன், ஜோஸியம் பார்ப்பவன், காணாமல் போனதை கண்டுபிடிப்பேன் என்று சொல்பவன் ஆகியோரிடம் செல்வது அல்லது அவர்கள் சொல்வதை உண்மையென்று நம்புவது.
• அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்காக அறுப்பது. (அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுத்தாலும் சரியே!)
• அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஆதாரமின்றி பேசுவது.
• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளை சட்டமாக எடுத்துக் கொள்வது.
• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைப்பது.
• தாயத்துகள் அணிந்து கொள்வது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது.
• சூனியத்தின் அனைத்து வகைகளும்.
• நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது.
• அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி சிந்திப்பது. (அவனுடைய படைப்புகளைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும்.)
• அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிப்பது.
• இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்று பவரை நரகவாசி என்று கூறுவது.
• மார்க்க ஆதாரமில்லாமல் ஒருவரை காஃபிரென்று கூறுவது.
• உலக காரியங்களில் ஒன்றை பிறரிடத்தில் கேட்கும்போது அல்லாஹ்வின் திருமுகத்திற்காக கொடுங்கள் என்று கேட்பது.
• அல்லாஹ்வுக்காக கொடுங்கள் என்று கேட்பவருக்கு கொடுக்காமலிருப்பது. (ஆனால் அவர் கேட்கும் விஷயம் பாவமான காரியமாக இருக்கக் கூடாது.)
• காலத்தை ஏசுவது.
• சகுனம் பார்ப்பது.
• இணை வைப்பவர்கள், காஃபிர்களுடன் சேர்ந்து தங்குவது.
• அல்லாஹ்வுடைய விரோதிகளாகிய யூதர்கள், கிருஸ்தவர்கள், இணை வைப்பவர்கள், காஃபிர்கள் ஆகியவர்களுடன் உளப்பூர்வமான நட்புக் கொள்வது.
• அமல்களை வீணாக்குவது. உதாரணமாக பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவோ ஒரு அமலை செய்வது அல்லது தனது அமல்களை சொல்லிக் காட்டுவது.
• கஅபத்துல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகிய மூன்று இடங்களைத் தவிர மற்ற இடங்களை புனிதமாகக் கருதி அவைகளை தரிசிக்கச் செல்வது.
• அடக்கஸ்தலங்களிலோ அல்லது அவற்றை சுற்றியோ கட்டிடம் அமைப்பது.
• அடக்கஸ்தலங்கள் இருக்குமிடத்தில் விளக்கெரிப்பது.
• நபித்தோழர்களை ஏசுவது, அவர்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் ஆராய்வது.
• தக்தீர் எனும் விதியைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது.
• மார்க்கக் கல்வி ஞானமின்றி திருக் குர்ஆன் கருத்துக்களில் தர்க்கம், விவாதம் செய்வது.
• திருக்குர்ஆன் விஷயத்தில் சர்ச்சை செய்பவர்களுடனோ அல்லது அதை பரிகாசம் செய்பவர்களுடனோ அமர்வது.
• தக்தீர் எனும் விதியை மறுப்பவர்கள், இன்னும் இதுபோன்று கொள்கை ரீதியான பித்அத்கள் (அனாச்சாரங்கள்) செய்பவர்களை நோய் விசாரிக்கச் செல்வது அல்லது அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்வது அல்லது அவர்களுக்காகக் கவலைப்படுவது.
• காஃபிர்களோ அல்லது பித்அத்தை சார்ந்தவர்களோ எழுதிய மதரீதியான புத்தகங்களைப் படிப்பது.
• காஃபிர்கள் வணங்கும் பொய்யான கடவுள்களை திட்டுவது. (அதாவது, அதனால் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள் என்று இருந்தால்.)
• அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை, வசனங்களை பரிகாசம் செய்வது.
• அல்லாஹ் தடுத்தவைகளை ஆகுமாக்கிக் கொள்வது அல்லது அனுமதித்தவைகளைத் தடை செய்து கொள்வது.
• அல்லாஹ்வை தவிர பிறருக்கு சுஜூது செய்வது அல்லது குனிவது.
• நிஃபாக் எனும் நயவஞ்சகத்தன்மை உள்ளவர்களுடனும், பெரும் பாவங்களை வெளிப்படையாக செய்பவர்களுடன் கூடி உட்கார்ந்து பேசி மகிழ்வது.
• மார்க்கத்தில் பிரிவினை உண்டு பண்ணுவது, சத்தியத்தில் உள்ள ஜமாஅத்தை விட்டுப் பிரிவது.
• யூதர்கள், கிருஸ்தவர்கள், முஷ்ரிக்குகள், மஜூஸிகள் (நெருப்பை வணங்குபவர்கள்,) காஃபிர்கள் ஆகியோர்களின் மதத் சடங்குகள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது.
• காஃபிர்களுக்கு நாம் முதலில் ஸலாம் சொல்வது.
• வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களின் நூல்களிலிருந்து சொல்லும் விஷயங்களை உண்மை அல்லது பொய் என்று சொல்வது. (ஆனால் அதற்கு உண்மை அல்லது பொய் என்பதற்கு நமது ஷரீயத்தில் ஆதாரம் இருந்தாலே தவிர).
• பிள்ளைகள், சிலைகள், பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வது.
• அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்று சொல்வது.
• அல்லாஹ்வைத் தவிர மற்றவரை இறைவன், கடவுள், ஆண்டவர் என்று சொல்வது.
• நேரம் சரியில்லை என்று சொல்வது.
உன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்! நீ நரகவாதி! என ஒருவருக் கொருவர் சபித்துக் கொள்வது.
இப்படிப்பட்ட தீய செயல்களில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக...!!
• குறி பார்ப்பவன், ஜோஸியம் பார்ப்பவன், காணாமல் போனதை கண்டுபிடிப்பேன் என்று சொல்பவன் ஆகியோரிடம் செல்வது அல்லது அவர்கள் சொல்வதை உண்மையென்று நம்புவது.
• அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்காக அறுப்பது. (அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுத்தாலும் சரியே!)
• அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் ஆதாரமின்றி பேசுவது.
• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளை சட்டமாக எடுத்துக் கொள்வது.
• அல்லாஹ்வுடைய மார்க்கத்தைத் தவிர மற்ற வழிமுறைகளைக் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைப்பது.
• தாயத்துகள் அணிந்து கொள்வது, கண் திருஷ்டிகளை தடுக்க வேண்டுமென்பதற்காக கயிறுகள் அணிவது.
• சூனியத்தின் அனைத்து வகைகளும்.
• நட்சத்திரங்களையோ அல்லது மற்ற கோள்களையோ கொண்டு நன்மை அல்லது தீமை நடக்கும் என்று கூறுவது மற்றும் நம்புவது.
• அல்லாஹ்வுடைய (தாத்) உள்ளமையைப் பற்றி சிந்திப்பது. (அவனுடைய படைப்புகளைப் பற்றிதான் சிந்திக்க வேண்டும்.)
• அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளாமல் மரணிப்பது.
• இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்று பவரை நரகவாசி என்று கூறுவது.
• மார்க்க ஆதாரமில்லாமல் ஒருவரை காஃபிரென்று கூறுவது.
• உலக காரியங்களில் ஒன்றை பிறரிடத்தில் கேட்கும்போது அல்லாஹ்வின் திருமுகத்திற்காக கொடுங்கள் என்று கேட்பது.
• அல்லாஹ்வுக்காக கொடுங்கள் என்று கேட்பவருக்கு கொடுக்காமலிருப்பது. (ஆனால் அவர் கேட்கும் விஷயம் பாவமான காரியமாக இருக்கக் கூடாது.)
• காலத்தை ஏசுவது.
• சகுனம் பார்ப்பது.
• இணை வைப்பவர்கள், காஃபிர்களுடன் சேர்ந்து தங்குவது.
• அல்லாஹ்வுடைய விரோதிகளாகிய யூதர்கள், கிருஸ்தவர்கள், இணை வைப்பவர்கள், காஃபிர்கள் ஆகியவர்களுடன் உளப்பூர்வமான நட்புக் கொள்வது.
• அமல்களை வீணாக்குவது. உதாரணமாக பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காகவோ, பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவோ ஒரு அமலை செய்வது அல்லது தனது அமல்களை சொல்லிக் காட்டுவது.
• கஅபத்துல்லாஹ், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜித் அக்ஸா ஆகிய மூன்று இடங்களைத் தவிர மற்ற இடங்களை புனிதமாகக் கருதி அவைகளை தரிசிக்கச் செல்வது.
• அடக்கஸ்தலங்களிலோ அல்லது அவற்றை சுற்றியோ கட்டிடம் அமைப்பது.
• அடக்கஸ்தலங்கள் இருக்குமிடத்தில் விளக்கெரிப்பது.
• நபித்தோழர்களை ஏசுவது, அவர்களுக்கு மத்தியில் நடந்த பிரச்சனைகளைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் ஆராய்வது.
• தக்தீர் எனும் விதியைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது.
• மார்க்கக் கல்வி ஞானமின்றி திருக் குர்ஆன் கருத்துக்களில் தர்க்கம், விவாதம் செய்வது.
• திருக்குர்ஆன் விஷயத்தில் சர்ச்சை செய்பவர்களுடனோ அல்லது அதை பரிகாசம் செய்பவர்களுடனோ அமர்வது.
• தக்தீர் எனும் விதியை மறுப்பவர்கள், இன்னும் இதுபோன்று கொள்கை ரீதியான பித்அத்கள் (அனாச்சாரங்கள்) செய்பவர்களை நோய் விசாரிக்கச் செல்வது அல்லது அவர்களது ஜனாஸாவில் கலந்து கொள்வது அல்லது அவர்களுக்காகக் கவலைப்படுவது.
• காஃபிர்களோ அல்லது பித்அத்தை சார்ந்தவர்களோ எழுதிய மதரீதியான புத்தகங்களைப் படிப்பது.
• காஃபிர்கள் வணங்கும் பொய்யான கடவுள்களை திட்டுவது. (அதாவது, அதனால் அவர்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள் என்று இருந்தால்.)
• அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை, வசனங்களை பரிகாசம் செய்வது.
• அல்லாஹ் தடுத்தவைகளை ஆகுமாக்கிக் கொள்வது அல்லது அனுமதித்தவைகளைத் தடை செய்து கொள்வது.
• அல்லாஹ்வை தவிர பிறருக்கு சுஜூது செய்வது அல்லது குனிவது.
• நிஃபாக் எனும் நயவஞ்சகத்தன்மை உள்ளவர்களுடனும், பெரும் பாவங்களை வெளிப்படையாக செய்பவர்களுடன் கூடி உட்கார்ந்து பேசி மகிழ்வது.
• மார்க்கத்தில் பிரிவினை உண்டு பண்ணுவது, சத்தியத்தில் உள்ள ஜமாஅத்தை விட்டுப் பிரிவது.
• யூதர்கள், கிருஸ்தவர்கள், முஷ்ரிக்குகள், மஜூஸிகள் (நெருப்பை வணங்குபவர்கள்,) காஃபிர்கள் ஆகியோர்களின் மதத் சடங்குகள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவது.
• காஃபிர்களுக்கு நாம் முதலில் ஸலாம் சொல்வது.
• வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களின் நூல்களிலிருந்து சொல்லும் விஷயங்களை உண்மை அல்லது பொய் என்று சொல்வது. (ஆனால் அதற்கு உண்மை அல்லது பொய் என்பதற்கு நமது ஷரீயத்தில் ஆதாரம் இருந்தாலே தவிர).
• பிள்ளைகள், சிலைகள், பெற்றோர்கள் மீது சத்தியம் செய்வது.
• அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் என்று சொல்வது.
• அல்லாஹ்வைத் தவிர மற்றவரை இறைவன், கடவுள், ஆண்டவர் என்று சொல்வது.
• நேரம் சரியில்லை என்று சொல்வது.
உன்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்! நீ நரகவாதி! என ஒருவருக் கொருவர் சபித்துக் கொள்வது.
இப்படிப்பட்ட தீய செயல்களில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக...!!
Wednesday, July 26, 2006
வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்
வுளு செய்வதின் ஒழுங்குகளும் சட்டங்களும்
வுளு ஒரு வணக்கம் அதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த
முறைப்பிரகாரம் செய்ய வேண்டும்.
யார் இவ்வாறு (நபியவர்கள் செய்தது போல்) வுளு செய்கின்றாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம்
வுளு செய்வதின் சிறப்புகள்
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரொடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரொடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு முஸ்லிமான அல்லது முஃமினான அடியான் வுளு செய்து தனது முகத்தை கழுவினால் அவர் கண்ணினால் செய்த எல்லா பாவங்களும் முகத்திலிருந்து வெளியாகும் முதல் தண்ணீரோடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தனது இரு கைகளையும் கழுவினால் இரு கைகளினால் செய்த பாவங்கள் கைகளிலிருந்து வெளியாகும் தண்ணீரொடு அல்லது கடைசி துளியோடு மன்னிக்கப்படும், தன்னுடைய இரு கால்களையும் கழுவினால் இரு கால்களினால் செய்த பாவங்கள் தண்ணீரொடு அல்லது கடைசித்துளியோடு மன்னிக்கப்பட்டு தூய்மையான மனிதராகி விடுகின்றார். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்- முஸ்லிம்
யார் நல்ல முறையில் வுளு செய்கின்றாரோ அவருடைய நகத்துக்குக்கீழால் இருந்து கூட அவருடைய உடம்பால் செய்த பாவங்கள் வெளியாகிவிடும் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்- முஸ்லிம்
வுளு செய்யும் முறை
1- நிய்யத்து வைப்பது. (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் வுளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
1- நிய்யத்து வைப்பது. (நிய்யத்து வைப்பதென்றால் மனதால் வுளு செய்வதாக நினைப்பது, வாயால் மொழிவதற்கு நிய்யத்து என்று சொல்லப் படமாட்டாது என்பதை கவனத்தில் வைக்கவும்)
அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதல்லாம் எண்ணங்களை வைத்துத்தான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
2-வுளு செய்யு முன் பிஸ்மி சொல்வது.
(வுளு செய்யும் போது ) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு வுளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-இப்னு மாஜா, திர்;மிதி, அபூ தாவூத்
(வுளு செய்யும் போது ) யார் பிஸ்மி சொல்லவில்லயோ அவருக்கு வுளு நிறைவேறாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-இப்னு மாஜா, திர்;மிதி, அபூ தாவூத்
3-மிஸ்வாக் செய்து கொள்வது.
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு வுளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு வுளுவின் போதும் மிஸ்வாக் செய்யும்படி நான் கட்டளையிட்டிருப்பேன் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத்,திர்மிதி,அபூதாவூத்
4-இரண்டு கைகளையும் மணிக்கட்டுவரை கழுவுவது.
உத்மான் (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் வுளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் வுளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
உத்மான் (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தனது இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவினார்கள்..... என் வுளுவைப்போலதான் நபி (ஸல்) அவர்கள் வுளு செய்ய நான் பார்த்தேன் எனவும் கூறினார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
5-வாய்க்கும், நாசிக்கும் தண்ணீர் செலுத்துவது.
நபி (ஸல்) அவர்களின் வுளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி)அவர்களிடத்தில கேட்கப்பட்டது, அப்போது வுளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (வுளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயையும் கொப்பழித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். ஆதாரம் :- புகாரி , முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களின் வுளுவைப்போல் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று அப்துல்லாஹ் இப்னு ஸைத் அல்அன்ஸாரி (ரலி)அவர்களிடத்தில கேட்கப்பட்டது, அப்போது வுளு செய்வதற்காக தண்ணீர் பாத்திரத்தை அழைத்து (வுளு செய்ய ஆரம்பித்தார்கள்) பின் ஒரு அள்ளு தண்ணீரால் வாயையும் கொப்பழித்து நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், இப்படி மூன்று முறைசெய்தார்கள். ஆதாரம் :- புகாரி , முஸ்லிம்
நீ வுளு செய்தால் வாயை கொப்பழித்துக் கொள் என்பதாக லகீத் இப்ன் ஸுப்ரா (ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-அபூ தாவூத் , பைஹகி
உங்களில் ஒருவர் வுளு செய்தால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி பின் சீறிக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
நோன்பு இல்லாத நேரத்தில் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதையும் வாய் கொப்பழிப்பதையும் அதிகப்படுத்தியே செய்ய வேண்டும்.
வலது கையினால் நாசிக்கு தண்ணீர் செலுத்தி இடது கையினால் சீறி விடுவதே நபி வழியாகும்.
அலி (ரலி) அவர்கள் வுளு செய்வதற்குரிய தண்ணீரை அழைத்து (வுளு செய்தார்கள்) பின்பு நாசிக்கு தண்ணீh செலுத்தி இடது கையினால் சீறி விட்டு இதுதான் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளு என்றார்கள். ஆதாரம் :-அஹ்மத், நஸாயி
அலி(ரலி) அவர்கள் வுளு செய்யும் போது நாங்கள் உட்கார்ந்து அதை பார்த்துக் கொண்டிருந்தோம், வலது கையினால் வாய்க்கும் நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள், பின்பு இடது கையினால் நாசியை சீறிவிட்டார்கள், இப்படி மூன்று முறை செய்தார்கள், யார் நபி (ஸல்) அவர்கள் செய்த வுளுவை பார்க்க விரும்புகின்றார்களோ அது இது போன்றுதான் என்று கூறியதாக அப்து கைர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம் :- தாரமி
6-முகத்தை கழுவுதல். (முகம் கழுவக்கூடிய அளவு, நீளத்தால் முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழிவரைக்கும், அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காதுவரைக்கும்)
விசுவாசங்கொண்டோரே!நீங்கள் தொழுகைக்காக தயாரானால் (அதற்கு முன்னதாக)உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள், (நீரைத் தொட்டு) உங்கள் தலைகளையும் தடவி (மஸ்ஹுசெய்து)க் கொள்ளுங்கள், கணுக்கால் வரையில் உங்கள் இரு பாதங்களையும் (கழுவிக் கொள்ளுங்கள்)
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் முகத்தை மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
7- தாடியை குடைந்து கழுவுவது.
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்)அவர்கள் வுளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். ஆதாரம் :- அபூதாவூத், ஹாகிம், பைஹகி
நபி (ஸல்) அவர்கள் தன் தாடியை குடைந்து கழுவுவார்கள் என்பதாக உத்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்.
நபி (ஸல்)அவர்கள் வுளு செய்தால் தண்ணீரில் ஒரு அள்ளை எடுத்து நாடிக்கு கீழாலே நுழைத்து தன் தாடியை குடைந்து கழுகுவார்கள், என் இறைவன் எனக்கு இப்படித்தான் ஏவினான் என்பதாகவும் கூறினார்கள். ஆதாரம் :- அபூதாவூத், ஹாகிம், பைஹகி
8- இரு கைகளையும் முழங்கை உட்பட கழுகுவது.
முகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
முகத்தை கழுகுவதற்கு சொன்ன குர்ஆனுடைய வசனமே இதற்கும் ஆதாரம்.
உத்மான்(ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் மூன்று முறை கழுவிவிட்டு இப்படித்தான் நபி(ஸல்) அவர்களின் வுளு இருந்ததாக கூறினார்கள், ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
9- விரல்களை குடைந்து கழுகுவது.
நீ வுளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா
நீ வுளு செய்தால் உன் இரு கால் கைகளின் விரல்களை குடைந்து கழுவிக்கொள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள். ஆதாரம் :-அஹ்மத், திர்மிதி,இப்னு மாஜா
நபி(ஸல்) அவர்கள் வுளு செய்தால் தன் இரு கால்களின் விரல்களை தன் (கையின்)சின்னி விரல்களைக் கொண்டு குடைந்து கழுகுவார்கள். ஆதாரம்:-திர்மிதி, இப்னு மாஜா, அபூதாவூத்
10-மூன்று தடவை உறுப்புக்களை கழுகுவது(தலையையும், காதையும் ஒரு தடவைதான் மஸ்ஹு செய்ய வேண்டும்)
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து வுளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லைகடந்து தவறிளைத்த அனியாயக்காறராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- அஹ்மத், முஸ்லிம்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து வுளுவைப்பற்றி கேட்டார் அதற்கு நபியவர்கள் மூன்று முறை (கழுவ வேன்டும்)என்றார்கள், அதை விட அதிகமாக யார் செய்கின்றாரோ அவர் எல்லைகடந்து தவறிளைத்த அனியாயக்காறராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் :- அஹ்மத், முஸ்லிம்
நபியவர்கள் ஒரு தடவை, இரண்டு தடவை கழுவியும் வுளு செய்திருக்கின்றார்கள், ஆனால் மூன்று தடவையே பெரும்பாலும் செய்திருக்கின்றார்கள்.
11- வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பது.
நீங்கள் ஆடை அணிந்தாலும், வுளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அஹ்மத், அபூதாவூத், திர்;மிதி
நீங்கள் ஆடை அணிந்தாலும், வுளு செய்தாலும் வலது புறத்திலிருந்தே ஆரம்பியுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அஹ்மத், அபூதாவூத், திர்;மிதி
12- வுளு செய்யும் உறுப்புக்களை தேய்த்துக் கழுவுவது.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து வுளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உறுப்புக்களை தேய்த்து வுளு செய்து விட்டு இப்படித்தான் தேய்த்து வுளு செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் :-அஹ்மத், இப்னு ஹிப்பான், அபூ தாவூது
13- தலையையும், காதையும் மஸ்ஹு செய்வது(தடவுவது)
தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல.
தலையை மஸ்ஹும் செய்யும் விஷயத்தில் பலர்கள் தவறிளைக்கின்றார்கள், அதாவது தலையின் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்துவிடுவது, இது நபி வழியல்ல, நபியவர்கள் அப்படி செய்யவும் இல்லை, சில தடவை நபியவர்கள் தலைப்பா அணிந்திருக்கும் போது முன்நெற்றி முடியில் மஸ்ஹு செய்துவிட்டு தலைப்பாவிலும் மஸ்ஹு செய்தார்கள், தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்வதற்கு இது ஆதாரமாக முடியாது, காரணம் நபியவர்கள் தலையில் தலைப்பா அணிந்திருந்த காரணத்தினால் தலையின் ஒரு பகுதியை மஸ்ஹு செய்து விட்டு பின்பு தலைப்பாவிற்கு மேலால் மஸ்ஹு செய்தார்கள், தலையில் தலைப்பா இல்லாமல் ஒரு பகுதியை மாத்திரம் மஸ்ஹு செய்வது நபிவழியல்ல.
ஆனால் தலைப்பா அணியாத சாதாரண நிலையில் நபி (ஸல்) அவர்கள் தலை முடி அனைத்தையும் மஸ்ஹு செய்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் இரு கையினாலும் தன் தலையை மஸ்ஹு செய்தார்கள், (அதாவது )தலையின் ஆரம்ப பகுதியிலிருந்து ஆரம்பித்து தன் பிடதி வரைக்கும் இரு கையையும் கொன்டு சென்று மீண்டும் ஆரம்பி;த்த இடத்துக்கே அவ்விரு கையையும் மீட்டினார்கள்.
ஆதாரம் :-புகாரி,முஸ்லிம்
14- இரண்டு காதுகளையும் மஸ்ஹு செய்வது, காதை மஸ்ஹு செய்வதும் ஒரு தடவைதான். (ஆழ்காட்டி விரலினால் காதின் உழ் பகுதியையும், பெருவிரலினால் வெளிப்பகுதியையும் தடவுவது)
நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தன் தலையையும், இரு காதின் உள் பகுதியையும், வெளிப்பகுதியையும் மஸ்ஹு செய்தார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில் :- தலையையும், இரு காதையும் ஒரு தடவை மஸ்ஹு செய்தார்கள். ஆதாரம் :-அபூதாவூத்
15- இரண்டு கால்களையும் விரல் நுணியிலிருந்து கரண்டிக்கால் வரை கழுவுவது.
வுளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்.
வுளுவின் ஆயத்தே இதற்கும் ஆதாரம்.
கால்களை கழுவும் போது கரண்டிக்காலை தேய்த்துக்கொள்ள வேண்டும், அதே போன்று கால் விரல்களையும் கை விரல்களால் குடைந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரயாணத்திலே நபி (ஸல்) அவர்கள் எங்களை பிந்தி விட்டடார்கள், நாங்கள் அஸர் தொழுகையை பிற்ப்படுத்திய நிலையில் எங்களை நபியவர்கள் வந்தடைந்தார்கள், (பின்பு தொழுகைக்காக) நாங்கள் வுளு செய்து எங்களின் கால்களை தண்ணீரால் தடவினோம், அப்போது கணுக்கால்களுக்கு நரக வேதனைதான் என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபியவர்கள் கூறினார்கள். ஆதாரம் :புகாரி , முஸ்லிம்
16- வுளு செய்யும் உறுப்புக்களை இடை நிறுத்தாமல் தொடர்ச்சியாக கழுகுவது.
17- வுளு செய்யப்படும் உறுப்புக்களை மேலே கூறப்பட்ட முறைப்படியாக (ஒன்றன் பின் ஒன்றாக) செய்வது.
18- முகம், கை, கால்களை கழுவும் போது அவசியமாக கழுவ வேண்டிய பகுதியை விட அதிகமாக்கி கழுகுவது சிறந்தது.
வுளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள்.
வுளு செய்ததின் காரணமாக என் உம்மத்தினர் நாளை மறுமையில் முகம்,கால் வெண்மை உள்ளவர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (இதைக்கேட்ட ) அபூ ஹுரைரா (ரலி)அவர்கள் உங்களில் எவருக்கு முக வெண்மையை நீளமாக்கிக்கொள்ள முடியுமோ அவர் அதை செய்து கொள்ளட்டும் என்பதாக கூறினார்கள்.
ஆதாரம் :-புகாரி , முஸ்லிம்
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வுளு செய்வதற்காக தண்ணீரை அழைத்து தன் இரு கைகளையும் முழங்கையை விடவும் அதிகமாக்கி கழுவினார்கள், இரு கால்களையும் கழுவும் போது கரண்டைக்காலை விடவும் அதிகமாக்கி கெண்டைக்கால் வரையும் அதிகமாக்கி கழுவினார்கள், ஏன் இப்படிக் கழுவுகின்றீர்கள் என நான் கேட்டேன்? அதற்கு இது (மறுமையில்)ஆபரணம் அணியப்படும் இடம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தாக அபூ ஸுர்ஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்:-அஹ்மத்
19- தண்ணீரில் வீண் விரயம் செய்யக்கூடாது.
நபி(ஸல்) அவர்கள் நாலு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர்; அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர் அளவைக்கொண்டு வுளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
நபி(ஸல்) அவர்கள் நாலு அல்லது ஐந்து முறை இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர்; அளவைக்கொண்டு குளித்திருக்கின்றார்கள், இரண்டு கையினால் அள்ளக்கூடிய தண்ணீர் அளவைக்கொண்டு வுளு செய்திருக்கின்றார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
20-ஒவ்வொரு உறுப்புக்களையும் கழுவும் போது சில குறிப்பிட்ட துஆக்கள் ஓதுவதற்கு சரியான ஆதாரமில்லை.
21-வுளு செய்த பின் ஓதுமு; துஆ.
உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் வுளு செய்துவிட்டு பின்பு
உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் வுளு செய்துவிட்டு பின்பு
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம்
யார் வுளு செய்து முடிந்ததும்
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِـحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَإِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوْبُ إِلَيِكَ
என்று ஓதுகின்றாரோ அதை ஒரு துண்டில் எழுதப்பட்டு அதில் முத்திரையிடப்படும், மறுமை நாள் வரைக்கும் அதை உடைக்கப்படமாட்டாது என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:-தப்ராணி,அமலுல் யஃமி வல்லைலா லிஇப்னிஸ்ஸுன்னி.
நன்றி : தமிழி
நன்றி : தமிழி
Saturday, July 15, 2006
மல ஜலம் கழிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்
மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்கள் என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்ட போது, ஆம்! மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்)விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம் :- முஸ்லிம்
அன்புள்ள சகோதரர்களே? சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.மல ஜலம் கழிக்கும் முறைகள் பின்வருமாறு
1- கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது.
நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- நஸாயி
2-கட்டடத்திற்குள் கிப்பலாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.ஒரு நாள் ஹஃப்ஸா (ரலி)அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்- திர்மிதி
3-மல ஜல கூடத்திற்குள் நுளையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث
அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள் - இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
4- கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக)செல்வார்கள். ஆதாரம்- அபூதாவூத்
நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். ஆதாரம்; -திர்மிதி,அபூதாவூத்
5- வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் - அபூதாவூத், நஸாயி
6- கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும,; அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.
பரிசுத்தமாக இருப்பதயே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9-108)
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமர்ந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். ஆதாரம்-நஸாயி
7- மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டயையும் கொண்டு வந்தேன,; இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு விட்டயை(பார்த்து இது)அசுத்தமானதென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்-திர்;மிதி
8- உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் -நஸாயி
9-நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ஆதாரம் -திர்;மிதி, அபூதாவூத்
10- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, நிழல்(போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
11-குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- அபூதாவூத்
வுளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம்-அஹ்மத்
12- தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
வுளு செய்யக்கூடிய, அல்லது குழிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆதாரம்-நஸாயி
13-மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம்செய்தார்கள்) ஆதாரம்-நஸாயி
14- சிறு நீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. ஆதாரம்-நஸாயி
15- சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்)பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் -நஸாயி
16-கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
غُفْرَانَكَ
குஃப்ரான(க்)கஆதாரம்:-திர்மிதி
பொருள் :- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.
அன்புள்ள சகோதரர்களே? சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.மல ஜலம் கழிக்கும் முறைகள் பின்வருமாறு
1- கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது.
நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- நஸாயி
2-கட்டடத்திற்குள் கிப்பலாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.ஒரு நாள் ஹஃப்ஸா (ரலி)அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்- திர்மிதி
3-மல ஜல கூடத்திற்குள் நுளையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث
அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள் - இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
4- கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக)செல்வார்கள். ஆதாரம்- அபூதாவூத்
நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். ஆதாரம்; -திர்மிதி,அபூதாவூத்
5- வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம் - அபூதாவூத், நஸாயி
6- கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும,; அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.
பரிசுத்தமாக இருப்பதயே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9-108)
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமர்ந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். ஆதாரம்-நஸாயி
7- மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டயையும் கொண்டு வந்தேன,; இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு விட்டயை(பார்த்து இது)அசுத்தமானதென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்-திர்;மிதி
8- உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறு நீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் -நஸாயி
9-நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். ஆதாரம் -திர்;மிதி, அபூதாவூத்
10- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
மனிதர்கள் களைப்பாறும் இடம், நடை பாதை, நிழல்(போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-அபூதாவூத்
11-குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஆதாரம்- அபூதாவூத்
வுளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள். ஆதாரம்-அஹ்மத்
12- தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
வுளு செய்யக்கூடிய, அல்லது குழிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆதாரம்-நஸாயி
13-மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம்செய்தார்கள்) ஆதாரம்-நஸாயி
14- சிறு நீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் சிறு நீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. ஆதாரம்-நஸாயி
15- சிறு நீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்)பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறு நீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள்செல்லித் திரிபவராக இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் -நஸாயி
16-கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்.
غُفْرَانَكَ
குஃப்ரான(க்)கஆதாரம்:-திர்மிதி
பொருள் :- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.
Saturday, July 08, 2006
பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
பள்ளிவாயில்கள் அல்லாஹ்வுக்கே உரியன
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)
ஒருவர் அல்லாஹ்வுக்காக வணங்குமிடம் ஒன்றை உருவாக்கினால் அவருக்காக சொர்க்கத்தில் அது போன்றதை (வீட்டை) உருவாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத்: உஸ்மான்(ரலி)
பள்ளிக்கு வரும்போது அமைதியைக் கடைபிடித்தல்
நீங்கள் இகாமத்தை செவியுற்றால் தொழுகைக்காக நடந்து வாருங்கள்;. (அப்போது) அமைதியையும், கண்ணியத்தையும் கடைபிடியுங்கள். வேகமாக ஓடி வராதீர்கள். (ஜமாஅத்தில்) உங்களுக்கு கிடைத்ததை தொழுங்கள், உங்களுக்குத் தவறியதை நிறைவேற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)
அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்த்துகளை உயர்த்துகின்ற காரியத்தை அறிவிக்கட்டுமா? கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளு செய்து பள்ளிக்கு அதிகமாக நடந்து வருவது, (ஒரு) தொழுகைக்கு பிறகு மறு தொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறிவிட்டு இதுதான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தா, முஸ்லிம், திர்மிதி: அபுஹூரைரா(ரலி)
பள்ளியில் நுழையும் போது
உங்களில் ஒருவர் பள்ளியில் நுழையும்போது 'அல்லாஹூம் மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக்க' (பொருள்: இறைவா! உனது அருள் வாயில்களை எனக்கு திறப்பாயாக!) என்று கூறட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூஎஸைத்(ரலி)
பள்ளியில் நுழையும் போது வலது காலை வைத்து நுழைய வேண்டும். இடது காலை வைத்து வெளியேற வேண்டும். புகாரி : இப்னு உமர்(ரலி)
பள்ளியில் நுழைந்ததும்
உங்களில் எவரேனும் பள்ளிவாயிலுக்கு சென்றால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம். புகாரி, முஸ்லிம், அஹமத், நஸாயி: ஆபூகதாதா(ரலி)
தொழுகைக்காக காத்திருப்பவரின் சிறப்பு
தொழுத இடத்திலேயே ஒளூ முறியாத நிலையில் அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பவருக்கு யாஅல்லாஹ்! இவரை நீ மன்னிப்பாயாக! இவருக்கு நீ அருள்புரிவாயாக! என மலக்குகள் பிராத்திக்கின்றனர். புகாரி, முஅத்தா: அபூஹூரைரா (ரலி)
பள்ளிக்கு துர்வாடையுடன் வரக்கூடாது
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நமது பள்ளிக்கு வரவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் அனைத்தின் மூலமும் மலக்குகள் துன்புறுகிறார்கள். புகாரி, முஸ்லிம்: ஜாபிர்(ரலி)
ஒரே இடத்தை நிரந்தரமாக்கக் கூடாது
ஒட்டகம் வழக்கமாக்கிக் கொள்வது போல் பள்ளியில் (தான் தொழுவதற்கென) எந்த ஒரு இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அஹ்மத்: அப்துர் ரஹ்மான் பின் ஷிஃப்லி(ரலி)
பாங்கு கூறிய பின் காரணமின்றி வெளியேறுவது
பாங்கு கூறப்பட்ட பின் நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் (பள்ளியை விட்டு) வெளியேற வேண்டாம், திரும்ப வருபவரைத் தவிர. முஅத்தா: ஸயீத் பின் முஸய்யப்(ரலி)
சத்தத்தை உயர்த்துதல்
நான் மஸ்ஜிதில் நின்று கொண்டிருந்தேன், என்னை ஒருவர் பிடித்தார் (நான் திரும்பியபோது) உமர் (ரலி) அவர்களைப் பார்த்தேன். நீர் போய் அ(ங்கு பேசிக் கொண்டிருந்த)வ் விருவரையும் அழைத்துவாரும் என்று அவர்கள் கூற நான் அவர்களை அழைத்து வந்தேன் (அவர்களை) நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் எனக்கேட்டார்கள். அவர்கள் தாயிஃபிலிருந்து வருகிறோம் என்றனர், நீங்கள் இருவரும் இவ்வூர்வாசிகளாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் பேசியதற்காக உங்களை தண்டித்திருப்பேன் என்று உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள். புகாரி: ஸாயிப் இப்னு யஸீத்(ரலி)
பள்ளியின் சுத்தம்
பள்ளியில் துப்புவது தவறாகும், அதற்கு பரிகாரம் அதை போக்குவதாகும். முஸ்லிம்: அனஸ்(ரலி)
பள்ளியில் இழந்த (தொலைந்த) பொருளைத் தேடுதல்
எவரேனும் பள்ளியில் காணமல் போனதைத் (சத்தமாக) தேடக் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் உனக்கு திருப்பித் தராமல் இருப்பானாக! பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை எனக் கூறட்டும். முஸ்லிம்: ஆபூஹூரைரா(ரலி)
பள்ளியில் வியாபாரம்
பள்ளியில் (பொருள்) விற்பவரையோ, வாங்குபவரையோ நீங்கள் கண்டால் (அவரிடம்) உனது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும் எனக் கூறுங்கள். திர்மிதி: ஆபூஹூரைரா(ரலி)
ஜூம்மா உரையின் போது அமரும் முறை
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸ்லிம்: ஜாபிர்(ரலி)
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினாலும் நீயும் வீணான காரியத்தில் ஈடுப்பட்டவனாவாய். (ஜூம்மாவின் பலன் கிடைக்காமல் போய்விடும்) முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)
பள்ளியில் கவிதைப் பாடுதல்
பள்ளியில் கவிதை பாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அபூதாவூத்: அம்ர் பின் ஷூஐப்(ரலி)
பள்ளியில் உறங்குதல்
நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக் கொண்டு மல்லாந்து உறங்குவதை நான் கண்டேன். திர்மிதி: அப்துல்லா பின் ஜைது பின் ஆஸிம்(ரலி)
நாங்கள் வாலிபர்களாக இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் பேசிக் கொண்டிருப்போம், உறங்குவோம். அஹ்மத்: இப்னு உமர்(ரலி)
பள்ளியில் கைதிகளை கட்டி வைக்கலாமா? பள்ளிக்குள் முஸ்லிமல்லாதோர் வரலாமா?
நஜ்து பிரதேசத்தை நோக்கி சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தை சேர்ந்த ஸூமாமா பின் அஸால் என்பவரை பிடித்து வந்து பள்ளிவாயிலில் உள்ள ஒரு தூணில் கட்டிவைத்தார்கள்... நபி(ஸல்) அவர்கள் ஸூமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். அவர் பள்ளிக்கு அருகில் இருந்த குட்டைக்குச் சென்று குளித்தார்கள். பின்னர் பள்ளிக்கு வந்து வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். புகாரி: அபூஹூரைரா(ரலி) (ஹதிஸின் சுருக்கம்)
பள்ளியில் கூடாரம் அமைத்து நோயாளியை தங்க வைத்தல்
அகழ் போரின் போது ஸஃது பின் முஆத்(ரலி) அவர்கள் கை நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கேற்ப பள்ளியிலேயே அவருக்காக கூடாரம் ஒன்றை நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம் ) புகாரி: ஆயிஷா(ரலி)
பள்ளியில் உண்ணுதல் பருகுதல்
பள்ளியில் உண்ணலாம், பருகலாம். இப்னுமாஜா: அப்துல்லா பின் ஹாரிஸ்(ரலி)
பெண்கள் பள்ளிக்கு வந்துத் தொழுதல்
அல்லாஹ்வின் பள்ளிவாயிலில் (தொழக்கூடாது என) அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை தடை செய்யாதீர்கள். அஹ்மத், அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)
பள்ளிக்கு வரும் பெண்கள், கணவன் - பெற்றோர் அனுமதி பெற வேண்டும்
பெண்கள் பள்ளிக்கு வர உங்களிடம் அனுமதி கோரினால் பள்ளிக்கு வருவதை நீங்கள் தடை செய்யாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். முஸ்லிம்: இப்னு உமர்(ரலி)
பெண்கள் பள்ளிக்கு நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது
(பெண்களே!) உங்களில் எவரும் பள்ளிக்கு வந்தால் நறுமணம் பூசவேண்டாம். முஸ்லிம்: ஜைனப் (ரலி)
பள்ளியை விட்டும் வெளியேறும் போது
அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்) என கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூ உஸைத் (ரலி)
அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன. எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)
ஒருவர் அல்லாஹ்வுக்காக வணங்குமிடம் ஒன்றை உருவாக்கினால் அவருக்காக சொர்க்கத்தில் அது போன்றதை (வீட்டை) உருவாக்குகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்மத்: உஸ்மான்(ரலி)
பள்ளிக்கு வரும்போது அமைதியைக் கடைபிடித்தல்
நீங்கள் இகாமத்தை செவியுற்றால் தொழுகைக்காக நடந்து வாருங்கள்;. (அப்போது) அமைதியையும், கண்ணியத்தையும் கடைபிடியுங்கள். வேகமாக ஓடி வராதீர்கள். (ஜமாஅத்தில்) உங்களுக்கு கிடைத்ததை தொழுங்கள், உங்களுக்குத் தவறியதை நிறைவேற்றுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸாயி, அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)
அல்லாஹ் தவறுகளை மன்னித்து, அந்தஸ்த்துகளை உயர்த்துகின்ற காரியத்தை அறிவிக்கட்டுமா? கஷ்டமான நேரத்தில் முழுமையாக ஒளு செய்து பள்ளிக்கு அதிகமாக நடந்து வருவது, (ஒரு) தொழுகைக்கு பிறகு மறு தொழுகையை எதிர்பார்ப்பது என்று கூறிவிட்டு இதுதான் மாபெரும் போராட்டம் என மும்முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஅத்தா, முஸ்லிம், திர்மிதி: அபுஹூரைரா(ரலி)
பள்ளியில் நுழையும் போது
உங்களில் ஒருவர் பள்ளியில் நுழையும்போது 'அல்லாஹூம் மஃப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக்க' (பொருள்: இறைவா! உனது அருள் வாயில்களை எனக்கு திறப்பாயாக!) என்று கூறட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூஎஸைத்(ரலி)
பள்ளியில் நுழையும் போது வலது காலை வைத்து நுழைய வேண்டும். இடது காலை வைத்து வெளியேற வேண்டும். புகாரி : இப்னு உமர்(ரலி)
பள்ளியில் நுழைந்ததும்
உங்களில் எவரேனும் பள்ளிவாயிலுக்கு சென்றால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் உட்கார வேண்டாம். புகாரி, முஸ்லிம், அஹமத், நஸாயி: ஆபூகதாதா(ரலி)
தொழுகைக்காக காத்திருப்பவரின் சிறப்பு
தொழுத இடத்திலேயே ஒளூ முறியாத நிலையில் அடுத்த தொழுகைக்காகக் காத்திருப்பவருக்கு யாஅல்லாஹ்! இவரை நீ மன்னிப்பாயாக! இவருக்கு நீ அருள்புரிவாயாக! என மலக்குகள் பிராத்திக்கின்றனர். புகாரி, முஅத்தா: அபூஹூரைரா (ரலி)
பள்ளிக்கு துர்வாடையுடன் வரக்கூடாது
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை ஒருவர் சாப்பிட்டால் நமது பள்ளிக்கு வரவேண்டாம். ஏனெனில் மனிதர்கள் துன்புறும் அனைத்தின் மூலமும் மலக்குகள் துன்புறுகிறார்கள். புகாரி, முஸ்லிம்: ஜாபிர்(ரலி)
ஒரே இடத்தை நிரந்தரமாக்கக் கூடாது
ஒட்டகம் வழக்கமாக்கிக் கொள்வது போல் பள்ளியில் (தான் தொழுவதற்கென) எந்த ஒரு இடத்தையும் நிரந்தரமாக்கிக் கொள்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அஹ்மத்: அப்துர் ரஹ்மான் பின் ஷிஃப்லி(ரலி)
பாங்கு கூறிய பின் காரணமின்றி வெளியேறுவது
பாங்கு கூறப்பட்ட பின் நயவஞ்சகர்களைத் தவிர வேறு யாரும் (பள்ளியை விட்டு) வெளியேற வேண்டாம், திரும்ப வருபவரைத் தவிர. முஅத்தா: ஸயீத் பின் முஸய்யப்(ரலி)
சத்தத்தை உயர்த்துதல்
நான் மஸ்ஜிதில் நின்று கொண்டிருந்தேன், என்னை ஒருவர் பிடித்தார் (நான் திரும்பியபோது) உமர் (ரலி) அவர்களைப் பார்த்தேன். நீர் போய் அ(ங்கு பேசிக் கொண்டிருந்த)வ் விருவரையும் அழைத்துவாரும் என்று அவர்கள் கூற நான் அவர்களை அழைத்து வந்தேன் (அவர்களை) நீங்கள் இருவரும் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் எனக்கேட்டார்கள். அவர்கள் தாயிஃபிலிருந்து வருகிறோம் என்றனர், நீங்கள் இருவரும் இவ்வூர்வாசிகளாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் பள்ளியில் பேசியதற்காக உங்களை தண்டித்திருப்பேன் என்று உமர்(ரலி)அவர்கள் கூறினார்கள். புகாரி: ஸாயிப் இப்னு யஸீத்(ரலி)
பள்ளியின் சுத்தம்
பள்ளியில் துப்புவது தவறாகும், அதற்கு பரிகாரம் அதை போக்குவதாகும். முஸ்லிம்: அனஸ்(ரலி)
பள்ளியில் இழந்த (தொலைந்த) பொருளைத் தேடுதல்
எவரேனும் பள்ளியில் காணமல் போனதைத் (சத்தமாக) தேடக் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் உனக்கு திருப்பித் தராமல் இருப்பானாக! பள்ளிகள் இதற்காகக் கட்டப்படவில்லை எனக் கூறட்டும். முஸ்லிம்: ஆபூஹூரைரா(ரலி)
பள்ளியில் வியாபாரம்
பள்ளியில் (பொருள்) விற்பவரையோ, வாங்குபவரையோ நீங்கள் கண்டால் (அவரிடம்) உனது வியாபாரத்தில் அல்லாஹ் வெற்றியைத் தராமல் போகட்டும் எனக் கூறுங்கள். திர்மிதி: ஆபூஹூரைரா(ரலி)
ஜூம்மா உரையின் போது அமரும் முறை
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். முஸ்லிம்: ஜாபிர்(ரலி)
இமாம் ஜூம்ஆ உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது உன் அருகில் இருப்பவனை நோக்கி பேசாமல் இரு என்று நீ கூறினாலும் நீயும் வீணான காரியத்தில் ஈடுப்பட்டவனாவாய். (ஜூம்மாவின் பலன் கிடைக்காமல் போய்விடும்) முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி)
பள்ளியில் கவிதைப் பாடுதல்
பள்ளியில் கவிதை பாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அபூதாவூத்: அம்ர் பின் ஷூஐப்(ரலி)
பள்ளியில் உறங்குதல்
நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக் கொண்டு மல்லாந்து உறங்குவதை நான் கண்டேன். திர்மிதி: அப்துல்லா பின் ஜைது பின் ஆஸிம்(ரலி)
நாங்கள் வாலிபர்களாக இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளியில் பேசிக் கொண்டிருப்போம், உறங்குவோம். அஹ்மத்: இப்னு உமர்(ரலி)
பள்ளியில் கைதிகளை கட்டி வைக்கலாமா? பள்ளிக்குள் முஸ்லிமல்லாதோர் வரலாமா?
நஜ்து பிரதேசத்தை நோக்கி சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தை சேர்ந்த ஸூமாமா பின் அஸால் என்பவரை பிடித்து வந்து பள்ளிவாயிலில் உள்ள ஒரு தூணில் கட்டிவைத்தார்கள்... நபி(ஸல்) அவர்கள் ஸூமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்றார்கள். அவர் பள்ளிக்கு அருகில் இருந்த குட்டைக்குச் சென்று குளித்தார்கள். பின்னர் பள்ளிக்கு வந்து வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார். புகாரி: அபூஹூரைரா(ரலி) (ஹதிஸின் சுருக்கம்)
பள்ளியில் கூடாரம் அமைத்து நோயாளியை தங்க வைத்தல்
அகழ் போரின் போது ஸஃது பின் முஆத்(ரலி) அவர்கள் கை நரம்பில் தாக்கப்பட்டார்கள். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கேற்ப பள்ளியிலேயே அவருக்காக கூடாரம் ஒன்றை நபி(ஸல்)அவர்கள் ஏற்படுத்தினார்கள். (ஹதீஸ் சுருக்கம் ) புகாரி: ஆயிஷா(ரலி)
பள்ளியில் உண்ணுதல் பருகுதல்
பள்ளியில் உண்ணலாம், பருகலாம். இப்னுமாஜா: அப்துல்லா பின் ஹாரிஸ்(ரலி)
பெண்கள் பள்ளிக்கு வந்துத் தொழுதல்
அல்லாஹ்வின் பள்ளிவாயிலில் (தொழக்கூடாது என) அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை தடை செய்யாதீர்கள். அஹ்மத், அபூதாவூத்: அபூஹூரைரா(ரலி)
பள்ளிக்கு வரும் பெண்கள், கணவன் - பெற்றோர் அனுமதி பெற வேண்டும்
பெண்கள் பள்ளிக்கு வர உங்களிடம் அனுமதி கோரினால் பள்ளிக்கு வருவதை நீங்கள் தடை செய்யாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன். முஸ்லிம்: இப்னு உமர்(ரலி)
பெண்கள் பள்ளிக்கு நறுமணம் பூசிக் கொண்டு வரக்கூடாது
(பெண்களே!) உங்களில் எவரும் பள்ளிக்கு வந்தால் நறுமணம் பூசவேண்டாம். முஸ்லிம்: ஜைனப் (ரலி)
பள்ளியை விட்டும் வெளியேறும் போது
அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஃபழ்லிக்க (இறைவா! உன் அருளை உன்னிடம் கேட்கிறேன்) என கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்: அபூ உஸைத் (ரலி)
Subscribe to:
Posts (Atom)